என் மலர்
விளையாட்டு
- 19-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதுதியுள்ளது.
- ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடைபெறும் 19-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதியுள்ளது.
இரவு 7.30 மணிக்கு ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இதில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக நிதீஷ் குமார் ரெட்டி- 31, ஹென்ரிச் க்ளாசன்- 27, கம்மின்ஸ்- 22, அபிஷேக் ஷர்மா- 18 ரன்களும் எடுத்தனர்.
குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சில் சிராஜ்- 4, பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆட்டத்தின் முடிவில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 153 ரன்களை சன்ரைசர்ஸ் ஐதராபாத் இலக்காக நிர்ணயித்துள்ளது.
- 19-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதுகிறது.
- ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடைபெறும் 19-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதுகிறது.
இரவு 7.30 மணிக்கு ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸை சந்திக்கிறது.
இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இதனால், ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ள குஜராத்தின் வீறுநடைக்கு ஐதராபாத் முட்டுக்கட்டை போடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- 2008 ஐபிஎல் தொடங்கியதில் இருந்து தோனியின் பெற்றோர் சென்னை சேப்பாக்கம் வந்து போட்டியை பார்த்தது கிடையாது.
- எனக்கு 43 வயது, ஐபிஎல் 2025 முடிவதற்குள், எனக்கு 44 வயது இருக்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான எம்.எஸ். தோனி தனது ஓய்வு வதந்திகள் குறித்து மனம் திறந்துள்ளார்.
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் தோனியின் பெற்றோர் வருகை தந்திருந்தனர். இதுவரை, அதாவது (2008) ஐபிஎல் தொடங்கியதில் இருந்து தோனியின் பெற்றோர் சென்னை சேப்பாக்கம் வந்து போட்டியை பார்த்தது கிடையாது. இந்நிலையில் நேற்று அவர்கள் வந்திருந்ததால் தோனி தனது ஐபிஎல் லீக் வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக வதந்திகள் பரவின.
இந்நிலையில் சமீபத்திய பாட்காஸ்டில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த தோனி, "இல்லை, இப்போதைக்கு இல்லை. நான் இன்னும் ஐபிஎல் விளையாடுகிறேன். நான் அதை மிகவும் எளிமையாக எடுத்துக்கொள்கிறேன். நான் அதை ஒரு வருடத்திற்கு ஒரு முறை செய்கிறேன்.
எனக்கு 43 வயது, ஐபிஎல் 2025 முடிவதற்குள், எனக்கு 44 வயது ஆகியிருக்கும். எனவே அதன் பிறகு நான் விளையாடுவதா இல்லையா என்பதை முடிவு செய்ய எனக்கு 10 மாதங்கள் உள்ளன. ஆனால் முடிவு செய்வது நான் அல்ல, என் உடல்தான் முடிவு செய்கிறது. எனவே, இன்னும் ஒரு வருடம் இருக்கிறது, அதன் பிறகு பார்ப்போம்" என்று தெரிவித்தார்.
- ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் 4 போட்டிகளில் பும்ரா பங்கேற்கவில்லை.
- ஐபிஎல் 2-வது பாதியில் பும்ரா விளையாடுவார் என்று கூறப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட்டின் போது பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெறவில்லை. அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட வாய்ப்பு இல்லை எனவும் 2-வது பாதியில் விளையாடுவார் என்றும் கூறப்பட்டது.
இதனால், ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் 4 போட்டிகளில் பும்ரா பங்கேற்கவில்லை
இந்நிலையில், காயத்தில் இருந்து மீண்ட பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். இதனை மும்பை இந்தியன்ஸ் அணி வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
காயத்தில் இருந்து குணமடைந்து அணியில் இணைந்தாலும் நாளைய போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் தகவல் வெளியாகியுள்ளது.
- தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானை 44 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்த ஐதராபாத் அணி அதன் பிறகு லக்னோ, டெல்லி, கொல்கத்தாவிடம் வரிசையாக உதை வாங்கியது.
- தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோற்ற குஜராத் அணி அடுத்த ஆட்டங்களில் மும்பை, பெங்களூருவை துவம்சம் செய்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடைபெறும் 19-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதுகிறது. இரவு 7.30 மணிக்கு ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸை சந்திக்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானை 44 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்த ஐதராபாத் அணி அதன் பிறகு லக்னோ, டெல்லி, கொல்கத்தாவிடம் வரிசையாக உதை வாங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, கிளாசென், இஷான் கிஷன் என அதிரடி சூரர்கள் இருந்தும் பேட்டிங் ஒருசேர 'கிளிக்' ஆகாததன் விளைவு ஐதராபாத் அணி புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 120 ரன்னில் சுருண்டு மோசமாக தோற்ற ஐதராபாத் அணி தவறுகளை திருத்திக் கொண்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப முயற்சிக்கும்.
தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோற்ற குஜராத் அணி அடுத்த ஆட்டங்களில் மும்பை, பெங்களூருவை துவம்சம் செய்தது. அந்த அணியில் சாய் சுதர்சன் (74, 63 மற்றும் 49 ரன்), கேப்டன் கில், ஜோஸ் பட்லர், ரூதர்போர்டு சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் சாய் கிஷோர், முகமது சிராஜ் மிரட்டுகிறார்கள். ஆனால் 'சுழல் மன்னன்' ரஷித்கான் (3 ஆட்டத்தில் ஒரு விக்கெட்) தடுமாறுவது ஆச்சரியமளிக்கிறது. அவரும் விக்கெட் வேட்டை நடத்தினால் குஜராத் பந்து வீச்சு மேலும் வலுவடையும். 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ள குஜராத்தின் வீறுநடைக்கு ஐதராபாத் முட்டுக்கட்டை போடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
- இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் 2025 சீசனின் 18-வது ஆட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. நேஹல் வதேரா மட்டும் அதிரடியாக ஆடி 41 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்தார். இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் 50 ரன்கள் வித்தியாசத்தில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது சஞ்சு சாம்சன் கோபத்தில் "பேட்"டை தூக்கிப்போட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இதன் அரையிறுதியில் அமெரிக்காவின் அனிசிமோவா காயத்தால் விலகினார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், சக நாட்டு வீராங்கனை அமண்டா அனிசிமோவா உடன் மோதினார்.
இதில் சோபியா கெனின் 5-2 என முதல் செட்டில் முன்னிலை பெற்றிருந்தார். அப்போது அனிசிமோவா காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.
இதையடுத்து சோபியா கெனின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சோபியா கெனின், ஜெசிகா பெகுலாவை சந்திக்கிறார்.
- முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது.
- அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சண்டிகர்:
ஐபிஎல் 2025 சீசனின் 18-வது ஆட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. நேஹல் வதேரா மட்டும் அதிரடியாக ஆடி 41 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்தார். இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் 50 ரன்கள் வித்தியாசத்தில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது.
இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் அணி பெற்ற 32-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் ராஜஸ்தான் அணிக்கு அதிக வெற்றிகளை தேடித் தந்த கேப்டன் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் ஷேன் வார்னே 31 ஆட்டங்களில் வென்றதே இந்த வகையில் சாதனையாக இருந்தது.
- டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை தோல்வி அடைந்தது.
- பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 77 ரன்கள் அடித்தார்.
தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 25 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி அசத்தல் வெற்றியை பதிவுசெய்தது.
சண்டிகரில் நேற்று நடந்த 18-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்த டெல்லி அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
மற்ற இடங்களில் தலா 2 வெற்றி பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 3-வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 4-வது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5-வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 6-வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 7-வது இடத்திலும் உள்ளன
தலா ஒரு வெற்றி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் 8-வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 9-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 10-வது இடத்திலும் ரன்ரேட் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஹாட்ரிக் தோல்வி எதிரொலியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9வது இடத்துக்கு சரிந்துள்ளது. இதனால் கவலை அடைந்துள்ள ரசிகர்கள் சென்னை அணி இதிலிருந்து மீண்டு வரவேண்டும் என தெரிவித்தனர்.
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இதன் அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் ஜெசிகா 6-2 என முதல் செட்டை வென்றார். 2வது செட்டை அலெக்சாண்ட்ரோவா 6-2 என கைப்பற்றினார்.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 7-5 என ஜெசிகா பெகுலா வென்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தினார்.
- முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 205 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய பஞ்சாப் அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சண்டிகர்:
ஐபிஎல் 2025 சீசனின் 18-வது ஆட்டம் சண்டிகரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 26 பந்தில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ரியான் பராக் 23 பந்தில் தலா 3 பவுண்டரி, சிக்ஸ் உடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. முதல் ஓவரில் ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.
நேஹல் வதேரா மட்டும் அதிரடியாக ஆடி 41 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்தார். மேக்ஸ்வெல் 30 ரன்னில் அவுட்டானார். 5வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 88 ரன்கள் சேர்த்தது. மற்ற வீரர்கள் நிலைக்கவில்லை.
இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் 50 ரன்கள் வித்தியாசத்தில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது. நடப்பு தொடரில் பஞ்சாப் அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.
ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டும், சந்தீப் ஷர்மா, தீக்ஷனா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 205 ரன்களைக் குவித்தது.
சண்டிகர்:
ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டி சண்டிகரில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் களமிறங்கியது. ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்துகொண்டிருக்கும்போது அந்த அணியின் டிரஸ்சிங் ரூமில் ஜோப்ரா ஆர்ச்சர் குட்டித்தூக்கம் போட்டுக் கொண்டிருந்தார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது.
இந்நிலையில், 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. முதல் ஓவரை ஜோப்ரா ஆர்ச்சர் விசினார்.
முதல் ஓவரின் முதல் பந்தில் பிரியான்ஷு ஆர்யாவை டக் அவுட்டாக்கினார். தொடர்ந்து கடைசி பந்தில் ஷ்ரேயஸ் ஐயரை 10 ரன்னில் அவுட்டாக்கினார். ஒரே ஓவரில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதைக் கண்ட நெட்டிசன்கள், தூக்கம் முக்கியமுங்கோ... ஜோப்ரா ஆர்ச்சர் இதற்காகத்தான் குட்டித்தூக்கம் போட்டாரோ என இந்தப்ப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.






