search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐதராபாத்தில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
    X

    ஐதராபாத்தில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 4 பேரை ஐதராபாத் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளது. #IPLbetting
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஐபிஎல் போட்டிகளை வைத்து கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து இரண்டு இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அதில், இணையதளத்தை பயன்படுத்தி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

    சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து ஐந்து செல்போனகள், ஒரு டி.வி மற்றும் ரூ.84,350 ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். அவர்கள் நான்கு பேர் மீதும் இரண்டு வெவ்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #IPLbetting
    Next Story
    ×