search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் சிபுல்கோவா அதிர்ச்சி தோல்வி
    X

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் சிபுல்கோவா அதிர்ச்சி தோல்வி

    ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சுலோவக்கியா வீராங்கனை சிபுல்கோவா ஓசியன் டோடினிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
    மாட்ரிட் :

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் சுலோவக்கியா வீராங்கனை சிபுல்கோவா, 63-ம் நிலை வீராங்கனையான ஓசியன் டோடினை (பிரான்ஸ்) எதிர்கொண்டார்.

    இதில் சிபுல்கோவா 2-6, 4-6 என்ற நேர்செட்டில் ஓசியன் டோடினிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), குஸ்னெட்சோவா (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.



    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் நிகோலஸ் அல்மாக்ரோவை (ஸ்பெயின்) தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    மற்ற ஆட்டங்களில் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), தாமஸ் பெர்டிச் (செக் குடியரசு), நிஷிகோரி (ஜப்பான்), மிலோஸ் ராவ்னிச் (கனடா) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
    Next Story
    ×