என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.
- இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இரு அணிகள் பங்கேற்கும் 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் நேற்று கவுதாத்திக்கு புறப்பட்ட இந்திய அணி வீரர்கள் இன்று கவுகாத்திக்கு சென்றடைந்தனர். மேள தாளங்கள் முழங்க அவர்கள் வரவேற்கப்பட்டனர். கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டதில் இருந்து கவுகாத்திக்கு சென்றது வரை உள்ள வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
- வங்கதேச அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை ரஹீம் படைத்துள்ளார்.
- 100-வது போட்டியில் விளையாடிய ரஹீம் சதம் அடித்து அசத்தினார்.
அயர்லாந்து கிரிக்கெ அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இதில் முதலில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் வங்கதேச அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை முஷ்பிகுர் ரஹீம் படைத்துள்ளார்.
100-வது போட்டியில் விளையாடிய ரஹீம் சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
அதன்படி 100-வது போட்டியில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரஹீம் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அவர் 11-வது வீரராக சாதனை படைத்துள்ளார்.
100-வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய வீரர்கள் விவரம்:-
கோலின் கவுட்ரி (இங்கிலாந்து)
ஜாவேத் மியாண்டட் (பாகிஸ்தான்)
கார்டன் கிரீனிட்ஜ் (வெஸ்ட் இண்டீஸ்)
அலெக் ஸ்டீவர்ட் (இங்கிலாந்து)
இன்சமாம் உல் ஹக் (பாகிஸ்தான்)
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)
கிரேம் ஸ்மித் (தென் ஆப்பிரிக்கா)
ஹாஷிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா)
ஜோ ரூட் (இங்கிலாந்து)
டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)
முஷ்பிகுர் ரஹீம் (வங்கதேசம்)
டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ரஹீமின் 13-வது சதமாகும். இதன் மூலம் சக நாட்டு வீரர் மோமினுல் ஹக்கின் சாதனையை சமன் செய்துள்ளார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வங்கதேச வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் டெஸ்டில் ஹார்மர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
- 2-வது டெஸ்டில் விளையாடுவது தொடர்பாக தென் ஆப்பிரிக்க அணி முடிவு செய்யும்.
கவுகாத்தி:
தென் ஆப்பிரிக்க வீரர் சைமன் ஹார்மர் முதல் டெஸ்டில் பீல்டிங் செய்த போது காயம் அடைந்தார். அவருக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை குறித்த விவரம் மருத்துவ அறிக்கையில் மட்டுமே தெரியவரும். அதை பொறுத்து 2-வது டெஸ்டில் விளையாடுவது தொடர்பாக தென் ஆப்பிரிக்க அணி முடிவு செய்யும்.
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் ஹார்மர் 8 விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்டில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
- இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்க்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆஸ்திரேலிய அணியில் மூன்றாவது பழங்குடி வீரராக டாகெட் இடம் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல் டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய லெவன்:-
உஸ்மான் கவாஜா, ஜேக் வெதரால்ட், மார்னஸ் லெபுசென், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், நாதன் லியோன், பிரெண்டன் டாகெட்.
ஆஸ்திரேலிய ஆடும் லெவனில் இரண்டு பழங்குடி வீரர்கள் முதல் முறையாக இடம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். ஸ்காட் போலண்ட் மற்றும் பிரெண்டன் டாகெட் ஆகியோர் பழங்குடி வீரர்கள் ஆவர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, டெஸ்ட் போட்டிகளில் சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வருகிறது. இதுவரை ஒரு பழங்குடி வீரர் மட்டுமே ஆடும் லெவனில் இடம் பெற்று வந்த நிலையில் தற்போது இரண்டு பழங்குடி (Indigenous) வீரர்களுக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்காட் போலண்ட் மற்றும் பிரெண்டன் டாகெட் என்ற இரண்டு பழங்குடி வீரர்கள் ஒன்றாக விளையாட உள்ளனர்.
