என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 10 தோல்வி என 6 புள்ளியுடன் 9-வது இடம் வகிக்கும் ராஜஸ்தான் அணிக்கு இதுவே இந்த ஆண்டின் கடைசி போட்டியாகும்.
    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் மொத்தம் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 62-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன. முதலில் இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடக்க இருந்தது. ஆனால் இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் ஒரு வாரம் போட்டி நிறுத்தப்பட்டு, புதிய அட்டவணை வெளியிடப்பட்ட போது இந்த ஆட்டம் டெல்லிக்கு மாற்றப்பட்டு விட்டது. ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டுகின்றன.

    12 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 9 தோல்வி என 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் கடைசி இடத்தை தவிர்த்து விடலாம். அடுத்த சீசனுக்கு அணியை வலுப்படுத்தும் நோக்குடன் வீரர்களை பயன்படுத்துவோம் என கேப்டன் டோனி கூறியுள்ளார். இதனால் இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில் டிவால்ட் பிரேவிஸ், உர்வில் பட்டேல், ஆயுஷ் மாத்ரே போன்ற இளம் சூரர்களின் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தாயகம் திரும்பிய வீரர்களில் இங்கிலாந்தை சேர்ந்த சாம் கர்ரன், ஜாமி ஓவர்டான் மறுபடியும் இந்தியா வரவில்லை. மற்றபடி சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது, வேகப்பந்து வீச்சாளர் பதிரானா தாக்குதல் தொடுக்க தயாராக உள்ளனர். தனது கடைசி லீக்கில் கொல்கத்தாவை தோற்கடித்த சென்னை அணி 13 நாள் இடைவெளிக்கு பிறகு களம் காண்பது குறிப்பிடத்தக்கது.

    இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 10 தோல்வி என 6 புள்ளியுடன் 9-வது இடம் வகிக்கும் ராஜஸ்தான் அணிக்கு இதுவே இந்த ஆண்டின் கடைசி போட்டியாகும். பஞ்சாப்புக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 220 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி நெருங்கி வந்து 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த சீசனில் 9-வது ஆட்டங்களில் இலக்கை நோக்கி ஆடியதில் 8-ல் தோல்வியை சந்தித்துள்ளது. அதில் 5 ஆட்டங்களில் 11 ரன்னுக்கும் குறைவான வித்தியாசமாகும். அதாவது ஒன்றிரண்டு பெரிய ஷாட்டுகள் அடித்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். அதை செய்ய முடியாமல் போய் விட்டதாக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வேதனையுடன் குறிப்பிட்டார். பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் (6 அரைசதத்துடன் 523 ரன்), வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக், துருவ் ஜூரெல் உள்ளிட்டோர் கைகொடுத்தாலும் பந்து வீச்சு தான் மெச்சும்படி இல்லை. அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் டாப்-20 இடங்களில் ஒரு ராஜஸ்தான் பவுலர் கூட இல்லை. எனவே பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். ஏற்கனவே லீக்கில் 6 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான் அணி, இந்த சீசனை வெற்றியோடு நிறைவு செய்ய ஆர்வம் காட்டுகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் மொத்தம் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 16-ல் சென்னையும், 14-ல் ராஜஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சென்னை: ஆயுஷ் மாத்ரே, டிவான் கான்வே, உர்வில் பட்டேல், பிரேவிஸ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஷிவம் துபே, டோனி (கேப்டன்), நூர் அகமது, அன்ஜூல் கம்போஜ், கலீல் அகமது, பதிரானா.

    ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், சுபம் துபே, ஹசரங்கா, கிவெனா மபாகா, துஷர் தேஷ் பாண்டே, ஆகாஷ் மத்வால், பசல்ஹக் பரூக்கி.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
    • பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து லக்னோ வெளியேறியது.

    ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும் மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.

    இதனையடுத்து, 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் அடித்து வென்றி பெற்றது.

    அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக ரவி பிஸ்னாய் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை அபிஷேக் சர்மா பறக்கவிட்டார்.

    இதனையடுத்து திக்வேஷ் ரதி ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். அப்போது திக்வேஷ் ரதி அவரை பார்த்து கோவமாக கையை வீசி பின்னர் தனது சிக்னேச்சர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கடுப்பான அபிஷேக் சர்மா களத்திலேயே அவரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆடுகளத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
    • பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து லக்னோ வெளியேறியது.

    ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும் மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.

    இதனையடுத்து, 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் அடித்து வென்றி பெற்றது. அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இப்போட்டியில் தோல்வி முடிந்ததன் மூலம் பிளே ஆப் சுற்று வாய்ப்பபை இழந்து லக்னோ வெளியேறியது.

    இதுவரை குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகள் போட்டி போடுகின்றன.

    • மிட்செல் மார்ஷ், மார்கிராம், பூரன் அரைசதம் விளாசினர்.
    • ரிஷப் பண்ட் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ்- மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்கிராம் நிதானமாக விளையாடி மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    பவர்பிளேயான முதல் 6 ஓவரில் லக்னோ விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் குவித்தது. மிட்செல் மார்ஷ் 28 பந்தில் அரைசதம் அடித்தார். லக்னோ அணி 9 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. அணியின் ஸ்கோர் 115 ரன்னாக இருக்கும்போது மிட்செல் மார்ஷ் 39 பந்தில் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 6 பந்தில் 7 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    3ஆவது விக்கெட்டுக்கு மார்கிராம் உடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். மார்கிராம் 28 பந்தில் அரைசதம் அடித்தார். லக்னோ 15.1 ஓவரில் 150 ரன்னைக் கடந்தது. மார்கிராம் 38 பந்தில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 15.4 ஓவரில் 159 ரன்கள் எடுத்திருந்தது.

    4ஆவது விக்கெட்டுக்கு நிக்கோலஸ் பூரன் உடன் படோனி ஜோடி சேர்ந்தார். 17 ஓவர் முடிவில் லக்னோ 168 ரன்கள் எடுத்திருந்தது.

    18ஆவது ஓவரை இசான் மலிங்கா வீசினார். இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமு விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இதனால் லக்னோ 18 ஓவர் முடிவில் 170 ரன்கள் எடுத்திருந்தது.

    19ஆவது ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் லக்னோவிற்கு 15 ரன்கள் கிடைத்தது. இதனால் 19 ஓவரில் 185 ரன்கள் சேர்த்திருந்தது.

    கடைசி ஓவரை நிதிஷ் ரெட்டி வீசினார். பூரன் 26 பந்தில் 45 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார். இந்த ஓவரில் 20 ரன்கள் அடிக்க லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது.

    • ராஜஸ்தான் அணியால் இலக்கை நெருங்கி வெற்றி பெற முடியவில்லை.
    • வெற்றி பெறக் கூடிய சில போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.

    ஐபிஎல் 2025 சீசனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்று ராஜஸ்தான் ராயல்ஸ். ஆனால் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்க, பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து 200 ரன்களுக்கும் மேல் சேஸிங் செய்ய முயற்சித்து சொற்ப ரன் வித்தியசாத்தில் தோல்வியைடந்து பிளேஆஃப் வாய்ப்பை இழந்தது.

    இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. முதல் ஐந்து போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் 8 போட்டிகளில் 7-ல் தோல்வியடைந்துள்ளது.

    நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கெதிராக 10 ரன்னில் தோல்வியடைந்தது. முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 219 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 209 ரன்கள் மட்டுமே அடித்தது. தொடக்க ஜோடியான ஜெய்வால் (50)- சூர்யவன்ஷி (40) முதல் விக்கெட்டுக்கு 4.5 ஓவரில் 76 ரன்கள் குவித்தது. ஜெய்வால் ஆட்டமிழக்கும்போது 8.4 ஓவரில் 109 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் மிடில் ஆர்டர் மற்றும் கடைநிலை பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வியை தழுவியது.

    இந்த தோல்விக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:-

    பேட்ஸ்மேன்களை குறை சொல்ல எந்த காரணமும் இல்லை. பந்து வீச்சில்தான் குறை உள்ளதாக நினைக்கிறேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இது 220 ரன்கள் அடிக்கும் ஆடுகளம் என நான் நினைக்கவில்லை. இது 195 முதல் 200 ரன்கள் அடிக்கக்கூடிய விக்கெட். நாங்கள் 20 ரன்கள் கூடுதலாக கொடுத்துவிட்டோம்.

