என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் சதம் அடித்தார்.
    • பஞ்சாப் அணிக்காக 2 சதங்களும் லக்னோ அணிக்காக 2 சதங்களும் கே.எல்.ராகுல் அடித்துள்ளார்.

    நேற்று டெல்லியில் நடைபெற்ற 60வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் சதமடித்து 112 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 8,000 ரன்களை வேகமாகக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    மேலும், ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளுக்காக சதம் விளாசிய முதல் வீரர் என்ற புதிய சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார்.

    ஏற்கனவே பஞ்சாப் அணிக்காக 2 சதங்களும் லக்னோ அணிக்காக 2 சதங்களும் அடித்திருந்த கே.எல்.ராகுல் தற்போது டெல்லி அணைக்கவும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

    • 2019, 2020 ஆம் ஆண்டுகளில் டெல்லி அணியை பிளேஆப் சுற்றுக்கும் ஷ்ரேயாஸ் அழைத்து சென்றார்.
    • 2024 ஆம் ஆண்டில் கொல்கத்தாவிற்கும் கோப்பையை ஷ்ரேயாஸ் பெற்றுக்கொடுத்தார்.

    நேற்று டெல்லியில் நடைபெற்ற 60வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறியது.

    மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. இதன்மூலம் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப் சென்றுள்ளது.

    இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளை ப்ளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற முதல் கேப்டன் என்ற சாதனையை ஷ்ரேயாஸ் படைத்துள்ளார்.

    2019, 2020 ஆம் ஆண்டுகளில் டெல்லி அணியை பிளேஆப் சுற்றுக்கும் ஷ்ரேயாஸ் அழைத்து சென்றார். பின்பு 2024 ஆம் ஆண்டில் கொல்கத்தாவிற்கும் கோப்பையை ஷ்ரேயாஸ் பெற்றுக்கொடுத்தார். தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாப் அணியை பிளேஆப் சுற்றுக்கு ஷ்ரேயாஸ் அழைத்து சென்றுள்ளார். 

    • இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • லக்னோ 4 ஆட்டங்களிலும், ஐதராபாத் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் இன்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெறும் 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்சை சந்திக்கிறது.

    ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி 11 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் தோற்றுள்ளது. முந்தைய மூன்று ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து தடுமாறி வருகிறது.

    தனது எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதுடன், மற்ற அணிகளின் முடிவு சாதகமாக அமைந்தால் தான் அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து நினைத்து பார்க்க முடியும் என்ற நிலையில் இருக்கும் லக்னோ அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா-சாவா? போன்றதாகும். இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். மாறாக தோற்றால் அந்த அணியின் வாய்ப்பு அம்பேல் ஆகி விடும்.

    லக்னோ அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (410 ரன்), மிட்செல் மார்ஷ் (378), மார்க்ரம் (348), ஆயுஷ் பதோனி (326) நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், அப்துல் சமத் ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. பந்து வீச்சில் திக்வேஷ் ரதி, ஷர்துல் தாக்குர், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் நம்பிக்கை அளித்தாலும், தாக்கம் எற்படுத்த தவறுகின்றனர்.

    ஐதராபாத் அணி 11 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவில்லை (டெல்லிக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 7 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருப்பதுடன், ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணியில் அதிரடி சூரர்கள் அதிகம் இருந்தாலும், அவர்களது ஆட்டம் ஒருசேர நன்றாக அமையாததால் சறுக்கலை சந்தித்தது.

    ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா (314 ரன்), ஹென்ரிச் கிளாசென் (311), நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன் என்று பெரிய அதிரடி பட்டாளமே இருக்கிறது. ஆனால் இதுவரை அவர்கள் சரியாக நிலைத்து நிற்கவில்லை. பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், கேப்டன் கம்மின்ஸ், ஜெய்தேவ் உனட்கட், ஜீஷன் அன்சாரி, முகமது ஷமி வலுசேர்க்கின்றனர். அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா) கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இன்று இந்தியா வருகிறார். அவர் இந்த ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான்.

