என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
Byமாலை மலர்5 Dec 2016 3:55 AM GMT (Updated: 5 Dec 2016 3:55 AM GMT)
திருச்சியில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருச்சி :
திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் கடந்த 30-ந்தேதி நடந்தன. தொடர்ந்து மற்ற பிரிவு போட்டிகள் நேற்று நடந்தன. இதில் டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக், நீச்சல், குத்துசண்டை உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வீரர், வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி பிரிவுகளாக போட்டிகள் நடந்தன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாலையில் நடந்தது. ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு கலியமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
விழாவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் புண்ணியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அடுத்து மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் கடந்த 30-ந்தேதி நடந்தன. தொடர்ந்து மற்ற பிரிவு போட்டிகள் நேற்று நடந்தன. இதில் டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக், நீச்சல், குத்துசண்டை உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வீரர், வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி பிரிவுகளாக போட்டிகள் நடந்தன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாலையில் நடந்தது. ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு கலியமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
விழாவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் புண்ணியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அடுத்து மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X