என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- இந்த போட்டியில் ஷிவம் துபே 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும் எல்லீஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 18.4 ஓவரில் 126 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் (1-0) முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் 2019-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய ஆடும் லெவனில் ஷிவம் துபே இருந்து முதல் முறையாக இந்தியா தோல்வியை தழுவியுள்ளது.
2019-ம் ஆண்டில் இருந்து ஷிவம் துபே 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 3 போட்டிகள் முடிவில்லாமல் போனது. 56 போட்டிகள் வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு தோல்வி அடங்கும். துபேவின் தொடர் வெற்றியை ஆஸ்திரேலிய அணி முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.
- அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்ஷ் 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- இந்திய தரப்பில் வருண், குல்தீப், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரில் சுப்மன் கில் 6 பந்துகள் சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்தார். அதனை தொடர்ந்து 10 பந்துகளில் 5 எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 2 ரன்னிலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் திலக் வர்மா டக் அவுட்டிலும் நடையை கட்டினார்.
இதனால் பவர் பிளேயில் இந்திய அணி 40 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து அபிஷேக் சர்மாவும் அக்சர் படேலும் நிதானமாக விளையாடினர். இதில் அக்சர் படேல் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
ஹர்ஷித் ராணா - அபிஷேக் சர்மா ஜோடி நல்ல பாட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய அபிஷேக் அரைசதம் அடித்து அசத்தினார். ராணா 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த துபே 4 ரன்னில் வெளியேறினார்.
ஒரு முனையில் போராடிய அபிஷேக் 68 ரன்னில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 18.4 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும் எல்லீஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்திய அணியில் அபிஷேக் சர்மா, ராணா இவர்களை தவிர மற்ற எந்த வீரரும் இரட்டை இலக்க ரன்களை எடுக்கவில்லை.
இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட்- மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 28 ரன்கள் இருக்கும் போது டிராவிஸ் ஹெட் அவுட் ஆனார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்ஷ் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் குல்தீப் யாதவின் ஒரே ஓவரில் 20 ரன்கள் குவித்து அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து டிம் டேவிட் 1, இங்கிலீஸ் 20, என விக்கெட்டுகளை இழந்தனர். அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 14, ஷார்ட் 0 என அடுத்தடுத்து பும்ரா வீசிய பந்தில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் வருண், குல்தீப், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது ஒருநாள் போட்டி நவம்பர் 2-ந் தேதி நடக்கவுள்ளது.
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அவரது புகைப்படம் மற்றும் அவரது தந்தையுடன் வெற்றியை கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான எம் எஸ் தோனியிடம் ஜெமிமா வெற்றி கோப்பையை வாங்கும் சிறிய வயது புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆட்டத்தை இறுதிவரை கொண்டு சென்று முடிப்பதில் வல்லவரான எம்எஸ் தோனியுடன் மகளிர் அணியின் பினிஷர் என ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- சஞ்சு சாம்சன் 2 ரன்னிலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் திலக் வர்மா டக் அவுட் ஆனார்கள்.
- ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரில் சுப்மன் கில் 6 பந்துகள் சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்தார். அதனை தொடர்ந்து 10 பந்துகளில் 5 எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 2 ரன்னிலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் திலக் வர்மா டக் அவுட்டிலும் நடையை கட்டினார்.
இதனால் பவர் பிளேயில் இந்திய அணி 40 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து அபிஷேக் சர்மாவும் அக்சர் படேலும் நிதானமாக விளையாடினர். இதில் அக்சர் படேல் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹர்ஷித் ராணா களமிறங்கினார். இருவரும் நல்ல பாட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய அபிஷேக் அரைசதம் அடித்து அசத்தினார். ராணா 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த துபே 4 ரன்னில் வெளியேறினார்.
ஒரு முனையில் போராடிய அபிஷேக் 68 ரன்னில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 18.4 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும் எல்லீஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்திய அணியில் அபிஷேக் சர்மா, ராணா இவர்களை தவிர மற்ற எந்த வீரரும் இரட்டை இலக்க ரன்களை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- சஞ்சு சாம்சன் 2 ரன்னிலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் திலக் வர்மா டக் அவுட் ஆனார்கள்.
- ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரில் சுப்மன் கில் 6 பந்துகள் சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்தார். அதனை தொடர்ந்து 10 பந்துகளில் 5 எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 2 ரன்னிலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் திலக் வர்மா டக் அவுட்டிலும் நடையை கட்டினார்.
இதனால் பவர் பிளேயில் இந்திய அணி 40 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அபிஷேக் சர்மாவும் அக்சர் படேலும் விளையாடி வருகின்றனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 ஓவர்களில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
- இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்தப் போட்டியில், கேப்டன்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் மிட்செல் மார்ஷ் உட்பட இரு அணி வீரர்களும் தங்களது கைகளில் கருப்புப் பட்டை அணிந்து களமிறங்கியுள்ளனர்.
