என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
- தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் மாதம் 16-ந்தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துக்கொள்ளவும், விடுவிக்க விரும்பும் வீரர்களை விடுவிக்கவும் கடந்த 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதன்படி, ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்தும், விடுவித்தும் உள்ளனர். இதனை தொடர்ந்து, அடுத்த சீசனில் தங்களது அணிக்கான பயிற்சியாளர்கள், உதவிப்பயிற்சியாளர்கள் மற்றும் புதிய கேப்டன்களை தேர்வு செய்யும் பணியில் அணி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், அடுத்த ஆண்டு ஐ.பி.எல். சீசனில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) தொடருவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு சீசன்களாக சன்ரைசர்ஸ் அணியை பேட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சமீபத்தில் நடந்த மகளிர் உலக கோப்பையை இந்தியா வென்றது.
- ஸ்மிருதி மந்தனாவுக்கு நவம்பர் 20-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையை சேர்ந்த 29 வயதாகும் இடது கை பேட்டரான ஸ்மிருதி மந்தனா இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாகவும், துணை கேப்டனாகவும் இருந்து வருகிறார். இவருக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
சமீபத்தில் நடந்த மகளிர் உலக கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் உலக கோப்பையை தனது கையில் டாட்டூவாக ஸ்மிருதி மந்தனா போட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே ஸ்மிருதி மந்தனாவும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் நவம்பர் 20-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பாகிஸ்தானுக்கும் அதன் கிரிக்கெட் வாரியத்திற்கும் ஒரு பெருமையான தருணம்.
- நமது இளம் வீரர்கள் அற்புதமாக விளையாடினார்கள்
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார் டி20 போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்திய நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஷின் நக்வி தனது எக்ஸ் பக்கத்தில் இந்த இளம் பாகிஸ்தான் அணியை பாராட்டி பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.
மொஷின் நக்வி தனது எக்ஸ் பக்கத்தில், பாகிஸ்தானுக்கும் அதன் கிரிக்கெட் வாரியத்திற்கும் இன்று என்ன ஒரு பெருமையான தருணம்! எங்கள் பாகிஸ்தான் அணி 13.2 ஓவர்களில் இலக்கை துரத்தி, இந்தியா ஏ அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இது தோஹாவில் நடந்த ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் அச்சமற்ற மற்றும் மறக்க முடியாத செயல்திறன். நமது இளம் வீரர்கள் அற்புதமாக விளையாடினார்கள். பாகிஸ்தானின் எதிர்காலம் பிரகாசமாக ஜொலிக்கிறது. தேசத்திற்கு வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.
- இந்தியாவின் தோல்விக்குத் தற்கால பேட்ஸ்மேன்களின் டெக்னிக்தான் காரணம்.
- கிரிக்கெட்டில் இப்போது நிலைத்து நின்று ஆடுவதற்கோ, சுழற்பந்தை எதிர்கொள்ளும் கலைக்கோ முக்கியத்துவம் இல்லை.
கொல்கத்தா:
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் பேட்ஸ்மேன்களிடம் சரியான டெக்னிக் இல்லாதது தான் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்,
இது குறித்து அவர் கூறியதாவது:-
கொல்கத்தாவில் ஆடுகளத்தைப் பார்த்தேன். ஸ்கோரைப் பார்த்தேன். முடிவையும் பார்த்தேன். இந்தியாவின் தோல்விக்குத் தற்கால பேட்ஸ்மேன்களின் டெக்னிக்தான் காரணம். இப்போதெல்லாம் பேட்ஸ்மேன்கள் சிக்சர்கள் அடிக்கவும், ஸ்விட்ச்-ஹிட் ஆடவும்தான் கற்றுக்கொள்கிறார்கள்.
