என் மலர்
நீங்கள் தேடியது "நரேந்திர மோடி ஸ்டேடியம்"
- குவாலிபையர் 1, எலிமினேட்டர் போட்டிகள் பஞ்சாப்பின் முல்லன்பூரிர் நடைபெறும்.
- குவாலிபையர் 2 அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 61 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் கொல்கத்தா, லக்னோ, ஐதராபாத், ராஜஸ்தான், சென்னை ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர்.
பிளே ஆப் சுற்றுக்கு பெங்களூரு, பஞ்சாப், குஜராத், ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளனர். ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகள் மோதுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குவாலிபையர் 1, எலிமினேட்டர் போட்டிகள் பஞ்சாப்பின் முல்லன்பூரிலும், குவாலிபையர் 2 அகமதாபாத் மைதானத்திலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதிக பார்வையாளர்கள் வருகைக்காக அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
- இதை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியை பார்வையாளர்கள் அதிக அளவில் கண்டுகளித்தனர்.
அதிக பார்வையாளர்களால் நேரில் பார்க்கப்பட்ட போட்டிக்காக குஜராத்தின் நரேந்திர மோடி மைதானம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. அங்கு நடைபெற்ற ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியை ஒரு லட்சத்து 1 ஆயிரத்து, 566 பேர் நேரில் கண்டுகளித்தனர்.
இந்நிலையில், பிரபல கின்னஸ் நிறுவனம் அதற்கான சான்றிதழை இன்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அவர்களிடம் வழங்கியது.
இதுதொடர்பாக, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கின்னஸ் உலக சாதனையைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும்... இதை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.






