search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விம்பிள்டன் தகுதிச் சுற்றில் ராம்குமார், பிரஜ்னேஷ், சுமித் நகல் தோல்வி
    X

    விம்பிள்டன் தகுதிச் சுற்றில் ராம்குமார், பிரஜ்னேஷ், சுமித் நகல் தோல்வி

    கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டனுக்கான தகுதிச் சுற்றில் இந்திய வீரர்கள் ராம்குமார், பிரஜ்னேஷ் தோல்வியை சந்தித்தனர். #wimbledon2018
    கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஜூலை 2-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவிற்கான தகுதிச் சுற்று நேற்று தொடங்கியது.

    இதில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் இத்தாலியைச் சேர்ந்த சிமோன் பொல்லேலியை எதிர்கொண்டார். இதில் 3-6, 4-6 எனத் தோல்வியடைந்து வெளியேறினார்

    சுமித் நகல் போலந்தின் கமில் மஜ்ச்ர்சாக்கை எதிர்கொண்டார். இதில் சுமித் நகல் 2-6, 0-6 எனத் தோல்வியடைந்தார்.



    பிரஜ்னேஷ் ஜெர்மனியைச் சேர்ந்த தோபியாஸ் கம்கேவை எதிர்கொண்டார். இதில் பிரஜ்னேஷ் 1-6, 4-6 என படுதோல்வியடைந்தார்.
    Next Story
    ×