என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- எலிஸ் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் அதிரயாக விளையாடி 93 பந்தில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- இந்திய தரப்பில் ஸ்ரீ சரணி, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரைஇறுதியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் அலிசா மற்றும் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் களமிறங்கினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட அலிசா 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனால் வீரர்கனைகள் முதல் இந்திய ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இவரது விக்கெட்டை முதலிலேயே வீழ்த்தியதால் அணியின் ஸ்கோர் பெரிய அளவில் வராது என நினைத்த நிலையில் அடுத்த விக்கெட்டுக்கு ஃபோப் லிட்ச்ஃபீல்டுடன் எலிஸ் பெர்ரி ஜோடி சேர்ந்தனர்.
இந்த ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சுலபமாக எதிர் கொண்டு விளையாடினர். குறிப்பாக ஃபோப் லிட்ச்ஃபீல்ட் அதிரயாக விளையாடி சதம் விளாசினார். அவர் 93 பந்தில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் இருந்து பெர்ரி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அவர் 77 ரன்னில் அவுட் ஆனார்.
அதனை தொடர்ந்து ஆஷ்லீ கார்ட்னர் அதிரடியாக விளையாடி அரை சதம் (63) அடித்து ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இதனால் 49.5 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஸ்ரீ சரணி, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
339 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்திய அணி எட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் உள்ளனர்.
- ஆஸ்திரேலியா -இந்தியா அணிகள் ஒருநாள், டி20 தொடரில் விளையாடுகிறது.
- ஆஸ்திரேலியா தொடருக்காக ரோகித் சர்மா 10 கிலோ உடல் எடையை குறைத்தார்.
அடிலெய்டு:
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இந்திய அணி தொடரை இழந்தாலும் தொடரின் நாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
பல விமர்சனங்களுக்கு மத்தியில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆஸ்திரேலிய தொடரில் களமிறங்கினர். விராட் கோலி முதல் 2 போட்டிகளில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதேபோல ரோகித் சர்மாவும் முதல் போட்டியில் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. ஆனால் 2-வது போட்டியில் அரைசதமும் 3-வது போட்டியில் சதமும் அடித்து அசத்தினார்.
இருவரும் 38 வயதை கடந்த போதிலும் உடல்தகுதியுடன் உள்ளதாக முன்னாள் வீரர்கள் முதல் பிற நாட்டு வீரர்கள் வரை புகழாரம் சூட்டினர். இந்த தொடருக்காக ரோகித் சர்மா 10 கிலோ உடல் எடையை குறைத்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எந்த இந்திய வீரர் மிகவும் பொருத்தமானவர் என அந்த அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் ஆடம் கில்கிறிஸ்ட்டின் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரோகித் சர்மா தான் என பதிலளித்தார். அவர் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2025 சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அடைந்தது.
- தலைமை பயிற்சியாளரான சந்திரகாந்த் பண்டிட்-ஐ பதவியில் இருந்து கொல்கந்தா அணி நிர்வாகம் நீக்கியது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2025 சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அடைந்தது. 14 போட்டிகளில் 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது.
இதனால் தலைமை பயிற்சியாளரான சந்திரகாந்த் பண்டிட்-ஐ பதவியில் இருந்து கொல்கந்தா அணி நிர்வாகம் நீக்கியது. அவருக்கு பதிலாக அபிஷேக் நாயரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதன் விருப்பத்தை அபிஷேக் நாயர் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் சர்மா ஏற்கனவே, கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். இவர் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
அவர் பெண்களுக்கான பிரீமியர் லீக்கில் உ.பி. வாரியார்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
- சக பவுலர்கள் வீசிய பவுன்சர் பந்துகளை ஹெல்மெட் அணிந்து கொண்டு பேட்டிங் செய்து பயிற்சி எடுத்துள்ளார்.
- ஒரு பந்து அவருடைய கழுத்துப் பகுதியில் பலமாக பட்டுள்ளது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 17 வயது இளம் வீரர் பென் ஆஸ்டின் பேட்டிங் பயிற்சியின்போது கழுத்தில் பந்துதாக்கி மரணம் அடைந்துள்ளார்.