    ஐதராபாத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள லக்னோ அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர எல்லா வகையிலும் வரிந்து கட்டும். அதேநேரத்தில் ஆறுதல் வெற்றி பெறுவதுடன், புள்ளி பட்டியலில் முடிந்த வரை முன்னேற்றம் காண ஐதராபாத் அணி முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் லக்னோ 4 ஆட்டங்களிலும், ஐதராபாத் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ரவி பிஷ்னோய், ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, பிரின்ஸ் யாதவ், ஆவேஷ் கான்.

    ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், சச்சின் பேபி, ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகெட் வர்மா, காமிந்து மென்டிஸ், கம்மின்ஸ் (கேப்டன்), ஜெய்தேவ் உனட்கட், ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, ஜீஷன் அன்சாரி.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பிளே ஆஃபிற்கு பஞ்சாப் சென்றுள்ளது
    • தற்போது 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது

    நேற்று டெல்லியில் நடைபெற்ற 60வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறியது.

    மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    இதன்மூலம் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பிளே ஆஃபிற்கு பஞ்சாப் சென்றுள்ளது. 11 ஆண்டுக்கு பிறகு பஞ்சாப் அணி பிளேஆப் சுற்றுக்கு சென்றுள்ளதால் அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தற்போது 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது

    பிளே ஆப் சுற்றில் 4வது அணியாக இடம்பிடிப்பதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மும்முரமாக உள்ளன.

    • முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    ஜெய்ப்பூர்:

    நடப்பு ஐபிஎல் தொடரின் 59வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது.

    அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் ஹர்பிரீத் பிரார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    இந்நிலையில், வெற்றிக்கு பிறகு பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேசியதாவது:

    முந்தைய நாள் பயிற்சியின் போது கைவிரலில் பந்து தாக்கியதால் வலி இருந்தது. காயத்தின் தன்மை குறித்து தெளிவாக தெரியவில்லை. அதனை பரிசோதனை செய்யவேண்டும்.

    பீல்டிங் செய்ய களம் இறங்காததால் வெளியில் இருந்தபடி வீரர்களுக்கு தகவல்களை பரிமாறினேன். எதிரணி சிறப்பாக ஆடும் போது நமது வீரர்களுக்கு தளர்வு ஏற்படும். அதனை தவிர்க்கவே வீரர்களுடன் தொடர்ந்து பேசினேன். எங்கள் அணி வீரர்களின் துணிச்சலான அணுகுமுறை பாராட்டும் வகையில் இருந்தது.

    ஹர்பிரீத் பிரார் வலைபயிற்சியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பில் அருமையாக செயல்பட்டார். அவரது மனநிலை அபாரமாக இருக்கிறது.

    சூழ்நிலை எப்படி இருந்தாலும் வெற்றி பெறவேண்டும் என்ற மனநிலையை நாங்கள் ஒருங்கிணைந்து வெளிக்காட்டி இருக்கிறோம். இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சை அடித்து ஆடுவது கடினமாக இருந்தது. எனவே பெரும்பாலான ரன்களை வேகப்பந்து வீச்சுக்கு எதிராக எடுத்தோம். எந்தச் சூழ்நிலையிலும் ஆட்டத்தை எங்களுக்கு சாதகமாக மாற்ற முடியும் என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய டெல்லி அணி கே.எல்.ராகுல் சதத்தால் 199 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 60வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய டெல்லி அணி கே.எல்.ராகுல் அசத்தல் சதத்தால் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது.

    அடுத்து ஆடிய குஜராத் அணி சாய் சுதர்சன், சுப்மன் கில் அதிரடி ஆட்டத்தால் விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    பிளே ஆப் சுற்றில் 4வது அணியாக இடம்பிடிப்பதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மும்முரமாக உள்ளன.

    • டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய டெல்லி அணி 199 ரன்களை குவித்தது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். தொடரின் 60-வது லீக் ஆட்டம் புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து 112 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    அபிஷேக் பொரெல் 30 ரன்னும், அக்சர் படேல் 25 ரன்னும், ஸ்டப்ஸ் 21 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன், சுப்மன் கில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். சுப்மன் கில் அரை சதம் கடந்தார்.

    சாய் சுதர்சன் சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், குஜராத் அணி 19 ஓவரில் 205 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 108 ரன்னும், சுப்மன் கில் 93 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதன்மூலம் 9வது வெற்றியைப் பதிவு செய்த குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. டெல்லி அணியின் 5வது தோல்வி இதுவாகும்.

    • கே.எல்.ராகுல் டி20 கிரிக்கெட்டில் 8,000 ரன்களை கடந்தார்.
    • இதனை தனது 224 இன்னிங்சில் கே.எல்.ராகுல் அடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். தொடரின் 60வது லீக் ஆட்டம் புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து 112 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல் 36 ரன் எடுத்தபோது டி20 கிரிக்கெட்டில் 8,000 ரன்களை கடந்தார். இதனை தனது 224 இன்னிங்சில் கே.எல்.ராகுல் அடித்துள்ளார்.

    இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 8,000 ரன்களை வேகமாகக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இதற்குமுன் விராட் கோலி 243 இன்னிங்சில் 8,000 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை கே.எல்.ராகுல் முறியடித்து, புதிய சாதனை படைத்துள்ளார்.

    ஒட்டுமொத்தமாக இந்த மைல்கல்லை வேகமாக எட்டிய 3-வது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    • போட்டியில் குஜராத் கேப்டன் ஜூப்மன் கில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்கியது.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இரவு டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொண்டுள்ளது.

    ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் குஜராத் கேப்டன் ஜூப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்கியது.

    இந்நிலையில், 20 ஓவர் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது.

    இதில், அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 65 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் அசத்தியுள்ளார். மேலும், அபிஷேக் போரல் 30, அக்சர் படேல் 25, த்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 21 ரன்களை எடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியுள்ளது.

    • ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் இழந்து விட்டது.
    • பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆப் ரேஸில் உள்ளது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 59-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது

    இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். காயத்தில் இருந்து மீண்ட சஞ்சு சாம்சன் இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.

    இப்போட்டியின் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது.

    இப்போட்டியில் அதிகபட்சமாக நெஹல் வதோரா 70, ஷஷங் சிங் 59, ஸ்ரேயாஸ் ஐயர் 30 என்கள் எடுத்தனர்.

    இதையடுத்து, 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களிமிறங்கியது.

    ஆனால் ஆட்டத்தின் முடிவில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    இந்நிலையில், ஐபிஎஸ் தொடர் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியுள்ளது.

    • இப்போட்டியில் குஜராத் கேப்டன் ஜூப்மன் கில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்குகிறது.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இரவு டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.

    டெல்லி அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை (ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 13 புள்ளிகள் பெற்றுள்ளது.

    குஜராத் அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    இந்நிலையில், ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் குஜராத் கேப்டன் ஜூப்மன் கில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்குகிறது.

    • ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் இழந்து விட்டது.
    • பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆப் ரேஸில் உள்ளது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 59-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியுள்ளது.

    ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் இழந்து விட்டது. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆப் ரேஸில் உள்ளதால் அந்த அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற கடினமாக போராடும்.

    அதே சமயம் ராஜஸ்தான் அணி எஞ்சிய ஆட்டங்களில் அச்சமின்றி அதிரடியாக ஆடி எதிரணிகளுக்கு அதிர்ச்சி அளிக்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். காயத்தில் இருந்து மீண்ட சஞ்சு சாம்சன் இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.

    இந்நிலையில், இப்போட்டியின் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ளது.

    இதன்மூலம், 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களிமிறங்குகிறது.

    இப்போட்டியில் அதிகபட்சமாக நெஹல் வதோரா 70, ஷஷங் சிங் 59, ஸ்ரேயாஸ் ஐயர் 30 என்கள் எடுத்தனர்.

    ×