என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோபா அமெரிக்கா கால்பந்து: வெறிச்சோடி கிடக்கும் கேலரி
Byமாலை மலர்26 Jun 2019 12:35 PM GMT (Updated: 26 Jun 2019 12:35 PM GMT)
பிரேசிலில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பெரும்பாலான போட்டியின்போது கேலரிகள் வெறிச்சோடி கிடந்தது.
தென்அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது. போட்டிக்கான மைதானங்கள் சரியில்லை என்று ஏற்கனவே வீரர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதை சமாளிப்பதற்குள் போட்டியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு, போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என்ற விமர்சனம் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
தொடரின் தொடக்க ஆட்டத்தில் பிரேசில் பொலிவியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியின்போது டிக்கெட் விற்பனை மூலம் 5.7 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்தது. அதன்பின் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற உருகுவே - சிலி ஆட்டத்தைக் காண 58 ஆயிரம் ரசிகர்கள் குவிந்தனர்.
ஆனால், ஜப்பான் - ஈக்வடார் இடையிலான போட்டியை பார்க்க வெறும் 2100 ரசிகர்கள் மட்டுமே வந்திருந்திருந்தனர். இதனால் 7600 ரசிகர்களை இலவசமாக போட்டியை காண அனுமதித்தது போட்டி நிர்வாகம்.
தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. நாக்அவுட் சுற்று தொடங்கும்போது இந்த பிரச்சனை சரியாகிவிடும் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X