என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிய கண்டத்தில் நாங்கள் அபாயகரமான அணி: ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் சொல்கிறார்
Byமாலை மலர்10 Sep 2019 1:20 PM GMT (Updated: 10 Sep 2019 1:20 PM GMT)
ஆசிய கண்ட சீதோஷ்ண நிலையில் நாங்கள் அபாயகரமான அணி என்று ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் அப்சர் சசாய் தெரிவித்துள்ளார்.
வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாட உத்வேகமாக இருக்கும் என ஆப்கானிஸ்தான் வீரர்கள் நம்புகிறார்கள்.
இந்நிலையில் ஆசிய கண்ட சீதோஷ்ண நிலையில் நாங்கள் அபாயகரமான அணி என்று ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் அப்சர் சசாய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அப்சர் சசாய் கூறுகையில் ‘‘உண்மையிலேயே நாங்கள் ஒரு டெஸ்ட் அணி நாடு என்ன நம்பிக்கையில் உள்ளோம். எங்களது நாட்டில் சிறந்த திறமை படைத்தவர்களாக உள்ளோம். உள்ளூர் லெவலில் முதல் தர போட்டிகளில் விளையாடி வருகிறோம். எங்கள் மண்ணில் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதனால் எங்களுடைய எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது.
டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட்டிற்கென தனித்தனி வீரர்கள் இருப்பது சிறப்பானது. குறிப்பாக, டெஸ்ட் போட்டிக்கென அதிக வீரர்கள் இருக்க வேண்டும். ஏனென்றால் இது எங்களுக்கு புதிய வடிவம். எங்களுடைய திறன்களில் அதிக அளவில் உழைப்பது அவசியம்.
இந்தியாவில் நாங்கள் பயிற்சி மேற்கொள்வது எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. ஆசிய கண்ட சீதோஷ்ண நிலையில் நாங்கள் அபாயகரமான அணி. தரமான சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள நாங்கள், பேட்டிங்கில் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடினால், தற்போதைய தினத்தில் நாங்கள் அபாயகரமான அணி என்பதை நம்புகிறோம்’’ என்றார்.
இந்நிலையில் ஆசிய கண்ட சீதோஷ்ண நிலையில் நாங்கள் அபாயகரமான அணி என்று ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் அப்சர் சசாய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அப்சர் சசாய் கூறுகையில் ‘‘உண்மையிலேயே நாங்கள் ஒரு டெஸ்ட் அணி நாடு என்ன நம்பிக்கையில் உள்ளோம். எங்களது நாட்டில் சிறந்த திறமை படைத்தவர்களாக உள்ளோம். உள்ளூர் லெவலில் முதல் தர போட்டிகளில் விளையாடி வருகிறோம். எங்கள் மண்ணில் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதனால் எங்களுடைய எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது.
டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட்டிற்கென தனித்தனி வீரர்கள் இருப்பது சிறப்பானது. குறிப்பாக, டெஸ்ட் போட்டிக்கென அதிக வீரர்கள் இருக்க வேண்டும். ஏனென்றால் இது எங்களுக்கு புதிய வடிவம். எங்களுடைய திறன்களில் அதிக அளவில் உழைப்பது அவசியம்.
இந்தியாவில் நாங்கள் பயிற்சி மேற்கொள்வது எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. ஆசிய கண்ட சீதோஷ்ண நிலையில் நாங்கள் அபாயகரமான அணி. தரமான சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள நாங்கள், பேட்டிங்கில் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடினால், தற்போதைய தினத்தில் நாங்கள் அபாயகரமான அணி என்பதை நம்புகிறோம்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X