என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • விஸ்வநாதன் நகர் பகுதி மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.
    • எம்.ஜி. ரோடு மேற்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை குடிநீர் உட்கோட்டம், வடக்கு பிரிவுக்குட்பட்ட விஸ்வநாதன் நகர் பகுதி மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.

    இதனையொட்டி வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணி வரை மாணிக்க முதலியார்தோட்டம், தெபேசான்பேட், விஸ்வநாதன் நகர், லூர்து நகர், எம்.ஜி. ரோடு மேற்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மாகியில் மலையாள மொழியிலும், ஏனாமில் தெலுங்கிலும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
    • அனைத்து போலீஸ் நிலையங்களிலும் அந்தந்த பிராந்தியங்களில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் கடந்த மே மாதம் டெல்லி சென்றபோது உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

    அப்போது புதிதாக அமல்படுத்தப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைபடுத்துவதை கண்காணிக்கவும் அதில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் அறிவுறுத்தினார்.

    மேலும் புதுச்சேரி மாநிலத்தில் பிராந்திய மொழிகளில் போலீஸ் நிலையங்களில் எஃப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் புதுச்சேரி, காரைக்காலில் தமிழிலும், மாகியில் மலையாள மொழியிலும், ஏனாமில் தெலுங்கிலும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    ஆனால் இதனை ஒருசில போலீஸ் நிலையங்கள் தவிர பெரும்பாலான போலீஸ் நிலையங்கள் பின்பற்றாமல் இருந்து வந்தன.

    இந்தநிலையில் புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி. ஷாலினி சிங், புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் எஃப்.ஐ.ஆர். தமிழில் பதிவு செய்ய வேண்டும் என கண்டிப்புடன் கூறியுள்ளார்.

    அதன்படி புதுச்சேரி, காரைக்காலில் தமிழிலும், மாகியில் மலையாளத்திலும், ஏனாமில் தெலுங்கிலும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். இதனால் பொதுமக்கள் எளிதாக புரிந்து கொள்வதுடன், வெளிப்படைத்தன்மையும் இருக்கும்.

    எனவே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் அந்தந்த பிராந்தியங்களில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

    • புதுச்சேரியில் ஷோரூம்கள் போல பெரிய மதுக்கடைகள் நகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
    • அரசின் வருவாயை பெருக்குவதற்காக மதுபானங்கள் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி என்றாலே பிற மாநில மக்கள் நினைவுக்கு வருவதில் மதுபானமும் ஒன்று.

    புதுச்சேரியில் மதுபானம் விலை குறைவு என்பதோடு, சுமார் 800 முதல் 900 பிராண்டுகளில் விதவிதமான மது வகைகள் கிடைக்கும். அதோடு, நின்று கொண்டே மது அருந்திவிட்டு செல்வது முதல், குளு குளு ஏசி வசதியுடன் மது அருந்தும் வசதிகளுடன் மதுபார்களும் உள்ளது.

    புதுச்சேரிக்கு வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா வரும் பயணிகளில் பெரும்பாலானவர்கள் மது வகைகளை ருசிப்பதற்காகவே வருகின்றனர். இதற்காகவே புதுச்சேரியில் ஷோரூம்கள் போல பெரிய மதுக்கடைகள் நகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு வார இறுதி நாட்களில் இளைஞர்கள், தங்களுக்கு தேவையான மது வகைகளை தேர்வு செய்து வாங்கி செல்வதை பார்க்க முடியும். இது மட்டுமின்றி புதுச்சேரி அரசுக்கு சுமார் ரூ.1000 கோடி வரை கலால்துறை மூலம் வருமானமும் கிடைக்கிறது.

    கடந்த காலங்களில் மதுபான விலையை ரூ.2 முதல் ரூ.10 வரை உயர்த்துவார்கள். மதுபான விலை உயர்ந்தாலும், அண்டை மாநிலங்களின் விலையை விட எப்போதும் புதுச்சேரியில் மதுபானம் விலை குறைவாக இருக்கும்.

    ஆனால் தற்போது அரசின் வருவாயை பெருக்குவதற்காக மதுபானங்கள் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கீழ்மட்ட அளவில் உள்ள மது வகைகள் கூட குவார்ட்டருக்கு ரூ.12 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது. பெரும்பாலனவர்கள் விரும்பி அருந்தும் பிராண்டுகள் விலை குவார்டருக்கு ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது.

    இந்த விலை உயர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய விலைப்பட்டியலுடன் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு மது பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்வு மது விற்பனையாளர்களிடையே பெரும் கவலையையும் ஏற்படுத்தியிருந்தது.

    வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். கடந்த 3 நாட்களில் நாள்தோறும் நடைபெற்ற விற்பனையில் 20 முதல் 25 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.

