என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 62-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி 20 பந்தில் 43 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பிரேவிஸ் 42 ரன்னில் வெளியேறினார். ஷிவம் துபே 39 ரன்னில் அவுட் ஆனார்.

    ராஜஸ்தான் சார்பில் யுத்வீர் சிங் சரக், மத்வால் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 19 பந்தில் 33 ரன் எடுத்து அவுட்டானார்.

    அதிரடியாக ஆடிய சூர்யவன்ஷி 33 பந்தில் 57 ரன்னும், சஞ்சு சாம்சன் 41 ரன்னும் எடுத்து வெளியேறினர்.

    கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய ஜுரெல் 12 பந்தில் 31 ரன் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில் ராஜஸ்தான் 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது ராஜஸ்தான் பெற்ற 4வது வெற்றி ஆகும்.

    • ஐபிஎல் கிரிக்கெட்டில் 253 சிக்சர்கள் அடித்துள்ளார்.
    • கிறிஸ் கெய்ல் 357 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 62ஆவது போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    சிஎஸ்கே-யின் ஸ்கோர் 13.4 ஓவரில் 137 ரன்னாக இருக்கும்போது பிரேவிஸ் 25 பந்தில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஷிபம் துபே உடன் எம்.எஸ். தோனி ஜோடி சேர்ந்தார்.

    16ஆவது ஓவரை ரியான் பராக் வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தை சிக்சருக்கு விளாசினார் எம்.எஸ். தோனி. இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 350 சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார். இந்த போட்டியில் 17 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் 253 சிக்சர்கள் அடித்துள்ளார். 200 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை எம்.எஸ். தோனி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் கிரகி்கெட்டில் கிறிஸ் கெய்ல் 357 சிக்சர்கள் அடித்துள்ளார். ரோகித் சர்மா 280 சிக்சர்களும், விராட் கோலி 272 சிக்சர்களும் அடித்துள்ளனர்.

    • ராஜஸ்தான் தரப்பில் யுத்வீர் சிங் சரக், மத்வால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் - சென்னை அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே, கான்வே களமிறங்கினர். இதில் கான்வே 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஊர்வில் படேல் 0 ரன்னில் அவுட் ஆனார்.

    ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 20 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து அஸ்வின் 13, ஜடேஜா 1 என அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

    இதனையடுத்து பிரேவிஸ் மற்றும் துபே ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரை சதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரேவிஸ் 42 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில் தோனியும் துபேவும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். துபே 39 ரன்னில் அவுட் ஆனார். இறுதிவரை போராடிய தோனி 17 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனால் சென்னை அணி 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் யுத்வீர் சிங் சரக், மத்வால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • அபிஷேக் அவுட் ஆனதை திக்வேஷ் தனது வழக்கமான பாணியில் (நோட்புக் செலிபிரேஷன்) கொண்டாடினார்.
    • அபிஷேக்கை நோக்கி கையசைத்தவாறு விக்கெட் எடுத்ததை திக்வேஷ் கொண்டாடினார்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதரபாத் 18.2 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. இதன் மூலம் லக்னோவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றிபெற்றது.

    இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 20 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார். அவர் 7.3 ஓவரில் திக்வேஷ் வீசிய பந்தில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.

    அபிஷேக் அவுட் ஆனதை திக்வேஷ் தனது வழக்கமான பாணியில் (நோட்புக் செலிபிரேஷன்) கொண்டாடினார். அபிஷேக்கை நோக்கி கையசைத்தவாறு விக்கெட் எடுத்ததை திக்வேஷ் கொண்டாடினார். இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக் மைதானத்திலேயே திக்வேஷ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் நடுவர்கள் மற்றும் வீரர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர்.

    பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஐ.பி.எல். நிர்வாகம் திக்வேஷ் ரதிக்கு 2 தகுதி இழப்பு புள்ளியும் போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமாகவும் விதித்தது. நடப்பு தொடரில் ஏற்கனவே 3 தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றிருந்த திக்வேஷ் ரதி இதனையும் சேர்த்து 5 தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றதால் ஒரு போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மறுபுறம் அபிஷேக் சர்மாவுக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியும், போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாகவும் விதித்து ஐ.பி.எல். நிர்வாகம் தண்டனை வழங்கியுள்ளது. 

    • இவ்விரு அணிகள் மொத்தம் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
    • இதில் 16-ல் சென்னையும், 14-ல் ராஜஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 62-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடக்க இருந்தது. ஆனால் இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் ஒரு வாரம் போட்டி நிறுத்தப்பட்டு, புதிய அட்டவணை வெளியிடப்பட்ட போது இந்த ஆட்டம் டெல்லிக்கு மாற்றப்பட்டு விட்டது. ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டுகின்றன.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் மொத்தம் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 16-ல் சென்னையும், 14-ல் ராஜஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.

