என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஹார்டிக் பாண்ட்யா - நடாசா ஸ்டான்கோவிச் ஜோடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரிவதாக அறிவித்தனர்
    • ஹர்திக் பாண்ட்யா தனது காதலி மஹைகா சர்மா உடன் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவிற்கு ஒருநாள் தொடரில் இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விளையாட தயாராகி வருகிறார். இவர் நடப்பு ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது காயமடைந்தார். சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இறுதிப்போட்டியில் விலகினார். இருப்பினும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

    காயத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் விளையாடவில்லை. தற்போது காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா, வரும் 26-ம் தேதி தொடங்கவுள்ள சயத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் பரோடா அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த தொடருக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கும் தயாராகும் வகையில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா தனது காதலி மஹைகா சர்மா உடன் ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

    2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஹார்டிக் பாண்ட்யா - நடாசா ஸ்டான்கோவிச் ஜோடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரிவதாக அறிவித்தனர். இந்த தம்பதிக்கு அகஸ்தியா என்ற ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இதற்கு முன்பு ஆடுகளம் தயாரிக்கப்பட்ட போது யாருமே எந்த கேள்வியும் கேட்கவில்லை.
    • வெற்றியும், தோல்வியும் போட்டியில் ஒரு பகுதி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    மும்பை:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வியால் யாரும் பதற்றப்படாமல் அமைதி காக்க வேண்டும் என நட்சத்திர கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணி சுழற் பந்துவீழ்ச்சிக்கு சாதகமாக ஆடுகளம் தயாரித்தது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பு ஆடுகளம் தயாரிக்கப்பட்ட போது யாருமே எந்த கேள்வியும் கேட்கவில்லை. ஏனென்றால் அப்போது இந்தியா வெற்றி பெற்றது.

    வெற்றியும், தோல்வியும் போட்டியில் ஒரு பகுதி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஏதோ இதற்கு முன்பு தோற்றதே கிடையாது போலவும் இப்போதுதான் முதல் முறை தோற்று இருக்கிறோம் என்பது போலவும் அனைவரும் பேசுகிறார்கள்.

    இந்தத் தோல்வி எனக்கு ஒன்றும் பெரிய கவலையை தரவில்லை. 4 ஸ்பின்னர்களை தேர்வு செய்ததில் எந்த தவறும் இல்லை. இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்வியை தழுவி இருப்பதால் ரசிகர்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம். அமைதியாக இருங்கள் என்று புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்.

    • இந்தியா அணியுடன் நியூசிலாந்து, வங்கதேசம், அமெரிக்கா ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளன.
    • ஜப்பான், தான்சானியா அணிகளும் விளையாட தகுதி பெற்றுள்ளன.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை (U-19 World Cup) கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் அடுத்த வருடம் ஜனவரி 15ந்தேதி முதல் பிப்ரவரி 6-ந்தேதி வரை 23 நாட்கள் நடைபெறுகிறது.

    இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. 16 அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு பிரிவில் 4 அணிகள் இடம் பிடித்துள்ளது. இந்தியா குரூப் ஏ-யில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் அமெரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் இடம் பிடித்துள்ளனர்.

    இந்த நிலையில்தான் இந்தத் தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியி்டுள்ளது. ஜனவரி 15-ந்தேதி இந்தியா முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. வங்கதேசத்தை 17-ந்தேதியும், நியூசிலாந்தை 24-ந்தேதியும் எதிர்கொள்கிறது. இந்தியா மோதும் போட்டிகள் ஜிம்பாப்வேயில் உள்ள புலவாயோவில் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடக்கிறது.

    குரூப் நிலையில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் சிக்ஸ் நிலைக்கு தகுதி பெறும். இங்கு 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். அதன்பின் அரையிறுதி, இறுதிப் போட்டி நடைபெறும்.

    • ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது.
    • 5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டுவிஸ்ட் வைக்கும் விதமாக 12 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதில் பென் டக்கெட், ஜாக் கிராலி, ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், மார்க் வுட், ஜோப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த 12 பேர் கொண்ட அணியில் எந்த வீரர் லெவனில் இடம் பெற மாட்டார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. அதற்கான தேர்வை ரசிகர்களிடமும் ஆஸ்திரேலிய அணியிடமும் இங்கிலாந்து அணி விட்டுவிட்டது போல இந்த அணி விவரத்தை அறிவித்துள்ளது.

    இறுதி லெவனில் ஆடுகள நிலைமைகளைப் பொறுத்து அனைத்தும் வேகப்பந்து வீச்சு அட்டாக் அல்லது சுழற்பந்து வீச்சாளார் பஷீர் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.

    • ரோகித் சர்மா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
    • 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் சத்ரான் உள்ளார்.

    ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் நியூசிலாந்து அணி வீரர் டேரில் மிட்செல் 2 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் முதல் இடத்திற்கு அவர் முன்னேறி உள்ளார். 

    முதல் இடத்தில் இருந்த ரோகித் சர்மா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் சத்ரான் உள்ளார். அதனை தொடர்ந்து சுப்மன் கில் 4-வது இடத்திலும் விராட் 5-வது இடத்திலும் உள்ளனர். ஷ்ரேயாஸ் ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

    • ஆடுகளத்தை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை என்ற கம்பீரின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
    • மோசமான பேட்டிங் நுட்பமும், நிலைத்து நின்று போராடும் மனோபலமும் இல்லாததே தோல்விக்கு காரணம்.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 124 ரன் இலக்கை கூட எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டு தோற்றது கடும் விமர்சனத்துக்குள்ளானது. சுழலுக்கு உகந்த வகையில் தயாரிக்கப்பட்ட இந்த ஆடுகளத்தில் சமாளிக்க முடியால் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறிப்போனார்கள். அதே சமயம் இந்த கடினமான ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார்.

    இது போன்ற ஆடுகளம் (பிட்ச்) தான் வேண்டும் என்று நாங்கள் கேட்டு பெற்றோம். பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வி ஏற்பட்டதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறினார். பிட்ச் விவகாரத்தில் கம்பீரின் நிலைப்பாட்டை முன்னாள் வீரர்கள் சவுரவ் கங்குலி, புஜாரா, ஹர்பஜன்சிங் உள்ளிட்டோர் குறை கூறினர்.

    இந்த நிலையில் ஆடுகள சர்ச்சையில் இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது விவாதத்தை முன் வைத்துள்ளார். அவர் டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமாவிடம் இருந்து இந்திய வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் ஒரு அற்புதமான இன்னிங்சை விளையாடினார். பொறுமையாக மனஉறுதியுடன் போராடுவது எப்படி என்பதை களத்தில் காட்டினார். இது தான் முறையான டெஸ்ட் கிரிக்கெட்டுக்குரிய பேட்டிங். ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து டெஸ்ட் போட்டி வித்தியாசமானது என்பதை நமது வீரர்கள் மறந்து விட்டார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதற்குரிய ஷாட்டுகளை ஆடும் போது தான் தாக்குப்பிடிக்க முடியும்.

    ஆடுகளத்தை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை என்ற கம்பீரின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆடுகளத்தில் பந்து அளவுக்கு அதிகமாக சுழன்று திரும்பவில்லை. தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மரின் பந்து வீச்சை பாருங்கள். நிறைய பந்துகள் பிட்ச் ஆனதும் நேராக ஸ்டம்புக்கு சென்றது. திடீரென ஒன்றிரண்டு பந்துகள் திரும்பின. எனவே 124 ரன் இலக்கை 'சேசிங்' செய்திருக்க வேண்டும்.