    நிங்கள் ஸ்கோரை பார்த்தீர்கள் என்றால், நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை. விக்கெட் வீழ்த்துவது மற்றும் ரன்னை கட்டுப்படுத்துவது ஆகிய இரண்டிலும்தான். ஒவ்வொரு போட்டியில் நாங்கள் 200 முதல் 220 வரை சேஸிங் செய்ய வேண்டியிருந்தது.

    இது மிகவும் கடினமானது. ஸ்கோரை நெருங்கி வந்தோம், ஆனால், எங்களால் போட்டியை முடிக்கும் திறனை கொண்டிருக்கவில்லை. இந்த தொடர் முழுவதும் 15 முதல் 20 ரன்கள் கூடுதலாக கொடுத்து விட்டோம். ஒரு கட்டத்தில் நல்ல நிலையில் இருந்தோம். ஆனால் மிடில் ஆர்டர் மற்றும் கடைநிலை பேட்ஸ்மேன்கள் சற்று கூடுதலாக ரன் சேர்க்க முடியாததால் போட்டியை வெற்றிகரமாக முடிக்கவில்லை என்பதை உணர்வீர்கள். கடைநிலை வீரர்களுக்கு கிளக் ஆகி எங்களுக்கு தேவையான பெரிய ஷாட்கள் கிடைக்கவில்லை.

    இவ்வாறு ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத்து அணிக்கு இந்த போட்டியின் வெற்றி தோல்வி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
    • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தோல்வியடைந்தால் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும்.

    ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி லக்னோவில் நடக்கிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏற்கனவே பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. லக்னோ இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ள முடியும். தோல்வியடைந்தால் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளன.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:-

    மார்கிராம், மிட்செல் மார்ஷ், பூரன், ரிஷப் பண்ட், ஆயுஷ் படோனி, அப்துல் சமாத், ஆகாஷ் தீப், ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், வில் ஓ'ரூர்கி.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்:-

    இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, கிளாசன், அனிகெட் வர்மா, கமிந்து மெண்டிஸ், கம்மின்ஸ், ஹர்ஷல் பட்டேல், ஹர்ஷ் துபே, ஜீசன் அன்சாரி, எசான் மலிங்கா.

    • நாம் பேசும் ஒரு விசயம் விக்கெட்டுக்கு இடையில் ஓடுவது.
    • அதையும் தாண்டி நான் தவறு செய்தால் சுப்மன் கில் சுட்டிக் காட்டுவார்.

    ஐபிஎல் 2025 சீசனில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி 199 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது.

    தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சாய் சுதர்சன் (108), சுப்மன் கில் (93) அபாரமாக விளையாடி விக்கெட் இழப்பின்றி 19 ஓவரில் சேஸிங் செய்து குஜராத் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. ஆட்டமிழக்காமல் 108 ரன்கள் குவித்த சாய் சுதர்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    அத்துடன் 617 ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றியுள்ளார். சுப்மன் கில் 601 ரன்கள் அடித்துள்ளார். சுப்மன் கில்- சாய் சுதர்சன் ஜோடி இந்த தொடரில் அபாரமாக விளையாடி வருகிறது. இதற்கு எங்களுடைய புரிதல்தான் காரணம் என சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சாய் சுதர்சன் கூறியதாவது:-

    எனக்கும் சுப்மன் கில்லுக்கும் இடையில் அதிக அளவில் புரிதல் உள்ளது. விக்கெட்டுக்கு இடையில் ஓடுவது நாம் பேசும் ஒரு விசயம். அதையும் தாண்டி நான் ஒரு தவறு செய்தால், அவர் சுட்டிக்காட்டுவார். அதேபோல்தான் சுப்மன் கில் ஒரு தவறு செய்தாலும் நான் சுட்டிக்காட்டுவேன். இந்த சேஸிங் அணியின் வெற்றிக்கு உதவியதால் நான் சிறந்ததாக உணர்கிறேன்.

    இவ்வாறு சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

    • லுங்கி நிகிடி தென்ஆப்பிரிக்கா அணிக்காக விளையாட செல்வதால் பிளேஆஃப் சுற்றில் பங்கேற்கமாட்டார்.
    • ஜிம்பாப்வே வீரர் முசாரபானியை பிளேஆஃப் சுற்றுக்காக ஆர்சிபி ஒப்பந்தம் செய்துள்ளது.