    வார நாட்களில் வழக்கமாக மது அருந்தக் கூடியவர்கள் விலை உயர்வால் தங்களின் பிராண்டுகளை மாற்றியுள்ளனர். விலை குறைவான பிராண்டுகளுக்கு நாள்தோறும் மது அருந்துவர்கள் நகர்ந்துள்ளனர். இதுவும் விற்பனையை பாதித்துள்ளது.

    இதுகுறித்து மதுபான விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது:-

    கடந்த காலங்களில் பல முறை மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 25 ஆண்டுகளில் தற்போது உயர்த்தப்கபட்டுள்ள விலை உச்சபட்சமாகும். இதனால் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மது வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

    இந்த விலை உயர்வு மட்டுமின்றி, மது உரிமை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் 20 முதல் 25 சதவீதம் வரை மதுபான விற்பனை சரிந்துள்ளது. இருப்பினும் முழுமையாக ஒரு மாத காலம் மது விற்பனையை கணக்கிடும் போதுதான் எந்த அளவுக்கு விற்பனை சரிந்துள்ளது என தெரியவரும் என்றார்.

    • புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் 2 மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன.
    • பலத்த சூறைகாற்றினால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம்போல் வெயில் கொளுத்தியது.

    இதனால் சாலைகளில் அனல் காற்று வீசியது. வாகன ஓட்டிகள். பொது மக்கள் அவதிப்பட்டனர். புதுச்சேரியில் நேற்று 98 டிகிரி வெயில் பதிவானது.

    இந்த நிலையில் மாலை 6 மணிக்குமேல் வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இரவு 7.30 மணிக்கு சூறைக்காற்று வீசியது. சாலையில் புழுதி, குப்பைகள் பறந்ததால் வாகன ஓட்டிகள் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் மழையும் பெய்தது.

    இந்த மழை சுமார் 30 நிமிடம் நீடித்தது. அதன் பிறகும் மழை தூறிக் கொண்டே இருந்தது. சூறைக்காற்று வீசியதில் கடலூர் சாலை மரப்பாலம் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் சரிந்து விழுந்தன. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் சிக்கி லேசான காயமடைந்தனர்.

    இதுபோல் எஸ்.வி.படேல் சாலையில் நிழலுக்காக போடப்பட்டிருந்த பசுமை பந்தல் சரிந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபோல் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

    புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் 2 மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. அப்போது அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. பலத்த சூறைகாற்றினால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    • விலை உயர்வுக்கு பின் 10 நாட்களாக பழைய விலையில் மதுபானங்கள் விற்கப்பட்டு வந்தது.
    • அதிகமாக விற்பனையாகும் பிராண்டட் மது குவார்ட்டர் ரூ.120-ல் உயர்த்தப்பட்டு, ரூ.147-க்கு விற்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் வருவாயை பெருக்க கலால்வரி, நில வழிகாட்டி மதிப்பு உள்ளிட்ட பல்வேறு வரிகளை உயர்த்தியுள்ளது.

    கலால்வரி உயர்வால் புதுவையில் மதுபானங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு ஏற்கனவே கொள்முதல் செய்த மதுபானங்களுக்கு பொருந்தாது, அவற்றை பழைய விலைக்கே விற்க கலால்துறை உத்தரவிட்டிருந்தது. இதனால் விலை உயர்வுக்கு பின் 10 நாட்களாக பழைய விலையில் மதுபானங்கள் விற்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இன்று முதல் உயர்த்தப்பட்ட புதிய விலையில் மதுபானங்கள் விற்கப்படுகிறது. மிக குறைந்த விலை கொண்ட ரூ.60 விலை கொண்ட குவார்ட்டர் மது ரூ.72 முதல் ரூ.74 வரை விற்கப்படுகிறது. அதிகமாக விற்பனையாகும் பிராண்டட் மது குவார்ட்டர் ரூ.120-ல் உயர்த்தப்பட்டு, ரூ.147-க்கு விற்கப்படுகிறது.

    இதுபோல அனைத்து மதுபானங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இது மது பிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் மதுபான விற்பனையாளர்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த காலத்தைபோல தொடர்ந்து விற்பனை நடக்குமா? விலை உயர்வால் மது விற்பனை சரிவை சந்திக்குமா? என மது விற்பனையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    • பத்திரப்பதிவு துறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் வாங்குவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது.
    • லஞ்சம் மற்றும் சஸ்பெண்ட் விவகாரம் பத்திரப்பதிவு துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பத்திரப்பதிவு துறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் வாங்குவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது. மேலும் இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்நிலையில் புதுச்சேரி சாரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் உள்ள சார் பதிவாளர் ஸ்ரீகாந்த், பத்திரம் பதிய வந்த ஒருவரை அலுவலக கழிவறைக்கு அழைத்து சென்று ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கும் வீடியோ நேற்று சமூக வலை தளங்களில் வைரலாகியது.

    மேலும் இந்த சம்பவம் கடந்த 16.10.24 அன்று நடந்ததாகவும் இதுகுறித்து வீடியோ ஆதாரத்துடன் பதிவாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் வீடியோவின் ஒரு பகுதியை சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இச்சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி குமாரப்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயசங்கர், கவர்னர், டி.ஜி.பி., கலெக்டர் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு புகார் மனு அனுப்பினார்.