மெல்போர்னில் கிளப் அணிக்காக விளையாடும் ஆஸ்டின் கடந்த செவ்வாய்க்கிழமை பெர்ன்ட்ரீ கல்லியில் வலை பயிற்சி எடுத்துள்ளார். அப்போது சக பவுலர்கள் வீசிய பவுன்சர் பந்துகளை ஹெல்மெட் அணிந்து கொண்டு பேட்டிங் செய்து பயிற்சி எடுத்துள்ளார். ஆனால் கழுத்து பகுதியை பாதுகாக்கும் அம்சம் அதில் இல்லை.
இந்நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஒரு பந்து அவருடைய கழுத்துப் பகுதியில் பலமாக பட்டுள்ளது. அதனால் சுருண்டு விழுந்த அவரை உடனடியாக அருகில் இருக்கும் மோனஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். அங்கே அவருக்கு 2 நாட்கள் தீவிர சிகிச்சை கொடுத்தப்பட்டது.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. இந்த செய்தி வெளியாகி கிரிக்கெட் உலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் 3 வடிவிலான தொடரில் அடுத்த மாதம் விளையாட உள்ளது.
- இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 14-ந் தேதி தொடங்குகிறது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் விளையாட உள்ளது.
சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்திலும் 2-வது டெஸ்ட் போட்டி கவுத்தாத்தியிலும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் கவுத்தாத்தி மைதானத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் செசன்களில் (இடைவேளை) சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி மதிய உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள கவுத்தாத்தியில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி முதல் செசன் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கி காலை 11:00 மணிக்கு முடிவடையும். அதைத் தொடர்ந்து தேநீர் இடைவேளை எடுக்கப்படும். 2-வது செசன் காலை 11:20 மணி முதல் பிற்பகல் 1:20 மணி வரை நடைபெறும்.
அதன் பிறகு வீரர்கள் மதிய உணவிற்கு இடைவேளை எடுப்பார்கள். மதிய உணவுக்குப் பிறகு முதல் நாளின் மூன்றாவது மற்றும் இறுதி செசன் ஆகும். அது இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் காலை 9:30 மணிக்குத் தொடங்கும், மதிய உணவு காலை 11:30 மணிக்கு நடைபெறும். இரண்டாவது அமர்வு காலை 12:10 மணி முதல் பிற்பகல் 2:10 மணி வரை நடைபெறும், அதைத் தொடர்ந்து தேநீர் இடைவேளை இருக்கும். இறுதி அமர்வு பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெறும், மேலும் பகலில் 90 ஓவர்கள் விளையாட அனுமதிக்க அரை மணி நேரம் நீட்டிக்கப்படலாம்.
- போட்டி நடைபெறும் நவிமும்பையில் மழை பெய்ய லேசான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- ஒருவேளை மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனால் மாற்று நாளான மறுநாளில் நடைபெறும்.
இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில், மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
7 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக வலம் வருகிறது. 2017-ம் ஆண்டு உலகக் கோப்பை அரைஇறுதியில் இந்தியாவிடம் தோற்ற ஆஸ்திரேலிய அணி அதன் பிறகு உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 15 வெற்றியை குவித்து வீறுநடை போடுகிறது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 60 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 49-ல் ஆஸ்திரேலியாவும், 11-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டி நடைபெறும் நவிமும்பையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்ய லேசான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனால் மாற்று நாளான மறுநாளில் நடைபெறும்.
- இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது.
- தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. அதில் அவரது இடது கீழ் விலாஎலும்பு பகுதியில் காயமடைந்திருப்பதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்பிறகு சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தான் குணமடைந்து வருவதாக ஷ்ரேயாஸ் ஐயர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "நான் தற்போது குணமடைந்து வருகிறேன். எனக்குக் கிடைத்த அனைத்து அன்பான வாழ்த்துக்களையும் ஆதரவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது உண்மையிலேயே நிறைய அர்த்தம் தருகிறது. என்னை உங்கள் நினைவுகளில் வைத்திருந்ததற்கு நன்றி" என்று பதிவிட்டுளளார்.
- ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 60 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- 49-ல் ஆஸ்திரேலியாவும், 11-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.
இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில், மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் இரு ஆட்டங்களில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளை பந்தாடியது. அடுத்து தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளிடம் வரிசையாக தோல்வி கண்டு தடுமாறியது. அதன் பிறகு நியூசிலாந்தை வீழ்த்தி அரைஇறுதியை உறுதி செய்தது. வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 7 புள்ளிகள் எடுத்த இந்திய அணி புள்ளி பட்டியலில் 4-வது இடம் பெற்றது.
இந்திய அணியில் பேட்டிங்கில் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா (ஒருசதம், ஒரு அரைசதம் உள்பட 365 ரன்) சூப்பர் பார்மில் இருக்கிறார். ரிச்சா கோஷ், ஹர்லீன் தியோல் ஓரளவு பங்களிப்பை அளிக்கின்றனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ் பேட்டிங்கில் இருந்து கணிசமான ரன் வந்தால் மேலும் வலுப்பெறும். ஒரு சதம் உள்பட 308 ரன்கள் சேர்த்த தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் விலகியது பெருத்த பின்னடைவாகும். அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள ஷபாலி வர்மாவுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது சந்தேகம் தான். பந்து வீச்சில் ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா (15 விக்கெட்), ஸ்ரீ சரனி (11), கிரந்தி கவுட், சினே ராணா கைகொடுக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் சுற்றில் 330 ரன்கள் குவித்த போதிலும் தோல்வியை தழுவிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்றால் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்றிலும் ஒரு சேர ஜொலிக்க வேண்டியது அவசியமாகும். முதல்முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தும் வேட்கையுடன் ஆயத்தமாகும் இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
7 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக வலம் வருகிறது. அந்த அணி 7 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, ஒரு முடிவில்லையுடன் (இலங்கைக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) 13 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தது. 2017-ம் ஆண்டு உலகக் கோப்பை அரைஇறுதியில் இந்தியாவிடம் தோற்ற ஆஸ்திரேலிய அணி அதன் பிறகு உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 15 வெற்றியை குவித்து வீறுநடை போடுகிறது.
ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பலம் வாய்ந்ததாக திகழ்கிறது. பேட்டிங்கில் கேப்டன் அலிசா ஹீலி (2 சதம் உள்பட 294 ரன்), ஆஷ்லி கார்ட்னெர், பெத் மூனி, போபி லிட்ச் பீல்டும், பந்து வீச்சில் அலனா கிங் (13), சோபி மொலினிக்சும் நம்பிக்கை அளிக்கின்றனர்.
ஆல்-ரவுண்டர்கள் அனபெல் சுதர்லாண்ட் (114 ரன், 15 விக்கெட்), ஆஷ்லி கார்ட்னெர் (2 சதம் உள்பட 265 ரன், 7 விக்கெட்) அந்த அணியின் ஆணிவேராக உள்ளனர். தசைபிடிப்பால் கடந்த 2 ஆட்டங்களை தவறவிட்ட கேப்டன் அலிசா ஹீலி உடல் தகுதியை எட்டி இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் நம்பிக்கை அளிக்கும்.
ஏற்கனவே லீக் சுற்றில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை பதம்பார்த்த ஆஸ்திரேலிய அணி அதே உற்சாகத்துடன் வரிந்து கட்டும். மொத்தத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் காணும் இந்திய அணி தக்க பதிலடி கொடுக்குமா? அல்லது மறுபடியும் பணிந்து போகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 60 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 49-ல் ஆஸ்திரேலியாவும், 11-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டி நடைபெறும் நவிமும்பையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்ய லேசான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனால் மாற்று நாளான மறுநாளில் நடைபெறும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ஸ்மிர்தி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், தீப்தி ஷர்மா, சினே ராணா, ரேணுகா சிங் அல்லது ஷபாலி வர்மா, கிரந்தி கவுட், ஸ்ரீ சரனி அல்லது ராதா யாதவ்.