    • பிளே ஆப் சுற்றுக்கு ஆர்சிபி உள்பட 3 அணிகள் தகுதிபெற்றுவிட்டன.
    • மீதமுள்ள ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு 3 அணிகள் தகுதிபெற்றுவிட்டன. அதன்படி குஜராத் , பெங்களூரு , பஞ்சாப் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள சின்னாசாமி மைதானத்தில் வருகிற 23-ந் தேதி ஆர்சிபி- சன்ரைசர்ஸ் அணிகள் மோத இருந்தனர். ஆனால் பெங்களூருவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டத்தை தொடர்ந்து இந்த போட்டி லக்னோவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • குவாலிபையர் 1, எலிமினேட்டர் போட்டிகள் பஞ்சாப்பின் முல்லன்பூரிர் நடைபெறும்.
    • குவாலிபையர் 2 அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 61 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் கொல்கத்தா, லக்னோ, ஐதராபாத், ராஜஸ்தான், சென்னை ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர்.

    பிளே ஆப் சுற்றுக்கு பெங்களூரு, பஞ்சாப், குஜராத், ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளனர். ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகள் மோதுகிறது.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குவாலிபையர் 1, எலிமினேட்டர் போட்டிகள் பஞ்சாப்பின் முல்லன்பூரிலும், குவாலிபையர் 2 அகமதாபாத் மைதானத்திலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆசிய கோப்பை போட்டிகளில் இருந்து இந்தியா விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
    • இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவை முடிந்தவரை துண்டிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஐ.சி.சி. நடத்தும் பெரிய போட்டிகளில் கூட லீக் சுற்றில் பாகிஸ்தானுடன் மோதுவதை தவிர்க்கும் வகையில் அட்டவணையை உருவாக்கும்படி வலியுறுத்தியது.

    இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஆசிய கோப்பை போட்டிகளில் இருந்து இந்தியா விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் ஆண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    வளரும் அணிகளுக்கான (பெண்கள்) ஆசிய கோப்பை போட்டி அடுத்த மாதம் இலங்கையில் நடக்கிறது. பாகிஸ்தான் உள்துறை மந்திரி மொசின் நவ்வி, அந்த நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவராகவும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருக்கிறார். இதனால் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் விதமாக ஆசிய போட்டியை இந்தியா புறக்கணிக்க இருப்பதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதற்கிடையே இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் தேவஜித் சைக்யா கூறுகையில், 'இரண்டு ஆசிய கோப்பை போட்டிகளில் பங்கேற்பதில்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவல் இன்று (நேற்று) காலை எங்களது கவனத்துக்கு வந்தது.

    இப்போதைக்கு அந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை. ஆசிய கோப்பை போட்டி குறித்து நாங்கள் இன்னும் விவாதிக்கவில்லை. இப்போதைக்கு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும். அதன் பிறகு இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதிலேயே முழு கவனமும் இருக்கிறது. ஆசிய கோப்பை குறித்து எந்த மட்டத்திலும் ஆலோசிக்கப்படவில்லை. இந்த செய்திகள் எல்லாம் யூகம் மற்றும் கற்பனையின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது' என்றார்.

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
    • ஹர்ஷல் படேல் 2381 பந்துகள் வீசி 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும் மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.

    இதனையடுத்து, 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் அடித்து வென்றி பெற்றது.

    இப்போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் மிகக் குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற லசித் மலிங்காவின் சாதனையை ஐதராபாத் வீரர் ஹர்ஷல் படேல் முறியடித்தார்.

    ஹர்ஷல் படேல் 2381 பந்துகள் வீசி 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் மலிங்கா (2,444 பந்துகள்), சாஹல் (2,543 பந்துகள்), ப்ராவோ (2,656 பந்துகள்), பும்ரா (2,832 பந்துகள்) ஆகியோர் உள்ளனர். 

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
    • பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து லக்னோ வெளியேறியது.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் 'பிளே ஆப்' சுற்று கனவை ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா தகர்த்துள்ளார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 20 பந்தில் 59 ரன் (4 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஐதராபாத் அணியை வெற்றி பெற வைத்தார்.

    நேற்றைய போட்டியில் லக்னோ நிர்ணயித்த 206 ரன்கள் என்ற இலக்கை ஐதராபாத் எளிதில் எடுத்தது. ஏற்கனவே வாய்ப்பை இழந்து வெளியேறிய ஐதராபாத் இந்த வெற்றி மூலம் லக்னோவையும் தன்னுடன் இழுத்து சென்றது.

    அதிரடியாக விளையா டிய அபிஷேக் சர்மா விக்கெட்டை திக்வேஷ் ரதி கைப்பற்றினார். அப்போது அவர் தனது வழக்கமான 'நோட்புக்' கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அவரிடம் அபிஷேக் சர்மா வாக்குவாதத்தில் ஈடுபட் டார். இருவருக்கும் இடையேயான இந்த மோதலால் ஆடுகளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நடுவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினார்கள்.

