என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- இங்கிலாந்து அணியில் 4 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை கடந்தனர்.
- ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடங்கத்தில் இருந்தே திணறியது. இதனால் அந்த அணி சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அந்த அணியில் 4 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை கடந்தனர். பென் டக்கெட் 21, ஒலி போப் 46, ஹார் ப்ரூக் 52, ஸ்மித் 33 ஆகியோர் ரன் குவிப்பில் இங்கிலாந்து அணி 172 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி (201 ரன்) சூப்பர் பார்மில் உள்ளார்.
- இரவு 8 மணிக்கு நடக்கும் 2-வது அரைஇறுதியில் பாகிஸ்தான் - இலங்கை ‘ஏ’ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தோகா:
வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்த வங்காளதேசம் 'ஏ', இலங்கை 'ஏ' அணியும், 'பி' பிரிவில் பாகிஸ்தான் ஷகீன்ஸ், இந்தியா 'ஏ' அணியும் அரைஇறுதிக்கு முன்னேறின.
இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி, வங்காளதேசம் 'ஏ' அணியை (பிற்பகல் 3 மணி) எதிர்கொள்கிறது. இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி (201 ரன்) சூப்பர் பார்மில் உள்ளார்.
கேப்டன் ஜிதேஷ் ஷர்மா, நமன்திர், பிரியன்ஷ் ஆர்யா, நேஹல் வதேரா ஆகியோரும் நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் குர்ஜப்னீத் சிங், ஹர்ஷ் துபே, சுயாஷ் ஷர்மா நம்பிக்கை அளிக்கின்றனர்.
இரவு 8 மணிக்கு நடக்கும் 2-வது அரைஇறுதியில் பாகிஸ்தான் - இலங்கை 'ஏ' அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- ஜனவரி 2-வது வாரத்தில் தாயகம் கிளம்பும் போது ஆஷஸ் கோப்பையுடன் செல்ல வேண்டும் என்பதே எங்களது லட்சியம்.
- ஸ்டீவன் சுமித் நீண்ட காலமாக எங்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடி ரன் குவித்து வருகிறார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலிய அணியில் காயத்தால் கேப்டன் கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோர் ஆடவில்லை. ஸ்டீவன் சுமித் அணியை வழிநடத்துகிறார். வேகப்பந்து வீச்சாளர் பிரன்டன் டாக்கெட், தொடக்க ஆட்டக்காரர் ஜேக் வெதரால்டு ஆகியோர் இந்த டெஸ்டில் அறிமுகமாகிறார்கள். ஆஸ்திரேலிய அணியில் ஒரே டெஸ்டில் இரு புதுமுக வீரர்கள் அடியெடுத்து வைப்பது 2019-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் வெற்றியோடு தொடங்குவதற்கு ஆவலுடன் உள்ளனர். 'முதல் 3 நாள் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. மைதானத்தில் மட்டுமின்றி, டி.வி.யிலும் ஏராளமான ரசிகர்கள் போட்டியை பார்ப்பார்கள். எனவே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை குதூகலப்படுத்துவோம் என நம்புகிறேன்' என ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் குறிப்பிட்டார்.
இங்கிலாந்து அணி கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் ஆடிய 15 டெஸ்டுகளில் ஒன்றில் கூட ஜெயித்ததில்லை. ஆஸ்திரேலியாவில் கடந்த 45 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே ஆஷஸ் கோப்பையை உச்சிமுகர்ந்துள்ளது. கடைசியாக 2010-11-ம் ஆண்டு அங்கு ஆஷஸ் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இப்போது ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டும் முனைப்புடன் இங்கிலாந்து வீரர்கள் தீவிரமாக தயாராகியுள்ளனர்.
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'ஆஷஸ் கிரிக்கெட் சரித்திரத்தை புரட்டிப்பார்த்தால், ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்தின் செயல்பாடு மெச்சம்படி இல்லை என்பதை அணியில் உள்ள ஒவ்வொருவரும் அறிவோம். அடுத்த 2½ மாதங்களில் இங்கு வரலாறு படைப்பதற்கு எங்களுக்கு இது அருமையான வாய்ப்பாகும். ஜனவரி 2-வது வாரத்தில் தாயகம் கிளம்பும் போது ஆஷஸ் கோப்பையுடன் செல்ல வேண்டும் என்பதே எங்களது லட்சியம். இதற்காக கடினமாக உழைத்துள்ளோம். ஆனால் இது மிகவும் கடினம் என்பது தெரியும். ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த இடத்தில் வீழ்த்துவது எளிதான விஷயமல்ல.