வீரர்களுக்கு பயிற்சியில் என்ன கற்றுக்கொடுக்கப்படுகிறது என்பது எனக்குத் தெரியும். இதில் வீரர்களைக் குறை சொல்ல முடியாது, தற்கால கிரிக்கெட்டின் போக்கே இதுதான். கிரிக்கெட்டில் இப்போது நிலைத்து நின்று ஆடுவதற்கோ, சுழற்பந்தை எதிர்கொள்ளும் கலைக்கோ முக்கியத்துவம் இல்லை.
இப்போதைய கிரிக்கெட் பணத்தை சுற்றித் தான் இருக்கிறது. ஆனால், அதைப்பற்றி யாரும் பேச மாட்டார்கள். ஆனால், நான் பேசுவேன், ஏனென்றால் அதுதான் உண்மை. வீரர்களுக்கு அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணம் சம்பாதிக்க சக்தி கிடைக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.
என்று கெவின் பீட்டர்சன் கூறினார்.
- இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் ஒரு கேட்ச் சர்ச்சையானது.
தோஹா:
தோஹாவில் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா 'ஏ' அணி, பாகிஸ்தான் ஏ அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி 137 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் இலக்கை வெறும் 13.2 ஓவர்களில் விரட்டி பிடித்து வெற்றி பெற்றது.
முன்னதாக பாகிஸ்தான் பேட்டிங் செய்த போது சர்ச்சைக்குரிய கேட்ச் சம்பவம் அரங்கேறியது. இது தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக உருவெடுத்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் மாஸ் சதகத் அடித்த பந்தை பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்துகொண்டிருந்த நேஹல் வதேரா மற்றும் நமன் தீர் ஆகியோர் இணைந்து ஒரு அற்புதமான கேட்சைப் பிடித்தனர்.
பந்து சிக்ஸருக்குச் செல்வதைத் தடுத்த நேஹல் வதேரா, பவுண்டரி லைனுக்கு வெளியே செல்வதற்கு முன்பு பந்தை மேலே தூக்கி எறிந்தார். பவுண்டரி லைனுக்குள் இருந்த மற்றொரு வீரரான நமன் தீர், அந்தப் பந்தைப் பிடித்தார்.
இந்திய வீரர்கள் விக்கெட் விழுந்துவிட்டதாகக் கொண்டாடத் தொடங்கினர். பேட்ஸ்மேன் சதகத்தும் பெவிலியனை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஆனால், மூன்றாவது நடுவர் ரீப்ளேக்களை நீண்ட நேரம் ஆய்வு செய்து, இறுதியில் 'நாட் அவுட்' என்று அறிவித்தது,
நடுவரின் இந்த முடிவால் குழப்பமும், விரக்தியும் அடைந்த இந்திய கேப்டன் ஜித்தேஷ் சர்மா மற்றும் வீரர்கள், நடுவரிடம் சென்று, "ஏன் அவுட் இல்லை?" என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஐசிசி-யின் விதி 19.5.2-இன்படி, ஒரு பீல்டர் பவுண்டரி லைனுக்கு வெளியே இருந்து காற்றில் பறந்தபடி பந்தைத் தொடலாம். ஆனால், காற்றில் பறந்து பந்தைத் தொட்ட பிறகு, அவர் மீண்டும் தரையைத் தொடுவதற்கு முன்பு பந்து கையில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும். பந்தைப் பிடித்த பிறகு, பீல்டர் பவுண்டரி லைனுக்கு வெளியே தரையைத் தொட்டால், அது சிக்சராக அறிவிக்கப்படும்.
இந்தச் சம்பவத்தில், நேஹல் வதேரா பந்தை முதல்முறை தொட்ட பிறகு, அதை நமன் திர் பக்கம் தூக்கி எறிந்துவிட்டார். அதன் பிறகு, அவர் பவுண்டரி லைனுக்கு வெளியே தரையைத் தொட்டாலும், பந்து அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, பந்து இன்னும் ஆட்டத்தில் இருந்ததாகவே கருதப்படும். நமன் தீர் பிடித்த கேட்ச் முற்றிலும் சரியானதும், விதிகளுக்கு உட்பட்டதுமாகும்.