பழங்குடி ஆஸ்திரேலியர்கள் என்பவர்கள் அபோரிஜினல் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெயிட் ஐலாண்டர் மக்கள். ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை சில பழங்குடி வீரர்களே விளையாடியுள்ளனர். ஆண்களில் ஜேசன் கில்லெஸ்பி மற்றும் ஸ்காட் போலண்ட் மட்டுமே.
அவர்களுக்கு அடுத்து மூன்றாவது பழங்குடி வீரராக டாகெட் இடம் பெற்றுள்ளார். இது பழங்குடி சமூகத்தின் திறமையை அங்கீகரிப்பதும், கிரிக்கெட்டில் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதும் ஆகும். இது அடுத்த தலைமுறை பழங்குடி இளைஞர்களுக்கு உத்வேகமாக இருக்கும்.
- ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
- முதல் டெஸ்டில் பிரெண்டன் டாகெட் அறிமுகமாகிறார்.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த தொடருக்கான கோப்பையை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அறிமுகப்படுத்தினர். இதற்கான போட்டோஷூட் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பேட்டர் ஜேக் வெதரால்ட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரெண்டன் டாகெட் அறிமுக வீரர்களாக களமிறங்குகிறார்கள்.
முதல் டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய லெவன்:-
உஸ்மான் கவாஜா, ஜேக் வெதரால்ட், மார்னஸ் லெபுசென், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், நாதன் லியோன், பிரெண்டன் டாகெட்.
- கொல்கத்தாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சுப்மன் கில் காயமடைந்தார்.
- இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.
தென் ஆப்பிரிக்கா அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதில் முதலில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு வெற்றியுடன் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக 2-வது டெஸ்டில் இருந்து கில் விலகி உள்ளார். இதனால் ரிஷப் பண்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தொடர் முடிந்தவுடன் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கில்லுக்கு ஏற்பட்ட காயம் சரியாகி வருவதாக மருத்துவர்கள் கூறினாலும் அவருக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த தொடரில் சீனியர் வீரர்களான ரோகித், கோலி இடம் பெற மாட்டார்கள் என கூறி வந்த நிலையில் அவர்கள் இந்த தொடரில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது.
- டி20 தொடரில் அவர்கள் விளையாடுவார்கள் என தெரிய வந்துள்ளது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
அதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி வருகிற 30-ந் தேதி ராஞ்சியில் நடைபெறுகிறது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்ட்யா, பும்ரா ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்களுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வரும் டி20 தொடரில் அவர்கள் விளையாடுவார்கள் என தெரிய வந்துள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக அவர்களுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் இந்த தொடருக்கு திரும்பவது கடினம் என தெரிய வந்துள்ளது.
மேலும் சுப்மன் கில் ஒருநாள், மற்றும் டி20 தொடரில் இடம்பெறுவாரா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- அசார் அலி ராஜினாமாவை பிசிபி ஏற்றுக் கொண்டது.
- அசார் அலி தலைமையில் பாகிஸ்தான் 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசார் அலி. இவர் பாகிஸ்தானின் தேர்வுக்குழு உறுப்பினர் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் தலைவராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தேர்வுகுழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். அத்துடன் இளைஞர் மேம்பாட்டுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 12 மாத பதவிக்காலத்திற்குப் பிறகு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அவர் ராஜினாமா செய்வதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் ஏழுதியுள்ளார். அவரது ராஜினாமாவை பிசிபி ஏற்றுக் கொண்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் அசார் அலிக்கும் நீண்ட காலமாக இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக, ஷாஹீன்ஸ் (பாகிஸ்தான் A அணி) மற்றும் அண்டர்-19 கிரிக்கெட் தொடர்பான அனைத்து விவகாரங்களும் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அஹ்மத்-க்கு திடீரென வழங்கப்பட்டது. இதனால் அசார் அலி ஏமாற்றம் அடைந்தார். இதனால் தான் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அசார் அலி பாகிஸ்தான் அணியின் ODI மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாக பணியாற்றியுள்ளார். 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு ODI கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் பாகிஸ்தான் 2017 சாம்பியன்ஸ் டிராபி வென்றது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 34 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது.
