search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: 9 ரன்னில் சதத்தை தவறவிட்ட ஷுப்மான் கில்- அன்மோல்ப்ரீத் சிங் அபார சதம்
    X

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: 9 ரன்னில் சதத்தை தவறவிட்ட ஷுப்மான் கில்- அன்மோல்ப்ரீத் சிங் அபார சதம்

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இளம் வீரரான ஷுப்மான் கில் 91 ரன்கள் சேர்த்து சதத்தை தவறவிட்ட நிலையில், அன்மோல்ப்ரீத் சிங் சதம் விளாசினார். #RanjiTrophy
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் பெங்கால் - பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த பெங்கால் 187 ரன்னில் சுருண்டது.

    பின்னர் பஞ்சாப் முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் பஞ்சாப் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மான் கில் 36 ரன்னுடனும், அன்மோல்ப்ரீத் சிங் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மான் கில் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் அன்மோல்ப்ரீத் சிங் சதம் அடித்து இன்றைய ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இருவரின் ஆட்டத்தால் பஞ்சாப் 2-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்துள்ளது. அன்மோல்ப்ரீத் சிங் 124 ரன்னுடனும், சவுத்ரி 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×