search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெஸ்சிக்கு நேரம் கொடுக்க வேண்டும்- அர்ஜென்டினா முன்னாள் வீரர் சொல்கிறார்
    X

    மெஸ்சிக்கு நேரம் கொடுக்க வேண்டும்- அர்ஜென்டினா முன்னாள் வீரர் சொல்கிறார்

    சர்வதேச அணியில் விளையாடுவது குறித்து முடிவு எடுக்க மெஸ்சிக்கு நேரம் கொடுக்க வேண்டும் என அர்ஜென்டினா முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார். #Messi
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்றது. உலகக்கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினா காலிறுக்கு முந்தைய சுற்றோடு வெளியேறியது. இதனால் அந்த அணியின் கேப்டனாக மெஸ்சி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் மெஸ்சி தனது சர்வதேச கால்பந்து விளையாட்டு குறித்து ஏதும் பேசாமல் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் சர்வதேச போட்டி குறித்து முடிவு எடுக்க மெஸ்சிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் அர்ஜென்டினா வீரர் சேவியர் சவியோலா தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சேவியர் சவியோலா கூறுகையில் ‘‘ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் நாம் எதிர்பார்த்தபடி அர்ஜென்டினா அணி விளையாடவில்லை என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். மெஸ்சிக்கு சற்று ஓய்வு தேவை. அர்ஜென்டினா அணிக்காக விளையாட விரும்புகிறாரா? என்பதை முடிவு செய்ய அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும். அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், அணிக்கு திரும்புவது அவரது சொந்த விஷயம்’’ என்றார்.
    Next Story
    ×