என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகள்
- முதலில் ஆடிய டெல்லி அணி கே.எல்.ராகுல் சதத்தால் 199 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 60வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய டெல்லி அணி கே.எல்.ராகுல் அசத்தல் சதத்தால் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது.
அடுத்து ஆடிய குஜராத் அணி சாய் சுதர்சன், சுப்மன் கில் அதிரடி ஆட்டத்தால் விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
பிளே ஆப் சுற்றில் 4வது அணியாக இடம்பிடிப்பதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மும்முரமாக உள்ளன.
Next Story






