என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விராட் கோலி, புஜாரா நிதான ஆட்டம் - உணவு இடைவேளை வரை இந்தியா 100/2
Byமாலை மலர்31 Aug 2018 12:52 PM GMT (Updated: 31 Aug 2018 12:52 PM GMT)
சவுத்தாம்டன் டெஸ்டின் இரண்டாம் நாளில் விராட் கோலி, புஜாரா ஆகியோரின் நிதான ஆட்டத்தால் இந்திய அணி உணவு இடைவேளை வரை 2 விக்கெட்டுக்களை இழந்து 100 ரன்கள் குவித்துள்ளது. #INDvsENG
லண்டன் :
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக வீசி இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினர். இதனால் இங்கிலாந்து அணி 86 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அதன்பின் மொயின் அலியுடன் ஜோடி சேர்ந்த குர்ரன் இந்திய வீரர்களில் விக்கெட் வேட்டைக்கு தடை போட்டார். இந்த ஜோடி 81 ரன்கள் சேர்த்த நிலையில் மொயின் அலி 40 ரன்னில் வெளியேறினார். இறுதியில், குர்ரன் 78 ரன்கள் எடுத்த நிலையில் அஷ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 76.4 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். முதல் நாளில் 4 ஓவர்களே வீசப்பட்ட நிலையில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், ராகுல் 11 ரன்னுடனும், தவான் 3 ரன்னுடனும் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கினார்கள். ராகுல் மேற்கொண்டு 8 ரன்களே சேர்த்து 19 ரன்களில் பிராட் வீசிய பந்தில் எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்ததாக ஆட்டத்தின் 17-வது ஓவரில் ஷிகர் தவானும் பிராட் பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பியதால் இந்திய அணி 50 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்கள் இழந்து தடுமாறியது.
3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புஜாராவும், விராட் கோலியும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர், இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை இருவரும் கணித்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால், இந்திய அணி உணவு இடைவேளை வரை 100 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்கள் இழந்துள்ளது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியை விட இந்தியா 146 ரன்கள் பிந்தங்கியுள்ளது. இங்கிலாந்து தரப்பில் பிராட் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். #INDvsENG
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக வீசி இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினர். இதனால் இங்கிலாந்து அணி 86 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அதன்பின் மொயின் அலியுடன் ஜோடி சேர்ந்த குர்ரன் இந்திய வீரர்களில் விக்கெட் வேட்டைக்கு தடை போட்டார். இந்த ஜோடி 81 ரன்கள் சேர்த்த நிலையில் மொயின் அலி 40 ரன்னில் வெளியேறினார். இறுதியில், குர்ரன் 78 ரன்கள் எடுத்த நிலையில் அஷ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 76.4 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். முதல் நாளில் 4 ஓவர்களே வீசப்பட்ட நிலையில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், ராகுல் 11 ரன்னுடனும், தவான் 3 ரன்னுடனும் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கினார்கள். ராகுல் மேற்கொண்டு 8 ரன்களே சேர்த்து 19 ரன்களில் பிராட் வீசிய பந்தில் எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்ததாக ஆட்டத்தின் 17-வது ஓவரில் ஷிகர் தவானும் பிராட் பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பியதால் இந்திய அணி 50 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்கள் இழந்து தடுமாறியது.
3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புஜாராவும், விராட் கோலியும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர், இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை இருவரும் கணித்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால், இந்திய அணி உணவு இடைவேளை வரை 100 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்கள் இழந்துள்ளது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியை விட இந்தியா 146 ரன்கள் பிந்தங்கியுள்ளது. இங்கிலாந்து தரப்பில் பிராட் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். #INDvsENG
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X