    மோசமான பேட்டிங் நுட்பமும், நிலைத்து நின்று போராடும் மனோபலமும் இல்லாததே தோல்விக்கு காரணம். நமது அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் உள்ளுர் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. நீங்கள் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடினால், இத்தகைய சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அந்த அனுபவம் சர்வதேச போட்டியில் கைகொடுக்கும்.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் போது எந்த அணியும் ஆடுகளங்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை. இதனால் பிட்ச் பராமரிப்பாளர்கள் எந்த நெருக்கடியும் இன்றி, தாங்கள் நினைத்த மாதிரி ஆடுகளத்தை உருவாக்குகிறார்கள். எத்தகைய ஆடுகளம் சிறந்ததாக இருக்கும் என்பது மற்றவர்களை காட்டிலும் பிட்ச் பராமரிப்பாளர்களுக்கே நன்கு தெரியும். அதனால் அவர்களின் செயல்பாடுகளில் யாரும் தலையிடக்கூடாது. நமக்கு ஏற்ற வகையிலான ஆடுகளத்தை தயார்செய்யும்படி கேட்டால், தோல்விக்கு தான் வித்திடும். அதனால் பிட்ச் பராமரிப்பாளர்களை சுதந்திரமாக விட்டு விடுங்கள்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
    • 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரபாடா விலகி உள்ளார்.

    இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுதாத்தியில் வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் காயம் காரணமாக ரபடா ஆடவில்லை. 2-வது டெஸ்டில் இருந்தும் அவர் விலகி உள்ளார். இதனால் அவருக்கு மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி சேர்க்கப்பட்டுள்ளார்.

    ரபாடாவை தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர், மற்றும் யான்சன் ஆகிய இருவரும் சுப்மன் கில் அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனையில் தோள் பட்டை மற்றும் மூட்டுவலி காரணமாக பரிசோதனை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது தென் ஆப்பிரிக்கா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    29 வயதான லுங்கி இங்கிடி, கடைசியாக ஜூன் 2025-ல் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்காக விளையாடினார். அந்தப் போட்டியின் 2-வது இன்னிங்சில் அவர் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.

    2018-ல் தனது டெஸ்ட் பயணத்தைத் தொடங்கிய இங்கிடி, இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரது வருகை, தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சுக்கு மேலும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வங்கதேச மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது.
    • இந்த போட்டி தொடர் திடீரென மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    டாக்கா:

    வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (டிசம்பர்) இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது.

    இந்த நிலையில் இந்த போட்டி தொடர் திடீரென மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்து இருக்கும் வங்கதேச கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் இருந்து எதுவும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இந்தியா, வங்கதேசம் இடையே சமீபகாலமாக நிலவும் அரசியல் பதற்றமே கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி கடந்த ஆகஸ்டு மாதம் வங்கதேசம் சென்று ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் விளையாட இருந்தது. அந்த போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோடப்பட்டது நினைவிருக்கலாம்.

    • 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை முஷ்பிகுர் ரஹீம் படைத்துள்ளார்.
    • 100 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய 8-வது விக்கெட் கீப்பர் என்ற சாதனை பட்டியலில் முஷ்பிகுர் ரஹீம் இணைந்துள்ளார்.

    அயர்லாந்து கிரிக்கெ அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

    இதில் முதலில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி வங்கதேசம் அணி விளையாடி வருகிறது.

    இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் வங்கதேச அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை முஷ்பிகுர் ரஹீம் படைத்துள்ளார்.

    மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய 8-வது விக்கெட் கீப்பர் என்ற சாதனை பட்டியலில் முஷ்பிகுர் ரஹீம் இணைந்துள்ளார். இந்திய ஜாம்பவான் எம்.எஸ். தோனி (90 டெஸ்ட்) மற்றும் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் (96 டெஸ்ட்) போன்றோரால் கூட இந்த மைல்கல்லை எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    100+ டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விக்கெட் கீப்பர்கள்:

