என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எதிர்காலத்தில் நானும் நிச்சயம் இப்படி ஆவேன்... -சவுரவ் கங்குலி
Byமாலை மலர்3 Aug 2019 6:16 AM GMT (Updated: 3 Aug 2019 6:16 AM GMT)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது என்ன? என்பதை பார்ப்போம்.
புது டெல்லி:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் இருந்து கவனிக்கத்தக்க அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்து கொல்கத்தாவில் கங்குலி உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
ஐபிஎல், சிஏபி, தொலைக்காட்சி வர்ணனை என நான் மேற்கொள்ளும் பணிகளை முதலில் நிறைவு செய்கிறேன். ஏதாவது ஒரு கட்டத்தில் நிச்சயம் இந்திய பயி்ற்சியாளராவேன். நிச்சயமாக எனக்கு ஆர்வம் உள்ளது. எதிர்காலத்தில் ஆக வேண்டும் என்பதில் நாட்டம் உள்ளது.
இப்போது தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களில் பெரிய பெயர்கள் எதுவும் இடம்பெறவில்லை. இப்போதைய தேர்வுக்கு ஜெயவர்தனே விண்ணப்பிப்பார் என்று எதிர் பார்த்தேன். ஆனால் அவர் இன்னும் விண்ணப்பிக்கவில்லை.
தேர்வுக்குழு என்ன முடிவெடுக்கும் என்று எனக்கு தெரியவில்லை. சாஸ்திரி பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா? என்பது பற்றி என் கருத்தை நான் இப்போதைக்கு நிறுத்தி வைக்கிறேன். அதுகுறித்து கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது.
பயிற்சியாளரை தீர்மானிக்கும் அமைப்பு முறையிலிருந்து வெகுதூரம் விலகி நிற்கிறேன். இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி வலுவாகவே உள்ளது. இந்தியாவிற்கு சவாலான அளவிலே போட்டிகள் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் இருந்து கவனிக்கத்தக்க அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்து கொல்கத்தாவில் கங்குலி உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
ஐபிஎல், சிஏபி, தொலைக்காட்சி வர்ணனை என நான் மேற்கொள்ளும் பணிகளை முதலில் நிறைவு செய்கிறேன். ஏதாவது ஒரு கட்டத்தில் நிச்சயம் இந்திய பயி்ற்சியாளராவேன். நிச்சயமாக எனக்கு ஆர்வம் உள்ளது. எதிர்காலத்தில் ஆக வேண்டும் என்பதில் நாட்டம் உள்ளது.
நிச்சயமாக, பயிற்சியாளராக எனக்கும் ஆர்வமுள்ளது. இருப்பினும் இந்த காலக்கட்டத்தில் இல்லை. இன்னும் ஒரு கட்டம் போகட்டும் அப்போது பயிற்சியாளர் களத்தில் என்னுடைய பெயரையும் இடம்பெற செய்வேன். இப்போது பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டுள்ளேன்.
இப்போது தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களில் பெரிய பெயர்கள் எதுவும் இடம்பெறவில்லை. இப்போதைய தேர்வுக்கு ஜெயவர்தனே விண்ணப்பிப்பார் என்று எதிர் பார்த்தேன். ஆனால் அவர் இன்னும் விண்ணப்பிக்கவில்லை.
தேர்வுக்குழு என்ன முடிவெடுக்கும் என்று எனக்கு தெரியவில்லை. சாஸ்திரி பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா? என்பது பற்றி என் கருத்தை நான் இப்போதைக்கு நிறுத்தி வைக்கிறேன். அதுகுறித்து கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது.
பயிற்சியாளரை தீர்மானிக்கும் அமைப்பு முறையிலிருந்து வெகுதூரம் விலகி நிற்கிறேன். இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி வலுவாகவே உள்ளது. இந்தியாவிற்கு சவாலான அளவிலே போட்டிகள் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X