    நோட்புக் கொண்டாட்டத்தில் திக்வேஷ் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே அவர் 2 முறை விதிகளை மீறியுள்ளார். இதற்காக அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது.

    மீண்டும் நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதற்காகவும், அபிஷேக் சர்மாவுடன் வாக்குவாதம் செய்ததற்காகவும் திக்வேஷ் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை காரணமாக குஜராத்துக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் அவர் விளையாட முடியாது. தடையோடு திக்வேசுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதேபோல ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு ஒரு போட்டியில் இருந்து பெறும் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 10 தோல்வி என 6 புள்ளியுடன் 9-வது இடம் வகிக்கும் ராஜஸ்தான் அணிக்கு இதுவே இந்த ஆண்டின் கடைசி போட்டியாகும்.
    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் மொத்தம் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 62-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன. முதலில் இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடக்க இருந்தது. ஆனால் இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் ஒரு வாரம் போட்டி நிறுத்தப்பட்டு, புதிய அட்டவணை வெளியிடப்பட்ட போது இந்த ஆட்டம் டெல்லிக்கு மாற்றப்பட்டு விட்டது. ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டுகின்றன.

    12 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 9 தோல்வி என 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் கடைசி இடத்தை தவிர்த்து விடலாம். அடுத்த சீசனுக்கு அணியை வலுப்படுத்தும் நோக்குடன் வீரர்களை பயன்படுத்துவோம் என கேப்டன் டோனி கூறியுள்ளார். இதனால் இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில் டிவால்ட் பிரேவிஸ், உர்வில் பட்டேல், ஆயுஷ் மாத்ரே போன்ற இளம் சூரர்களின் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தாயகம் திரும்பிய வீரர்களில் இங்கிலாந்தை சேர்ந்த சாம் கர்ரன், ஜாமி ஓவர்டான் மறுபடியும் இந்தியா வரவில்லை. மற்றபடி சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது, வேகப்பந்து வீச்சாளர் பதிரானா தாக்குதல் தொடுக்க தயாராக உள்ளனர். தனது கடைசி லீக்கில் கொல்கத்தாவை தோற்கடித்த சென்னை அணி 13 நாள் இடைவெளிக்கு பிறகு களம் காண்பது குறிப்பிடத்தக்கது.

    இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 10 தோல்வி என 6 புள்ளியுடன் 9-வது இடம் வகிக்கும் ராஜஸ்தான் அணிக்கு இதுவே இந்த ஆண்டின் கடைசி போட்டியாகும். பஞ்சாப்புக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 220 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி நெருங்கி வந்து 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த சீசனில் 9-வது ஆட்டங்களில் இலக்கை நோக்கி ஆடியதில் 8-ல் தோல்வியை சந்தித்துள்ளது. அதில் 5 ஆட்டங்களில் 11 ரன்னுக்கும் குறைவான வித்தியாசமாகும். அதாவது ஒன்றிரண்டு பெரிய ஷாட்டுகள் அடித்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். அதை செய்ய முடியாமல் போய் விட்டதாக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வேதனையுடன் குறிப்பிட்டார். பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் (6 அரைசதத்துடன் 523 ரன்), வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக், துருவ் ஜூரெல் உள்ளிட்டோர் கைகொடுத்தாலும் பந்து வீச்சு தான் மெச்சும்படி இல்லை. அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் டாப்-20 இடங்களில் ஒரு ராஜஸ்தான் பவுலர் கூட இல்லை. எனவே பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். ஏற்கனவே லீக்கில் 6 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான் அணி, இந்த சீசனை வெற்றியோடு நிறைவு செய்ய ஆர்வம் காட்டுகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் மொத்தம் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 16-ல் சென்னையும், 14-ல் ராஜஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சென்னை: ஆயுஷ் மாத்ரே, டிவான் கான்வே, உர்வில் பட்டேல், பிரேவிஸ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஷிவம் துபே, டோனி (கேப்டன்), நூர் அகமது, அன்ஜூல் கம்போஜ், கலீல் அகமது, பதிரானா.

    ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், சுபம் துபே, ஹசரங்கா, கிவெனா மபாகா, துஷர் தேஷ் பாண்டே, ஆகாஷ் மத்வால், பசல்ஹக் பரூக்கி.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
    • பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து லக்னோ வெளியேறியது.

    ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும் மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.

    இதனையடுத்து, 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் அடித்து வென்றி பெற்றது.

    அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக ரவி பிஸ்னாய் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை அபிஷேக் சர்மா பறக்கவிட்டார்.

    இதனையடுத்து திக்வேஷ் ரதி ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். அப்போது திக்வேஷ் ரதி அவரை பார்த்து கோவமாக கையை வீசி பின்னர் தனது சிக்னேச்சர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கடுப்பான அபிஷேக் சர்மா களத்திலேயே அவரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆடுகளத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    ×