search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அலஸ்டைர் குக் (பழைய படம்)
    X
    அலஸ்டைர் குக் (பழைய படம்)

    ஓய்வு முடிவை தைரியமாக சொல்ல சில பீர்கள் தேவைப்பட்டது- அலஸ்டைர் குக்

    சக வீரர்களிடம் ஓய்வு முடிவை தெரிவிக்கும்போது அழுது விட்டோன். அழுகையை அடக்க சில பீர்கள் தேவைப்பட்டது என குக் தெரிவித்துள்ளார். #AlastairCook
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க பேட்ஸ்மேன் ஆக திகழ்பவர் அலஸ்டைர் குக். இவர் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்கும் இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெருகிறார்.

    ஓய்வு குறித்து சக வீரர்களிடம் அறிவிக்கும்போது ஆழுகையை அடக்குவதற்கு சில பீர்கள் தேவைப்பட்டது என்று குக் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து அலஸ்டைர் குக் கூறுகையில் ‘‘எனக்கு அங்கு சில பீர்கள் தேவைப்பட்டது. இல்லாவிடில், நான் ஏற்கனவே அழுததைவிட கூடுதலாக அழுதிருப்பேன். கடந்த 6 மாதங்களாக எனது மனத்திற்குள் ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவு ஓடிக்கொண்டே இருந்தது. மனதளவில் எனக்கு கடினமாக இருந்தது’’ என்றார்.
    Next Story
    ×