என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மசாலா டெஸ்ட்: 137 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா - வெற்றியின் விளிம்பில் இந்தியா
Byமாலை மலர்27 March 2017 10:50 AM GMT (Updated: 27 March 2017 10:50 AM GMT)
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி 137 ரன்களுக்கு சுருண்டு, இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 106 ரன்களை நிர்னயித்துள்ளது.
தர்மசாலா:
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் சதம் (111) அடித்தார். வார்னர், வடே அரைசதம் அடித்தனர்.
இந்திய அணி சார்பில் புதுமுக வீரர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் முரளி விஜய், லோகேஷ் ராகுல் தொடர்ந்து விளையாடினர்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களை எடுத்த நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடர்ந்தது. ஜடேஜா 63 ரன்களிலும், சாஹா 31 ரன்களிலும் அவுட் ஆனார்கள். பின்னர் களமிறங்கிய வீரர்கள் நீண்ட நேரம் நிலைத்து ஆடாததால் இந்திய அணி 332 ரன்களில் ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நேதன் லையன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர்கள் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், ஹாசில்வுட் மற்றும் ஓ கீபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து 32 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறினர். குறிப்பாக இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்ப மேக்ஸ்வெல் மட்டும் பொறுமையாக விளையாடி 45 ரன்களை சேர்த்தார்.
இறுதிகட்டத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பெவிலியன் நோக்கி நடையை கட்டினர். ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 137 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சாளர்கள் தரப்பில் ஜடேஜா, உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதம் உள்ளதால் இந்தியாவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் சதம் (111) அடித்தார். வார்னர், வடே அரைசதம் அடித்தனர்.
இந்திய அணி சார்பில் புதுமுக வீரர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் முரளி விஜய், லோகேஷ் ராகுல் தொடர்ந்து விளையாடினர்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களை எடுத்த நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடர்ந்தது. ஜடேஜா 63 ரன்களிலும், சாஹா 31 ரன்களிலும் அவுட் ஆனார்கள். பின்னர் களமிறங்கிய வீரர்கள் நீண்ட நேரம் நிலைத்து ஆடாததால் இந்திய அணி 332 ரன்களில் ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நேதன் லையன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர்கள் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், ஹாசில்வுட் மற்றும் ஓ கீபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து 32 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறினர். குறிப்பாக இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்ப மேக்ஸ்வெல் மட்டும் பொறுமையாக விளையாடி 45 ரன்களை சேர்த்தார்.
இறுதிகட்டத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பெவிலியன் நோக்கி நடையை கட்டினர். ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 137 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சாளர்கள் தரப்பில் ஜடேஜா, உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதம் உள்ளதால் இந்தியாவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X