ஸ்டீவன் சுமித் நீண்ட காலமாக எங்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடி ரன் குவித்து வருகிறார். அவரை போன்ற வீரரை கட்டுப்படுத்துவது சுலபமல்ல. பேட்டிங்கில் அவரையும், மற்ற வீரர்களையும் குறைந்த ரன்னில் வீழ்த்தினால் எங்களது லட்சியத்தை அடைய வாய்ப்பு கிடைக்கும்' என்றார்.
- அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முஷ்பிகுர் ரஹிம் சதமடித்தார்.
- முஷ்பிகுர் ரஹிமுக்கு இந்த சதம் டெஸ்ட் போட்டிகளில் 100வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்கா:
அயர்லாந்து அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணி 476 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் முஷ்பிகுர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
இந்நிலையில், ஆட்டத்தின் முடிவில் முஷ்பிகுர் ரஹிம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒரு வங்கதேச வீரராக இருந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.
உண்மையைச் சொல்லப் போனால், நான் அதை கனவிலும் நினைத்ததில்லை. எனவே இது உண்மையிலேயே ஒரு பெரிய சாதனை.
எனக்கு மட்டுமல்ல, எந்த நாட்டைச் சேர்ந்த எந்த கிரிக்கெட் வீரருக்கும், இது ஒரு பெருமையான தருணம்.
நான் அந்த நபராக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்பது தெளிவாகிறது. இதன் பொருள் எனது பொறுப்பு இன்னும் பெரியது, நான் அதற்கு ஏற்ப வாழ முயற்சிப்பேன்.
நான் டிரஸ்ஸிங் ரூமை விட்டு வெளியேறும்போது எனது இடைவெளியை நிரப்பக்கூடிய ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறேன்.
100 என்பது ஒரு பெரிய எண் என்று நான் நினைக்கிறேன். எனவே அங்கு செல்லும்போது பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அனுபவத்தைச் சேகரிக்க முயற்சித்தேன், அமைதியாக இருப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டேன்.
இது மிகவும் சிறப்பாக இருக்கிறது, எனக்கு உண்மையிலேயே மரியாதையாக இருந்தது. இந்த வகையான அங்கீகாரம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு உத்வேகமாக செயல்படும் என நினைக்கிறேன் என தெரிவித்தார்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி வரும் முஷ்பிகுர் ரஹிம் தனது 100வது டெஸ்ட் போட்டியில் சதமடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 162 ரன்கள் அடித்தது.
- அடுத்து ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் அடித்தது. பென்னட் 49 ரன்னிலும், சிக்கந்தர் ராசா 47 ரன்னிலும் அவுட்டாகினர்.
இலங்கை சார்பில் வனிந்து ஹசரங்கா 3 விக்கெட்டும், ஈஷான் மலிங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஜிம்பாப்வே அணியினர் துல்லியமாக பந்து வீசி அசத்தினர். சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், இலங்கை அணி 20 ஓவரில் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஜிம்பாப்வே சார்பில் பிராட் ஈவன்ஸ் 3 விக்கெட்டும், ரிச்சர்ட் நகரவா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது சிக்கந்தர் ராசாவுக்கு அளிக்கப்பட்டது.
முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வே தான் ஆடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி அடைந்துள்ளது.
- கடல் போன்ற மஞ்சள் படை தோனியின் பெயரை உச்சரிக்கும்.
- எதிரணி வீரர்கள் மீது அவர் ஏற்படுத்தும் தாக்கம் நம்பமுடியாதது.
2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று மாலை வெளியிட்டது.
அவ்வ்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.
இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் சென்னை மைதானத்தில் தோனி நுழைந்தால் மைதானமே அதிரும் என்று இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய ஜோ ரூட், "ஐபிஎல் போட்டியின் போது, சென்னையில் எம்.எஸ். தோனி பேட்டிங் செய்ய வரும்போது, மைதானம் குலுங்குவது போலவும், அதிர்வது போலவும் உணர்வீர்கள். அரங்கமே அதிர்வுறும். கடல் போன்ற மஞ்சள் படை அவரது பெயரை உச்சரிக்கும். எதிரணி வீரர்கள் மீது அவர் ஏற்படுத்தும் தாக்கம் நம்பமுடியாதது. என்ன ஒரு அனுபவம் அது" என்று தெரிவித்தார்.
