என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரை பாந்தர்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
Byமாலை மலர்11 Aug 2019 5:57 PM GMT (Updated: 11 Aug 2019 5:57 PM GMT)
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.
நெல்லை:
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில், மதுரை பாந்தர்ஸ் மற்றும் காஞ்சி வீரன்ஸ் அணிகளுக்கு இடையேயான வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து காஞ்சி வீரன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக விஷால் வைத்யா மற்றும் லோகேஷ்வர் ஆகியோர் களமிறங்கினர். இதில் விஷால் வைத்யா 4 ரன்னிலும், லோகேஷ்வர் ரன் எதுவும் எடுக்காமலும் கேட்ச் ஆகி ஏமாற்றம் அளித்தனர். பின்னர் களமிறங்கிய பாபா அபராஜித் 13 ரன்னிலும், பிரான்சிஸ் ரோக்கின்ஸ் 4 ரன்னிலும், ஆர்.சதீஷ் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த மொகித் ஹரிஹரன், சஞ்சய் யாதவ் உடன் கைக்கோர்க்க அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. இதில் மொகித் ஹரிஹரன் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் காஞ்சி வீரன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது. கடைசியில், பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்த சஞ்சய் யாதவ் 77 ரன்களுடனும், ஹரிஷ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
மதுரை பாந்தர்ஸ் அணியில் அபிஷேக் தன்வார் மற்றும் ரஹில் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கிரண் ஆகாஷ் மற்றும் செல்வகுமரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக அருண் கார்த்திக் மற்றும் சரத்ராஜ் ஆகியோர் களமிறங்கினர். இதில் சரத்ராஜ் 2 ரன்னில் கேட்ச் ஆக, அடுத்து ஜோடி சேர்ந்த அருண் கார்த்திக் மற்றும் ஷிஜித் சந்திரன் அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். இதில் ஷிஜித் சந்திரன் 21 ரன்னிலும், அடுத்து வந்த நிலேஷ் சுப்பிரமணியன் 8 ரன்னிலும் கேட்ச் ஆக, தொடக்க வீரராக களமிறங்கி அரைசதம் அடித்த அருண் கார்த்திக் 64 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதற்கு பின் ஆகாஷ் சும்ரா 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் மதுரை பாந்தர்ஸ் அணி ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை ( 152 ரன்கள்) எட்டியது. கடைசியில், சிறப்பாக ஆடிய ஜெ. கவுசிக் 26 ரன்னுடனும், அபிஷேக் தன்வார் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். காஞ்சி வீரன்ஸ் அணியில் ஹரிஷ், ஆஷிக் ஸ்ரீனிவாஸ், சஞ்சய் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதன்மூலம் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில், மதுரை பாந்தர்ஸ் மற்றும் காஞ்சி வீரன்ஸ் அணிகளுக்கு இடையேயான வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து காஞ்சி வீரன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக விஷால் வைத்யா மற்றும் லோகேஷ்வர் ஆகியோர் களமிறங்கினர். இதில் விஷால் வைத்யா 4 ரன்னிலும், லோகேஷ்வர் ரன் எதுவும் எடுக்காமலும் கேட்ச் ஆகி ஏமாற்றம் அளித்தனர். பின்னர் களமிறங்கிய பாபா அபராஜித் 13 ரன்னிலும், பிரான்சிஸ் ரோக்கின்ஸ் 4 ரன்னிலும், ஆர்.சதீஷ் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த மொகித் ஹரிஹரன், சஞ்சய் யாதவ் உடன் கைக்கோர்க்க அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. இதில் மொகித் ஹரிஹரன் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் காஞ்சி வீரன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது. கடைசியில், பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்த சஞ்சய் யாதவ் 77 ரன்களுடனும், ஹரிஷ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
மதுரை பாந்தர்ஸ் அணியில் அபிஷேக் தன்வார் மற்றும் ரஹில் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கிரண் ஆகாஷ் மற்றும் செல்வகுமரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக அருண் கார்த்திக் மற்றும் சரத்ராஜ் ஆகியோர் களமிறங்கினர். இதில் சரத்ராஜ் 2 ரன்னில் கேட்ச் ஆக, அடுத்து ஜோடி சேர்ந்த அருண் கார்த்திக் மற்றும் ஷிஜித் சந்திரன் அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். இதில் ஷிஜித் சந்திரன் 21 ரன்னிலும், அடுத்து வந்த நிலேஷ் சுப்பிரமணியன் 8 ரன்னிலும் கேட்ச் ஆக, தொடக்க வீரராக களமிறங்கி அரைசதம் அடித்த அருண் கார்த்திக் 64 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதற்கு பின் ஆகாஷ் சும்ரா 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் மதுரை பாந்தர்ஸ் அணி ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை ( 152 ரன்கள்) எட்டியது. கடைசியில், சிறப்பாக ஆடிய ஜெ. கவுசிக் 26 ரன்னுடனும், அபிஷேக் தன்வார் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். காஞ்சி வீரன்ஸ் அணியில் ஹரிஷ், ஆஷிக் ஸ்ரீனிவாஸ், சஞ்சய் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதன்மூலம் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X