என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்கள் கிரிக்கெட்: 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட்டில் வீழ்த்தியது இந்தியா
Byமாலை மலர்25 Feb 2019 11:43 AM GMT (Updated: 25 Feb 2019 11:43 AM GMT)
வீராங்கனைகள் கோஸ்வாமி, பாண்டே ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. #INDWvENGW
இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய வீராங்கனைகள் கோஸ்வாமி, ஷிகா பாண்டே ஆகியோர் சிறப்பாக பந்து வீசி தலா நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்ற இங்கிலாந்து அணி 161 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் ஸ்கிவர் அதிகபட்சமாக 85 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை ரோட்ரிக்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஸ்மிரிதி மந்தனா 63 ரன்கள் குவித்து சிறப்பான அடித்தளம் அமைத்தார். பூனம் ரவுத் 32 ரன்களும், கேப்டன் மிதலி ராஜ் 47 ரன்களும் சேர்க்க இந்தியா 41.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய வீராங்கனைகள் கோஸ்வாமி, ஷிகா பாண்டே ஆகியோர் சிறப்பாக பந்து வீசி தலா நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்ற இங்கிலாந்து அணி 161 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் ஸ்கிவர் அதிகபட்சமாக 85 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை ரோட்ரிக்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஸ்மிரிதி மந்தனா 63 ரன்கள் குவித்து சிறப்பான அடித்தளம் அமைத்தார். பூனம் ரவுத் 32 ரன்களும், கேப்டன் மிதலி ராஜ் 47 ரன்களும் சேர்க்க இந்தியா 41.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X