search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sudarsan patnaik"

    ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு மணல் சிற்பம் வரைந்து தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். #Viratkohli #SudarsanPatnaik
    லக்னோ:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களிலும் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.  

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று நடைபெறவுள்ள தீபாவளி விழாவில் பங்கேற்க சுதர்சன் பட்நாயக் சென்றுள்ளார். அங்குள்ள மைதானத்தில் அவர் பேட் மற்றும் பந்துடன் கூடிய விராட் கோலி மணல் சிற்பத்தை வரைந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அசத்தியுள்ளார். 

    இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான விராட் கோலி, இதுவரை 73 டெஸ்ட் போட்டிகளில் 24 சதம், 19 அரைசதங்களுடன் 6,331 ரன்கள் குவித்துள்ளார். 216 ஒருநாள் போ்டடியில் 38 சதங்கள், 48 அரைசதங்களுடன் 10,232 ரன்கள் குவித்துள்ளார். 62 டி20 போட்டியில் 18 அரைசதங்களுடன் 2,102 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Viratkohli #SudarsanPatnaik
    பசுமையை வலியுறுத்தும் வகையில் பிரபல மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் கடவுள் விநாயகரின் 20 அடி உருவம் பதிந்த மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். #SudarsanPattnaik #LordGanesh
    புவனேஷ்வர் :

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களிலும் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.
     
    இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியான இன்று பசுமையை வலியுறுத்தும் வகையில் பிரபல மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் கடவுள் விநாயகரின் 20 அடி உருவம் பதிந்த மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். 



    விநாயகரின் மணல் சிற்பத்தை வரைந்து அதன் கீழே பசுமையை காப்போம், பிளாஸ்டிக் குப்பைகளை வெல்வோம் எனவும் மண்ணில் எழுதியுள்ளார். 

    புரி கடற்கரையில் அவர் வரைந்துள்ள விநாயகரின் மணற்சிற்பம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. #SudarsanPattnaik #LordGanesh
    ×