    ஐபிஎல் 2025 சீசனில் ஆர்சிபி அணி சிறப்பாக விளையாடி வருகிறது. நேற்றைய போட்டியில் டெல்லியை குஜராத் அணி வீழ்த்தியதன் மூலம் குஜராத், ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

    ஆர்சிபி அணியில் லுங்கி நிகிடி இடம் பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி ஜூன் 11ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதனால் லுங்கி நிகிடி பிளேஆஃப் சுற்றில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அவருக்கு மாற்று வீரராக ஜிம்பாப்வே அணியைச் சேர்ந்த முசாரபானியை தேர்வு செய்துள்ளதை ஆர்சிபி உறுதி செய்துள்ளது. பிளேஆஃப் சுற்றுக்காக மட்டும் தற்காலிகமாக 75 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

    முசாரபானி 70 டி20 போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கான 12 டெஸ்ட் மற்றும் 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    ஜிம்பாப்வே அணி இங்கிலாந்துக்கு எதிராக ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் முடிவடைந்த பின்னர் ஆர்சிபி அணியில் முசாரபானி இணைய உள்ளார்.

    • ரோகித் சர்மாவுக்கு பதில் சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
    • சுப்மன் கில் வெளிநாட்டு மண்ணில் ரன் குவிக்க தவறியுள்ளார் என விமர்சனம் வைக்கப்படுகிறது.

    இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு அறிவித்துள்ளார். இதனால் அடுத்த டெஸ்ட் அணி கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    பும்ரா கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் பும்ராவின் பணிச் சுமையை (Work Load) கருத்தில் கொண்டு சுப்மன் கில்லிடம் கேப்டன் பதவி ஒப்படைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

    ஆனால் சுப்மன் கில் வெளிநாட்டு மண்ணில் சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் "சுப்மன் கில் வெளிநாட்டு மண்ணில் ரன்கள் அடிக்கவில்லை என பேசுவார்கள். வெளிநாட்டு மண்ணில் ரன்கள் அடிக்கவில்லை என்பது அடிக்கடி வரும் என்பது உங்களுக்கு தெரியும். சில நேரம் அவ்வாறு சொல்பவர்களிடம், நீங்கள் வெளிநாட்டு மண்ணில் எவ்வளவு ரன்கள் அடித்தீர்கள், எவ்வாறு விளையாடினீர்கள் என்று பாருங்கள் என்று சொல்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    • டெல்லிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் 93 ரன்கள் அடித்தார்.
    • 143 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் கே.எல்.ராகுல் முதல் இடத்தில உள்ளார்.

    ஐ.பி.எல். தொடரின் 60-வது லீக் ஆட்டம் புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து 112 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19 ஓவரில் 205 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 108 ரன்னும், சுப்மன் கில் 93 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். .

    இதன்மூலம் 9வது வெற்றியைப் பதிவு செய்த குஜராத் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    இந்த போட்டியில் 93 ரன்கள் குவித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்த 2வது இந்தியர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்து உள்ளார்.

    143 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் கே.எல்.ராகுல் முதல் இடத்தில உள்ளார். சுப்மன் கில் 154 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்துள்ளார்.

    • இலங்கையில் அடுத்த மாதம் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.
    • செப்டம்பர் மாதம் ஆடவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது

    அடுத்த மாதம் இலங்கையில் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரும், செப்டம்பரில் ஆடவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரும் நடைபெற உள்ளன.

    இந்நிலையில், இந்த 2 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் விலக பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவராக பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் சதம் அடித்தார்.
    • பஞ்சாப் அணிக்காக 2 சதங்களும் லக்னோ அணிக்காக 2 சதங்களும் கே.எல்.ராகுல் அடித்துள்ளார்.

    நேற்று டெல்லியில் நடைபெற்ற 60வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் சதமடித்து 112 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 8,000 ரன்களை வேகமாகக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    மேலும், ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளுக்காக சதம் விளாசிய முதல் வீரர் என்ற புதிய சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார்.

    ஏற்கனவே பஞ்சாப் அணிக்காக 2 சதங்களும் லக்னோ அணிக்காக 2 சதங்களும் அடித்திருந்த கே.எல்.ராகுல் தற்போது டெல்லி அணைக்கவும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

    ×