என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி அபார வெற்றி
Byமாலை மலர்26 April 2017 3:17 AM GMT (Updated: 26 April 2017 3:17 AM GMT)
பாகிஸ்தான் - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கிங்ஸ்டன் :
பாகிஸ்தான் - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 286 ரன்களில் ஆல்-அவுட் ஆனதை தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 3-வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்திருந்தது.
4-வது நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 407 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. கேப்டன் மிஸ்பா உல்-ஹக் 99 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் சதம் அடிக்க முடியாமல் 99 ரன்னுடன் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்றது இதுவே முதல்முறையாகும்.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா.
121 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 4-வது நாள் இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் கடைசி நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 152 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 32 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் 10.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 போட்டி கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் 30-ந்தேதி பிரிட்ஜ்டவுனில் தொடங்குகிறது.
பாகிஸ்தான் - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 286 ரன்களில் ஆல்-அவுட் ஆனதை தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 3-வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்திருந்தது.
4-வது நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 407 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. கேப்டன் மிஸ்பா உல்-ஹக் 99 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் சதம் அடிக்க முடியாமல் 99 ரன்னுடன் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்றது இதுவே முதல்முறையாகும்.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா.
121 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 4-வது நாள் இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் கடைசி நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 152 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 32 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் 10.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 போட்டி கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் 30-ந்தேதி பிரிட்ஜ்டவுனில் தொடங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X