என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: மும்பையை இன்னிங்ஸ் மற்றும் 145 ரன் வித்தியாசத்தில் பந்தாடியது விதர்பா
Byமாலை மலர்2 Jan 2019 10:54 AM GMT (Updated: 2 Jan 2019 10:54 AM GMT)
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் மும்பையை இன்னிங்ஸ் மற்றும் 145 ரன் வித்தியாசத்தில் பந்தாடியது விதர்பா. #RanjiTrophy
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் கடந்த 30-ந்தேதி தொடங்கிய ஆட்டம் ஒன்றில் மும்பை - விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற விதர்பா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரரும் கேப்டனும் ஆன பாசல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான டைடு உடன் வாசிம் ஜாபர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டைடு 95 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். வாசிம் ஜாபர் சிறப்பாக விளையாடி 178 ரன்கள் குவித்தார். கணேஷ் சதிஷ் 90 ரன்களும், மொகித் கேல் 68 ரன்களும் சேர்க்க இருவரின் ஆட்டத்தால் விதர்பா முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்தது.
பின்னர் மும்பை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் பிஸ்டா 64 ரன்களும், ரஞ்சானே 52 ரன்களும், முத்கர் 62 (அவுட் இல்லை) ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியே மும்பை 252 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.
259 ரன்கள் பின்தங்கிய நிலையில் மும்பை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. விதர்பாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 114 ரன்னில் சுருண்டது. இதனால் விதர்பா இன்னிங்ஸ் மற்றும் 145 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விதர்வா வீரர் சர்வாத் 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
மற்றொரு தொடக்க வீரரான டைடு உடன் வாசிம் ஜாபர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டைடு 95 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். வாசிம் ஜாபர் சிறப்பாக விளையாடி 178 ரன்கள் குவித்தார். கணேஷ் சதிஷ் 90 ரன்களும், மொகித் கேல் 68 ரன்களும் சேர்க்க இருவரின் ஆட்டத்தால் விதர்பா முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்தது.
பின்னர் மும்பை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் பிஸ்டா 64 ரன்களும், ரஞ்சானே 52 ரன்களும், முத்கர் 62 (அவுட் இல்லை) ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியே மும்பை 252 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.
259 ரன்கள் பின்தங்கிய நிலையில் மும்பை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. விதர்பாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 114 ரன்னில் சுருண்டது. இதனால் விதர்பா இன்னிங்ஸ் மற்றும் 145 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விதர்வா வீரர் சர்வாத் 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X