ஒருவேளை பந்தை வீசிய வதேரா பவுண்டரி லைன்க்கு உள்ளேயே இருந்ததால் இது நாட் அவுட் கொடுக்கப்பட்டதாகவும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
- முதல் போட்டியில் மிட்செல் ஆட்டநாயகன் விருது வென்றார்.
வெலிங்டன்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி நேற்று முடிவடைந்தது.
அந்த போட்டியில் டேரில் மிச்செலின் அபார சதத்தின் உதவியுடன் நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி 19-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த 2-வது போட்டியிலிருந்து நியூசிலாந்து முன்னணி வீரரான டேரில் மிச்செல் விலகியுள்ளார். முதல் போட்டியின்போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு ஸ்கேன் செய்ய உள்ளதால் அவர் 2-வது போட்டியில் இருந்து விலகியுள்ளார். முதல் போட்டியில் இவர் ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி அடைந்தனர்.
- முதல் டெஸ்ட் போட்டியின் போது சுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.
தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் தொடர் கடந்த 14-ந் தேதி நடைபெற்றது. இதில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி கவுதாத்தியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியின் போது சுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் காயம் காரணமாக அந்த போட்டியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது
- யார் வெளியில் இருக்கிறார்கள் என்பது விசயம் இல்லை.
- எங்களால் இன்னும் வெற்றிக்கான வழியை கண்டுபிடிக்க முடியும்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. காயம் காரணமாக தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா கடைசி நேரத்தில் அணியில் இருந்து விலகினார். என்றாலும் யான்சன் வேகப்பந்து வீச்சில் அசத்தினார். ரபாடாவுக்கு பதிலா களம் இறங்கிய போஸ்ச் 2ஆவது இன்னிங்சில் பவுமா உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் இரண்டு இன்னிங்சிலும் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்த தென்ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய மண்ணில் 15 வருடங்களுக்கு மேல் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் யார் வெளியே இருக்கிறார்கள் என்பது முக்கியமான விசயம் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரபாடா கூறியதாவது:-
யார் வெளியில் இருக்கிறார்கள் என்பது விசயம் இல்லை. எங்களால் இன்னும் வெற்றிக்கான வழியை கண்டுபிடிக்க முடியும். கேப்டன் பவுமா எங்களுக்கு முக்கியமானவர். ஆனால், அவர் எல்லா போட்டிகளிலும் விளையாடுவதில்லை. நான் கொல்கத்தா போட்டியில் விளையாடவில்லை.
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பவுமா விளையாடவில்லை. அதில் தென்ஆப்பிரிக்கா 1-1 என தொடரை சமன் செய்தது. யார் மைதானத்தில் இருந்து வெளியேறினால் அது பெரிய விசயம் அல்ல. உள்ளே உள்ள மற்ற வீரர்களால் பணியை சிறப்பாக செய்ய முடியும் என நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு ரபாடா தெரிவித்தார்.
- இங்கிலாந்தில் நன்றாக விளையாடியதால் அனைவரும் இந்திய அணியை பாராட்டினார்கள்.
- இரு அணிகளும் பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு ஆடுகளம் மோசமாக இருந்தது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணி 93 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இரு அணிகளும் பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு ஆடுகளம் மோசமாக இருந்தது. 3 தினங்களில் போட்டி முடிவடைந்தது.
இந்தநிலையில் ஆடுகளம் தொடர்பாக முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுபோன்ற ஆடுகளங்களால் டெஸ்ட் கிரிக்கெட் அழித்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன்சிங் கூறியதாவது:-
டெஸ்ட் கிரிக்கெட்டை முற்றிலுமாக அழித்து விட்டார்கள். டெஸ்டுக்கு எந்த மதிப்பும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சமீபத்தில் இங்கிலாந்தில் நன்றாக விளையாடியதால் அனைவரும் இந்திய அணியை பாராட்டினார்கள்.
