என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஷ்லீ பார்டி
Byமாலை மலர்17 Aug 2019 9:22 AM GMT (Updated: 17 Aug 2019 9:22 AM GMT)
சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லீ பார்டி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லீ பார்டி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். காலிறுதி ஆட்டத்தில் இவர், கிரீஸ் நாட்டின் மரியா சக்காரியை 5-7, 6-2, 6-0 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின்மூலம், டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தை நெருங்கி உள்ளார் ஆஷ்லீ பார்டி. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், நவோமி ஒசாகாவிடம் இருந்து நம்பர்-1 இடத்தை தட்டிச் செல்வார்.
சின்சினாட்டி மாஸ்டர்ஸ் காலிறுதி ஆட்டத்தின்போது நவோமி ஒசாகாவின் முழங்காலில் காயம் ஏற்பட்டதால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் அவரை எதிர்த்து ஆடிய அமெரிக்க வீராங்கனை கெனின் எளிதாக அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், மெத்வதேவ், காஸ்கட், கோபின் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X