- ஐபிஎல் கேப்டனாக இருந்த நேரத்தில் உரிமையாளர் தரப்பிலிருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டன.
- கிரிக்கெட் குறித்து எதுவுமே தெரியாதவர்களிடம் எதையும் விளக்க முடியாது
நேர்காணல் ஒன்றில் ஐபிஎல் கேப்டன்சி குறித்து கேஎல் ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "10 மாதம் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்படும் களைப்பை விட 2 மாதம் ஐபிஎல் விளையாடுவதில் அதிகமாக சோர்வடைந்தேன்.
ஐபிஎல் கேப்டனாக இருந்த நேரத்தில் உரிமையாளர் தரப்பிலிருந்து அளவுக்கும் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டன. அணியில் ஏன் மாற்றம் செய்யப்பட்டது, அவரை ஏன் அணியில் எடுக்கவில்லை. எதிர் அணியினர் 3 ஸ்பின்னர்களுடன் ஆடுகிறார்களே நீங்கள் ஏன் ஆடவில்லை. எதிர் அணியால் மட்டும் எப்படி 200 அடிக்க முடிந்தது, உங்களால் ஏன் அடிக்க முடியவில்லை? ஒரே மைதானத்தில் எதிர் அணியின் ஸ்பின்னர்கள் எப்படி நன்றாக ஸ்விங் செய்கின்றனர், உங்களால் ஏன் முடியவில்லை.. இப்படி பல கேள்விகள் கேட்கப்பட்டன.
இப்படியான கேள்விகளை எல்லாம் கேட்டுக்கொண்டே இருக்க முடியாது அல்லவா? இதற்கு பதில் அளிக்க தான் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். வீரர்கள் இதற்கு பதில் அளிக்க முடியாது. அணியில் அனைத்துமே சரியாக இருந்தாலும் உங்களால் வெற்றியை பெறமுடியாது, அதுதான் விளையாட்டின் தன்மை. என்ன செய்வது, கிரிக்கெட் குறித்து எதுவுமே தெரியாதவர்களிடம் எதையும் விளக்க முடியாது" என்று வேதனையுடன் தெரிவித்தார் .
லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை விமர்சித்து தான் கே.எல்.ராகுல் இவ்வாறு பேசியுள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
2024 ஆம் ஆண்டு லக்னோ அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் இருந்தார். அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி படுமோசமான தோல்வியை தழுவியது.
இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் மைதானத்தில் வைத்தே கடுமையாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து லக்னோ அணியில் இருந்து வெளியேறிய கே.எல். ராகுலை இந்தாண்டு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
- தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் 3 ஆம் இடத்தில் களமிறங்கினார்.
- வாஷிங்டன் சுந்தர் முதல் இன்னிங்சில் 29 ரன்களும் 2 ஆவது இன்னிங்சில் 31 ரன்களும் அடித்தார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வீழ்த்தியது. 15 வருடத்திற்குப் பிறகு இந்திய மண்ணில் தென்ஆப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்தியது.
இந்த டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக 3 ஆம் இடத்தில் இறங்கிய வாஷிங்டன் சுந்தர் முதல் இன்னிங்சில் 29 ரன்களும் 2 ஆவது இன்னிங்சில் 31 ரன்களும் அடித்து நம்பிக்கை தந்தார்.
இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தினேஷ் கார்த்திக்கிடம் வாஷிங்டன் சுந்தர் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "3 ஆம் இடத்தில் இறங்கி பேட்டிங் செய்வது மிகவும் சவாலானது. அந்த இடத்தில் பியூர் பேட்ஸ்மேன் மட்டுமே விளையாடுவார்கள். வாஷிங்டன் சுந்தர் ஒரு ஆல்ரவுண்டர், அவரிடம் பேட்டிங் டெக்னிக் இருந்தாலும், 3 ஆம் இடத்தில் இறங்கி விளையாடுவது சவாலானாதாக இருக்கும். ஒரு பேட்ஸ்மேன் 3 ஆம் இடத்தில் விளையாடவேண்டும் என்றால் அதற்கு அதிகமாக தயாராகவேண்டும். அவரால் பவுலிங், பேட்டிங் இரண்டையும் பேலன்ஸ் செய்ய முடியாது.. அவருடைய பந்துவீச்சு பாதிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
- மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய லானிங் 74 பந்துகளில் 135 ரன்கள் எடுத்தார்.
- மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக லானிங் விளையாடி வந்தார்.
ஆஸ்திரேலியாவில் மகளிர் பிக்பாஷ் தொடர் (WBBL) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் அணி 20 ஓவரில் 219 ரன்கள் எடுத்தது. இது WBBL வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச அணியின் ஸ்கோராகும்.
இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய லானிங் 74 பந்துகளில் 135 ரன்கள் எடுத்தார். இதில் 22 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். இது WBBL வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக ஆகும்.
இதற்கு முன்பு லிசெல் லீ (150*), மற்றும் கிரேஸ் ஹாரிஸ் (136*) மட்டுமே அதிக ரன்கள் எடுத்த முதல் இரண்டு வீராங்கனைகள் ஆவர்.
நடந்து வரும் WBBL-ல், அவர் நான்கு போட்டிகளில் 288 ரன்கள் எடுத்து, 163 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 96 சராசரியுடன் அபாரமான ஃபார்மில் உள்ளார்.
இதனால் நவம்பர் 27 அன்று டெல்லியில் நடைபெறும் மகளிர் பிரீமியர் லீக் (WPL 2026) ஏலத்தில் இவரை எடுக்க அனைத்து அணிகளும் போட்டி போடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக லானிங் இருந்து வந்தார். அவர் டெல்லி அணியை தொடர்ச்சியாக மூன்று இறுதிப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் 3 முறையும் அந்த அணி தோல்வியையே தழுவியது.
இந்நிலையில் ஏலத்திற்கு முன்பு அணிகள் ஒரு குறிப்பிட்ட வீராங்கனைகளை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் பட்சத்தில் லானிங் விடுவிக்கப்பட்டார். அவரை ஏன் விடுவித்தோம் என டெல்லி நிர்வாகம் இந்த போட்டியை பார்த்த பிறகு வருத்தப்பட்டிருக்கலாம்.
- முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
- 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் 22-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
அதன்படி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் 22-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கவுகாத்தியில் உள்ள காமாக்யா தேவி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.
- இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இரு அணிகள் பங்கேற்கும் 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் நேற்று கவுதாத்திக்கு புறப்பட்ட இந்திய அணி வீரர்கள் இன்று கவுகாத்திக்கு சென்றடைந்தனர். மேள தாளங்கள் முழங்க அவர்கள் வரவேற்கப்பட்டனர். கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டதில் இருந்து கவுகாத்திக்கு சென்றது வரை உள்ள வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
- வங்கதேச அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை ரஹீம் படைத்துள்ளார்.
- 100-வது போட்டியில் விளையாடிய ரஹீம் சதம் அடித்து அசத்தினார்.
அயர்லாந்து கிரிக்கெ அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இதில் முதலில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் வங்கதேச அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை முஷ்பிகுர் ரஹீம் படைத்துள்ளார்.
100-வது போட்டியில் விளையாடிய ரஹீம் சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
அதன்படி 100-வது போட்டியில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரஹீம் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அவர் 11-வது வீரராக சாதனை படைத்துள்ளார்.
100-வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய வீரர்கள் விவரம்:-
கோலின் கவுட்ரி (இங்கிலாந்து)
ஜாவேத் மியாண்டட் (பாகிஸ்தான்)
கார்டன் கிரீனிட்ஜ் (வெஸ்ட் இண்டீஸ்)
அலெக் ஸ்டீவர்ட் (இங்கிலாந்து)
இன்சமாம் உல் ஹக் (பாகிஸ்தான்)
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)
கிரேம் ஸ்மித் (தென் ஆப்பிரிக்கா)
ஹாஷிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா)
ஜோ ரூட் (இங்கிலாந்து)
டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)
முஷ்பிகுர் ரஹீம் (வங்கதேசம்)
டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ரஹீமின் 13-வது சதமாகும். இதன் மூலம் சக நாட்டு வீரர் மோமினுல் ஹக்கின் சாதனையை சமன் செய்துள்ளார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வங்கதேச வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