ஏனென்றால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயது இளம் கிரிக்கெட் வீரரான பென் ஆஸ்டின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவரது குடும்பத்தினருக்குத் தங்கள் இரங்கலைத் தெரிவிக்கும் வகையிலும் இரு அணி வீரர்களும் கருப்புப் பட்டை அணிந்து விளையாடுகின்றனர்.
மெல்போர்னைச் சேர்ந்த 17 வயது இளம் வீரரான பென் ஆஸ்டின், ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரது கழுத்துப் பகுதியில் அதிவேகமாகத் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, 2 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த போட்டியில் மட்டுமில்லாமல் நேற்று நவி மும்பையில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும், ஆஸ்திரேலிய மகளிர் அணி வீராங்கனைகள் பென் ஆஸ்டினின் நினைவாகக் கருப்புப் பட்டைகளை அணிந்து விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது
- இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று நடக்கிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை (1-2) இழந்தது. அடுத்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
- இந்த இலக்கை நிர்ணித்த போது பாதி வேலை முடிந்து விட்டது என்று தான் நினைத்தேன்.
- தோல்வி அடைந்து பேசும் இடத்தில் நான் இருப்பது கொஞ்சம் வினோதமாக தான் இருக்கின்றது.
மும்பை:
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி இந்தியாவிடம் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 339 ரன்களை இலக்காக நிர்ணயித்தும் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலிசா ஹெலி,
இந்த போட்டி மிகவும் அற்புதமாக இருந்தது. ஆனால் இந்த தோல்விக்கு நாங்கள் தான் காரணம் எங்களுடைய அணியின் பேட்டிங்கை நாங்கள் சிறப்பாக முடிக்கவில்லை. இதே போல் எங்களுடைய பந்துவீச்சும் சிறப்பாக இல்லை. சில கேட்ச்களையும் நாங்கள் தவறவிட்டோம்.
இறுதியில் தோல்வியை தழுவியது மிகவும் ஏமாற்றமாக இருக்கின்றது. பல வாய்ப்புகளை உருவாக்கினோம். ஆனால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லை. அதற்கு நானும் ஒரு காரணம் என்று தான் சொல்வேன்.
இந்த இலக்கை நிர்ணித்த போது பாதி வேலை முடிந்து விட்டது என்று தான் நினைத்தேன். கூடுதலாக சில ரன்ளை அடித்திருக்க வேண்டும். இந்தியா வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டார்கள். நெருக்கடியான சமயத்தில் அபாரமாக பேட்டிங் செய்து வெற்றியை தாண்டி விட்டார்கள்.
தோல்வி அடைந்து பேசும் இடத்தில் நான் இருப்பது கொஞ்சம் வினோதமாக தான் இருக்கின்றது. இனி அடுத்த உலக கோப்பை நோக்கி திட்டங்களை தீட்ட வேண்டியது தான். அடுத்த உலகக்கோப்பை நிச்சயம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால் கண்டிப்பாக அடுத்த உலகக் கோப்பையில் நான் விளையாட மாட்டேன்.
மகளிர் கிரிக்கெட் விளையாடுவதில் எங்களுக்கு பெருமை . ஆனால் இந்த போட்டியில் தோல்விக்கு நாங்கள்தான் காரணம். கண்டிப்பாக எங்கள் தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம்.
என்று அலிசா ஹெலி தெரிவித்துள்ளார்.
- ஜெமிமா மற்றும் ஹாமன்பிரீத் கவுர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என சச்சின் கூறினார்.
- ஆஸ்திரேலியா போன்ற வலிமையான எதிராளியை எதிர்த்து இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது என கோலி கூறினார்.
மும்பை:
இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்திய தரப்பில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது 3-வது சதத்தை அடித்தார். அட்டகாசமாக ஆடிய அவர் அணியை வெற்றிகரமாக கரைசேர்க்க வித்திட்டார்.
இந்த நிலையில், இந்திய மகளிர் அணிக்கு சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சச்சின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அற்புதமான வெற்றி. முன்னணியில் இருந்து வழிநடத்தியதற்காக ஜெமிமா மற்றும் ஹாமன்பிரீத் கவுர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மா , நீங்கள் பந்தைக் கொண்டு ஆட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தீர்கள். மூவர்ணக் கொடியை உயரே பறக்க விடுங்கள். என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விராட் கோலி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஆஸ்திரேலியா போன்ற வலிமையான எதிராளியை எதிர்த்து இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. ஒரு பெரிய ஆட்டத்தில் ஜெமிமாவின் சிறப்பான ஆட்டம், உண்மையான மன உறுதி, நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் வெளிப்பாடு. சபாஷ் இந்தியா. என தெரிவித்துள்ளார்.
- உலக சாம்பியனான இந்திய அணி 20 ஓவர் போட்டியில் வலுவாக விளங்குகிறது.
