என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி மும்பையில் நடக்கிறது
Byமாலை மலர்26 July 2017 4:46 AM GMT (Updated: 26 July 2017 4:46 AM GMT)
பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் போட்டியை (டபிள்யூ.டி.ஏ.) மும்பையில் நடத்த மராட்டிய மாநில டென்னிஸ் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
புதுடெல்லி :
சென்னையில் 21 ஆண்டுகளாக நடந்து வந்த சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டியான சென்னை ஓபன் மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த போட்டி புனேயில் மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி என்ற பெயரில் நடைபெறும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் போட்டியை (டபிள்யூ.டி.ஏ.) மும்பையில் நடத்த மராட்டிய மாநில டென்னிஸ் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டில் புனேயில் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி (ராயல் இந்தியன் ஓபன்) நடைபெற்றது. அதன் பிறகு அந்த போட்டி அங்கு நடைபெறவில்லை.
தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி மும்பையில் வருகிற நவம்பர் மாதம் நடத்தப்படுகிறது. மும்பை ஓபன் டென்னிஸ் என்ற பெயரில் அரங்கேற இருக்கும் இந்த போட்டியில் உலக தர வரிசையில் 50 இடங்களுக்குள் இருக்கும் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்திய வீராங்கனைகள் 4 பேருக்கு நேரடியாக பிரதான சுற்றில் விளையாட ‘வைல்டு கார்டு’ வழங்கப்படும்.
இதன் மூலம் இந்திய வீராங்கனைகள் நல்ல அனுபவத்தை பெறுவதுடன், தங்களது தரவரிசை புள்ளிகளை உயர்த்தி அடுத்த கட்டத்துக்கு முன்னேற வாய்ப்பாக அமையும் என்று மராட்டிய மாநில டென்னிஸ் சங்க பொதுச்செயலாளர் சுந்தர் அய்யர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 21 ஆண்டுகளாக நடந்து வந்த சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டியான சென்னை ஓபன் மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த போட்டி புனேயில் மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி என்ற பெயரில் நடைபெறும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் போட்டியை (டபிள்யூ.டி.ஏ.) மும்பையில் நடத்த மராட்டிய மாநில டென்னிஸ் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டில் புனேயில் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி (ராயல் இந்தியன் ஓபன்) நடைபெற்றது. அதன் பிறகு அந்த போட்டி அங்கு நடைபெறவில்லை.
தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி மும்பையில் வருகிற நவம்பர் மாதம் நடத்தப்படுகிறது. மும்பை ஓபன் டென்னிஸ் என்ற பெயரில் அரங்கேற இருக்கும் இந்த போட்டியில் உலக தர வரிசையில் 50 இடங்களுக்குள் இருக்கும் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்திய வீராங்கனைகள் 4 பேருக்கு நேரடியாக பிரதான சுற்றில் விளையாட ‘வைல்டு கார்டு’ வழங்கப்படும்.
இதன் மூலம் இந்திய வீராங்கனைகள் நல்ல அனுபவத்தை பெறுவதுடன், தங்களது தரவரிசை புள்ளிகளை உயர்த்தி அடுத்த கட்டத்துக்கு முன்னேற வாய்ப்பாக அமையும் என்று மராட்டிய மாநில டென்னிஸ் சங்க பொதுச்செயலாளர் சுந்தர் அய்யர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X