அங்கே பிட்ச்கள் நன்றாக இருந்த காரணத்தாலேயே இந்தியா போராடி வென்றது. ஆனால் இங்கே பந்தை போட்டால் அது எங்கேயோ சுழன்று செல்லும் அளவுக்கு ஆடுகளம் தரமற்றதாக இருக்கிறது. அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக தெரியவில்லை.
இந்த நடைமுறை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இது தவறான விளையாட்டு முறை. இது போன்ற ஆடுகளங்கள் வீரர்களை முன்னேற அனுமதிக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சங்ககாரா வழிநடத்தலில் ராஜஸ்தான் அணி கடந்த 4 சீசன்களில் 2 முறை பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.
- குமார் சங்ககாராவை தலைமை பயிற்சியாளராக ராஜஸ்தான் ராயல்ஸ் மீண்டும் நியமித்துள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககரா மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2021 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் தனது பயணத்தை தொடங்கிய சங்ககரா வழிநடத்தலில் சஞ்சு சாம்சன் தலைமையிலான அணி கடந்த நான்கு சீசன்களில் இரண்டு முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
இருப்பினும் 2024 உலகக்கோப்பை வெற்றிக்கு இந்திய அணியை வழிநடத்திய பயிற்சயாளர் ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரானார்.
ஆனால் சஞ்சு சாம்சனுடன் ஏற்பட்ட பகைமை வதந்திகளை தொடர்ந்து அண்மையில் ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பதவியை துறந்தார்.
இதனால் 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்த மீண்டும் குமார் சங்ககாராவையே தலைமை பயிற்சியாளராக ராஜஸ்தான் ராயல்ஸ் நியமித்துள்ளது.
தலைமை பயிற்சியாளராக சங்ககாரா நியமிக்கப்பட்டதற்கு சிறப்பு AI வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்டுள்ளது.
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் காரில் இருந்து இறங்கி மாஸாக நடந்து காட்சியை AI மூலமாக சங்ககாரா நடந்து வருவது போல எடிட் செய்துள்ளனர். ஹுகும் பாடலின் இந்தி வெர்சனை இந்த எடிட் வீடியோவிற்கு பயன்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
- 2021 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் தனது பயணத்தை சங்ககாரா தொடங்கினார்.
- சங்ககாரா வழிநடத்தலில் ராஜஸ்தான் அணி கடந்த 4 சீசன்களில் 2 முறை பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககரா மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2021 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் தனது பயணத்தை தொடங்கிய சங்ககாரா வழிநடத்தலில் சஞ்சு சாம்சன் தலைமையிலான அணி கடந்த நான்கு சீசன்களில் இரண்டு முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
இருப்பினும் 2024 உலகக்கோப்பை வெற்றிக்கு இந்திய அணியை வழிநடத்திய பயிற்சயாளர் ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரானார்.
ஆனால் சஞ்சு சாம்சனுடன் ஏற்பட்ட பகைமை வதந்திகளை தொடர்ந்து அண்மையில் ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பதவியை துறந்தார்.
இதனால் 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்த மீண்டும் குமார் சங்ககாராவையே தலைமை பயிற்சியாளராக்க ராஜஸ்தான் ராயல்ஸ் நியமித்துள்ளது. .
தற்போது குமார் சங்ககாரா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்தில் கிரிக்கெட் இயக்குநராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
- RCB அணியின் மதிப்பு சுமார் ரூ.17,762 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்ட ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் வாங்கியது. ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.
இதனை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக (ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனமானமும் அதானி குழுமமும் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கே.ஜி.எஃப் பாகம் 1 & 2, சலார், காந்தாரா போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்தது ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும் ஆர்சிபி அணியை வாங்க முன்வந்துள்ளது.
அதாவது பிற நிறுவனங்களுடன் இணைந்து ஆர்சிபி அணியை வாங்கி இணை உரிமையாளராக மாற ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.