ஆஸ்திரேலியா: அலிசா ஹீலி (கேப்டன்), போபி லிட்ச்பீல்டு, எலிஸ் பெர்ரி, பெத் மூனி, அனபெல் சுதர்லாண்ட், ஆஷ்லி கார்ட்னெர், தாலியா மெக்ராத், சோபி மொலினிக்ஸ், கிம் கார்த், அலனா கிங், மேகன் ஸ்கட்.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 319 ரன்கள் குவித்தது.
- இங்கிலாந்து 194 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது.
இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் மகளிர் உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. இதில் புள்ளிகள் பட்டியலில் 2ஆம் இடம் பிடித்த தென்ஆப்பிரிக்கா- 3ஆம் இடம் பிடித்த இங்கிலாந்து பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க பேட்டராக களம் இறங்கிய கேப்டன் லாரா வால்வார்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 143 பந்தில் 20 பவுண்டரி, 4 சிக்சருடன் 169 ரன்கள் குவித்தார்.
மற்றொரு தொடக்க பேட்டர் தஸ்மின் பிரிட்ஸ் 45 ரன்கள் சேர்த்தார். காப் 33 பந்தில் 42 ரன்களும், ட்ரைசன் ஆட்டமிழக்காமல் 26 பந்தில் 33 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் ஷோபி எக்லெஸ்டோன் 10 ஓவரில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார். லாரன் பெல் 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 320 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் முதலிலேயே இங்கிலாந்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏமி ஜோன்ஸ், டேமி பியூமோன்ட், ஹீதர் நைட் ஆகியோர் ரன்ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த நாட் ஸ்சிவர்-ப்ருன்ட் 64 ரன்களும், அலிஸ் கேப்சி 50 ரன்களும், டேனி வையாட்-ஹோட்ஜ் 34 ரன்களும் அடித்தனர். என்றாலும், கடைநிலை பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து 42.3 ஓவரில் 194 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்கா 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. தென்ஆப்பிரிக்காவின் தொடக்க பந்து வீச்சாளர் காப் 5 விக்கெட் சாய்த்தார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணி 149 ரன்கள் சேர்த்தது.
- வங்கதேச அணியால் 135 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
வங்கதேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க வீரர் அலிக் அதானாஸ் 33 பந்தில் 52 ரன்களும், ஷாய் ஹோப் 36 பந்தில் 55 ரன்களும் விளாசினர்.
பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 எனக் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை பெற்றுள்ளது. ரொமாரியோ ஷெப்பர்டு, அகீல் ஹொசைன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
- தொடக்க பேட்டராக களம இறங்கிய லாரா வால்வார்த் 143 பந்தில் 169 ரன்கள் விளாசினார்.
- தஸ்மின் பிரிட்ஸ் 45 ரன்களும், காப் 42 ரன்களும் சேர்த்தனர்.
இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் மகளிர் உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் புள்ளிகள் பட்டியலில் 2ஆம் இடம் பிடித்த தென்ஆப்பிரிக்கா- 3ஆம் இடம் பிடித்த இங்கிலாந்து பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க பேட்டராக களம் இறங்கிய கேப்டன் லாரா வால்வார்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 143 பந்தில் 20 பவுண்டரி, 4 சிக்சருடன் 169 ரன்கள் குவித்தார்.
மற்றொரு தொடக்க பேட்டர் தஸ்மின் பிரிட்ஸ் 45 ரன்கள் சேர்த்தார். காப் 33 பந்தில் 42 ரன்களும், ட்ரைசன் ஆட்டமிழக்காமல் 26 பந்தில் 33 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் ஷோபி எக்லெஸ்டோன் 10 ஓவரில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார். லாரன் பெல் 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 320 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.
- முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
- 9.4 ஓவருக்கு 97 ரன்கள் குவித்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.
இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடினர். அபிஷேக் 19 ரன்னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து கில்- சூர்யகுமார் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
9.4 ஓவருக்கு 97 ரன்கள் குவித்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி வருகிற 31-ந் தேதி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.