- சரிசமமான பலம் கொண்ட அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று நடக்கிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை (1-2) இழந்தது. அடுத்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்ததால் அத்துடன் ஆட்டம் ரத்தானது. சுப்மன் கில் 37 ரன்களுடனும் (20 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் 39 ரன்களுடனும் (24 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று நடக்கிறது.
உலக சாம்பியனான இந்திய அணி 20 ஓவர் போட்டியில் வலுவாக விளங்குகிறது. அண்மையில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் (20 ஓவர்) தோல்வியையே சந்திக்காமல் சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்தது.
இந்திய அணியில் பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே என தரமான வீரர்களுக்கு பஞ்சமில்லை. பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி நல்ல நிலையில் உள்ளனர். ஆசிய கோப்பை தொடரில் தடுமாறிய சூர்யகுமார் யாதவ் முதலாவது ஆட்டத்தில் ஹேசில்வுட், எலிஸ் பந்து வீச்சில் இமாலய சிக்சர் விரட்டி அசத்தினார். இன்றைய ஆட்டத்திலும் அவரிடம் இருந்து ரன் மழையை எதிர்பார்க்கலாம்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு வலுவான அணியை கட்டமைக்க முடிவு செய்துள்ள இந்தியா அதிரடி அணுகுமுறையை கடைபிடிக்க போவதாக அறிவித்துள்ளது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் வேகமாக மட்டையை சுழற்றுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரை கைப்பற்றிய உத்வேகத்துடன் களம் காணும் ஆஸ்திரேலியாவுக்கு உள்ளூர் சூழல் சாதகமான அம்சமாகும். அத்துடன் 90 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் ஆட இருப்பது நிச்சயம் பரவசமூட்டும்.
அந்த அணியில் பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், டிம் டேவிட், மார்கஸ் ஸ்டோனிஸ் என அதிரடி சூரர்கள் அணிவகுத்து நிற்கின்றனர். பந்து வீச்சில் ஹேசில்வுட், நாதன் எலிஸ், சேவியர் பார்லெட் கைகொடுக்கிறார்கள்.
மொத்தத்தில் சரிசமமான பலம் கொண்ட அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. மெல்போர்ன் மைதானத்தில் இதுவரை 6 இருபது ஓவர் போட்டியில் ஆடி இருக்கும் இந்திய அணி 4-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது.
கடந்த ஆட்டத்தை போல் மெல்போர்னிலும் மழை புகுந்து விளையாட வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, அக்ஷர் பட்டேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், டிம் டேவிட், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் பிலிப், சேவியர் பார்லெட், நாதன் எலிஸ், மேத்யூ குனேமேன், ஜோஷ் ஹேசில்வுட்.
இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன்.
- கடவுள் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் கொடுப்பார்.
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்களுடனும் (134 பந்து, 14 பவுண்டரி), அமன்ஜோத் கவுர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். எக்ஸ்டிரா வகையில் 15 வைடு உள்பட 26 ரன்கள் கிடைத்தது.
மகளிர் ஒரு நாள் போட்டி வரலாற்றில் ஒரு அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு (சேசிங்) இது தான். இதற்கு முன்பு இதே உலகக் கோப்பையில் இந்தியாவுக்குஎதிரான லீக்கில் 331 ரன் இலக்கை ஆஸ்திரேலியா துரத்திப்பிடித்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனையை முறியடித்ததுடன், அந்த தோல்விக்கும் இந்தியா சுடச்சுட பதிலடி கொடுத்து இருக்கிறது.
மேலும் மகளிர் உலக கோப்பையில் தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் வீறுநடையும் முடிவுக்கு வந்தது.
இதனிடையே, 127 ரன்கள் திரட்டி ஆட்டநாயகியாக ஜொலித்த இந்திய மிடில் வரிசை பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் வெற்றி பெற்றதும் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்த கண்ணீர் விட்டார்.
இதையடுத்து அவர் பேசுகையில், முதலில் நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எல்லாம் கனவு போல் இருக்கிறது. இந்தியாவை வெற்றி பெறச் செய்வதே எனது எண்ணமாக இருந்தது. கடந்த ஆண்டு உலக கோப்பையில் இருந்து நீக்கப்பட்டேன். அந்த வலி இன்னும் மனதில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அழுதிருக்கிறேன். நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன். கடவுள் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் கொடுப்பார். தன்மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி என்று கூறி நெகிழ்ந்தார்.
- மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு 3-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
- மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 127 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ஜெமிமா ஆட்டநாயகி விருதை வென்றார்.
மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு 3-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், ஐ.சி.சி. உலக கோப்பை வரலாற்றில், நாக் அவுட் போட்டிகளில் முதல் முறையாக 300+ ரன்களை சேஸிங் செய்த அணி என்ற புதிய சாதனையை இந்திய மகளிர் அணி படைத்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 298 ரன்களை நியூசிலாந்து ஆண்கள் சேஸிங் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.