    மார்க் பௌச்சர் (தென் ஆப்பிரிக்கா) - 147 டெஸ்ட்கள்

    அலெக் ஸ்டீவர்ட் (இங்கிலாந்து) - 133 டெஸ்ட்கள்

    குமார் சங்கக்காரா (இலங்கை) - 134 டெஸ்ட்கள்

    ஏபி டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) - 114 டெஸ்ட்கள்

    இயான் ஹீலி (ஆஸ்திரேலியா) - 119 டெஸ்ட்கள்

    பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து) - 101 டெஸ்ட்கள்

    ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து) - 100 டெஸ்ட்கள்

    முஷ்பிகுர் ரஹீம் (வங்கதேசம்) - 100 டெஸ்ட்கள்*

    • சுப்மன் கில் ஆடுவது சந்தேகமாகியுள்ளதால் ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார்.
    • இடக்கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் வலது காலில் காலுறை இன்றி வலை பயிற்சியில் ஈடுபட்டார்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வருகிற 22-ந்தேதி கவுகாத்தியில் தொடங்கும் 2-வது டெஸ்டில், கழுத்துவலியால் அவதிப்படும் இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆடுவது சந்தேகமாகியுள்ளதால் அதை கவனத்தில் கொண்டு அணியில் கூடுதலாக ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே, 2-வது டெஸ்டுக்கு புறப்படுவதற்கு முன்பாக கொல்கத்தாவில் இந்திய வீரர்கள் நேற்று பயிற்சி மேற்கொண்டனர். இதில் சாய் சுதர்சன், துருவ் ஜூரெல் ஆகியோர் ஒற்றைக்காலில் மட்டும் காலுறை (பேடு) கட்டிக் கொண்டு சுழற்பந்து வீச்சு யுக்தியை திறம்பட சமாளிப்பதற்கான பயிற்சி எடுத்தனர். இது கொஞ்சம் ஆபத்தான பழங்கால பயிற்சி முறையாகும். பந்து நேராக காலில் தாக்கினால் எலும்பு முறிவு கூட ஏற்படலாம்.

    இடக்கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் வலது காலில் காலுறை இன்றி வலை பயிற்சியில் ஈடுபட்டார். முன்னங்காலை எடுத்து வைத்து பந்தை தடுப்பதை காட்டிலும் பேட்டை அதிகமாக பயன்படுத்துவதற்கு இந்த பயிற்சி முறை வழிவகுக்கும். அத்துடன் கிரீசுக்கு வெளியே வந்து சுழற்பந்தை அடித்து ஆடுவதற்கும் ஊக்குவிக்கும். அவர்களின் வித்தியாசமான பயிற்சியை கம்பீர் உன்னிப்பாக கவனித்தார்.

    • கவுதம் கம்பீர் தலைமயில் இந்திய மண்ணில் இந்திய டெஸ்ட் அணி மோசமாக விளையாடி வருகிறது.
    • 6 போட்டிகளில் நான்கில் தோல்வியை சந்தித்துள்ளது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதற்கு ஆடுகளம் மிகவும் மோசமான அமைக்கப்பட்டதுதான் காரணம் என விமர்சனம் எழுந்தது. மேலும், இவ்வாறுதான் ஆடுகளம் அமைக்க வேண்டும் என்ற கம்பீர் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் போட்டி தொடங்குவதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக இருந்தே தண்ணீர் தெளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

    கம்பீர் ஆடுகளம் குறித்து குறை கூறவில்லை. இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

    கம்பீர் தலைமையில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 0-3 எனத் தோல்வியடைந்துள்ளது. தற்போது தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. 6 போட்டிகளில் 4-ல் தோல்வியை சந்தித்துள்ளது.

    இந்த நிலையில் டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் நீக்கப்பட வேண்டுமா? என கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு கங்குலி "தற்போதைய நிலையில் கவுதம் கம்பீரை நீக்குவதற்கான கேள்வி இல்லை. இங்கிலாந்தில் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. அதேபோல் இந்தாவிலும் சிறப்பாக விளையாடும் என் முழு நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றார்.

    • தோனி மனைவி சாக்ஷி தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
    • தோனி இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் இந்திய அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். மேலும் சிஎஸ்கே மூலமும் பல ரசிகர்களை அவர் கவர்ந்துள்ளார்.

    அவர் இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இம்பேக்ட் பிளேயராக களம் இறங்குவார் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் எம்.எஸ். தோனி மனைவி சாக்ஷி தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு தோனி கேக் கொடுக்கும் புகைப்படத்தை சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து நம் தலைவன் தலைவிக்கு பிறந்தநாள் விசில்கள் என தலைப்பிட்டுள்ளது. 

    ×