- அந்த அணியின் ஷாய் ஹோப் சதமடித்தார். அவர் 69 பந்துகளில் 109 ரன் குவித்தார்.
நேப்பியர்:
வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 34 ஓவராகக் குறைக்கப்பட்டது.
முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 34 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. ஷாய் ஹோப் சதமடித்தார். அவர் 69 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 33.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 248 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ஷாய் ஹோப்புக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஷாய் ஹோப் நேற்று அடித்த சதம் 19-வது ஒருநாள் சதமாகும். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ஒருநாள் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் பிரையன் லாராவின் (19 சதங்கள்) சாதனையை ஷாய் ஹோப் சமன் செய்துள்ளார்.
இந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில் (25 சதங்கள்) முதலிடத்தில் உள்ளார்.
- டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
- மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 34 ஓவராகக் குறைக்கப்பட்டது.
நேப்பியர்:
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 டி20, 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடந்த டி20 தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. அடுத்து, நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வென்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 34 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 34 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. ஷாய் ஹோப் சதமடித்து அசத்தினார். அவர் 69 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 33.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 248 ரன்கள் குவித்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீசை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றிபெற்றது. டேவான் கான்வே 90 ரன்கள் சேர்த்தார். இந்த வெற்றியின் மூலம் 2-0 என ஒருநாள் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது ஷாய் ஹோப்புக்கு அளிக்கப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளதும்,
- ஹார்டிக் பாண்ட்யா - நடாசா ஸ்டான்கோவிச் ஜோடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரிவதாக அறிவித்தனர்
- ஹர்திக் பாண்ட்யா தனது காதலி மஹைகா சர்மா உடன் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு ஒருநாள் தொடரில் இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விளையாட தயாராகி வருகிறார். இவர் நடப்பு ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது காயமடைந்தார். சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இறுதிப்போட்டியில் விலகினார். இருப்பினும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
காயத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் விளையாடவில்லை. தற்போது காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா, வரும் 26-ம் தேதி தொடங்கவுள்ள சயத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் பரோடா அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த தொடருக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கும் தயாராகும் வகையில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா தனது காதலி மஹைகா சர்மா உடன் ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஹார்டிக் பாண்ட்யா - நடாசா ஸ்டான்கோவிச் ஜோடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரிவதாக அறிவித்தனர். இந்த தம்பதிக்கு அகஸ்தியா என்ற ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இதற்கு முன்பு ஆடுகளம் தயாரிக்கப்பட்ட போது யாருமே எந்த கேள்வியும் கேட்கவில்லை.
- வெற்றியும், தோல்வியும் போட்டியில் ஒரு பகுதி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மும்பை:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வியால் யாரும் பதற்றப்படாமல் அமைதி காக்க வேண்டும் என நட்சத்திர கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணி சுழற் பந்துவீழ்ச்சிக்கு சாதகமாக ஆடுகளம் தயாரித்தது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பு ஆடுகளம் தயாரிக்கப்பட்ட போது யாருமே எந்த கேள்வியும் கேட்கவில்லை. ஏனென்றால் அப்போது இந்தியா வெற்றி பெற்றது.
வெற்றியும், தோல்வியும் போட்டியில் ஒரு பகுதி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஏதோ இதற்கு முன்பு தோற்றதே கிடையாது போலவும் இப்போதுதான் முதல் முறை தோற்று இருக்கிறோம் என்பது போலவும் அனைவரும் பேசுகிறார்கள்.
இந்தத் தோல்வி எனக்கு ஒன்றும் பெரிய கவலையை தரவில்லை. 4 ஸ்பின்னர்களை தேர்வு செய்ததில் எந்த தவறும் இல்லை. இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்வியை தழுவி இருப்பதால் ரசிகர்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம். அமைதியாக இருங்கள் என்று புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்.