    அதன்பேரில் இப்புகார் குறித்து விசாரணை நடத்திய பத்திரப்பதிவுத்துறை ஆணையரான கலெக்டர் குலோத்துங்கன், லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் ஸ்ரீகாந்தை, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

    இந்த லஞ்சம் மற்றும் சஸ்பெண்ட் விவகாரம் பத்திரப்பதிவு துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குடியரசு துணை தலைவர் வருகையால் நடவடிக்கை.
    • ஜிப்மர் கல்லூரி மாணவர்களுடன் ஜெகதீப் தன்கர் உரையாட உள்ளார்.

    புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் மூன்று நாள் அரசுமுறை பயணமாக புதுச்சேரிக்கு வருகை தருகிறார்.

    குடியரசு துணை தலைவர் வருகையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மதியம் 2 மணிக்குள் மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஜிப்மர் கல்லூரி மாணவர்களுடன் ஜெகதீப் தன்கர் உரையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தடைகாலம் முடிந்தும் மீன்பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.
    • புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும்.

    புதுச்சேரி:

    வங்கக் கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டது.

    இந்த தடைக்காலத்தில் படகுகளை சீரமைக்கும் பணி மற்றும் வலை பின்னுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். தடைக்காலத்தின்போது, பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத மீன்பிடி விசைப் படகுகளை தேங்காய்த்திட்டு துறைமுகத்தில், மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இன்றுடன் (சனிக்கிழமை) தடைக்காலம் முடிவடைவதால், படகு உரிமையாளர்கள் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில், உள்ள விசைப்படகுகளுக்கு நேற்று பூஜை போட்டு சிறப்பு யாகம் நடத்தினர்.

    இந்த யாகத்தில், முதலமைச்சர் ரங்கசாமி, பாஸ்கர் எம்.எல்.ஏ., மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை விடுத்து புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் தடைகாலம் முடிந்தும் மீன்பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

    இதுகுறித்து புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் 17-ந் தேதி வரை, வட தமிழக சுடலோர பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ., முதல் 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாமல் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மோடி தலைமையிலான அரசின் கொள்கை முடிவுகளால் நாடு வளர்ச்சி பெற்றுள்ளது கண்கூடாக தெரிகிறது.
    • ராகுல் காந்தி கண்களை மூடிக்கொண்டு கருத்து தெரிவிக்கிறார்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டு கால சாதனை விளக்க புத்தக்கத்தை புதுச்சேரி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் வெளியிட்டு மத்திய அமைச்சர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3-வது முறையாக ஆட்சியை பிடித்து 11 ஆண்டுகளை முடித்து 12-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மோடி தலைமையிலான அரசின் கொள்கை முடிவுகளால் நாடு வளர்ச்சி பெற்றுள்ளது கண்கூடாக தெரிகிறது.

    2014-ம் ஆண்டுக்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் முடிவு எடுக்கும் தைரியமற்றவர்களாக இருந்தனர். அதோடு 2-ஜி, காமன்வெல்த் என அனைத்து துறைகளிலும் ஊழல், முறைகேடுகள் தலைவிரித்தாடியது. பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு சேவை, சிறந்த நிர்வாகம், ஏழைகளின் நலன் ஆகியவற்றை முன்வைத்து நாட்டை சீரான வளர்ச்சிக்கு கொண்டு சென்றார்.

    நாடு சுதந்திரம் அடைந்து 100-வது ஆண்டை 2047-ல் அடியெடுத்து வைக்கும்போது வல்லரசாக்க திட்டமிட்டு பிரதமர் செயல்பட்டு வருகிறார். புதுச்சேரியிலும் பல்வேறு மத்திய அரசு திட்டங்கள் 100 சதவீதம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட இலவச ரேஷன் அரிசியானது தற்போது ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

    சேதராப்பட்டில் கிடப்பில் கிடந்த 750 ஏக்கர் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 4000-ம் பேருக்கு அரசு வேலை தரப்பட்டுள்ளது. பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றும் பணி தொடர்கிறது.

    ராகுல் காந்தி கண்களை மூடிக்கொண்டு கருத்து தெரிவிக்கிறார். அவர் கண்ணை திறந்து நாட்டின் வளர்ச்சியை பார்க்க வேண்டும். நம்மால் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் மூலம் பாகிஸ்தானுக்கும், தீவிரவாதிகளுக்கும் "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கை மூலம் பதிலடி தந்துள்ளோம். உலகத்துக்கும் ஒரு செய்தி சொல்லியுள்ளோம்.

    மணிப்பூரில் அமைதி நிலவ பிரதமர் நேரடியாக கவனம் செலுத்தி வருகிறார். 2026-ல் தேசிய ஜனநாயகக்கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றி பெறும். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைந்ததில் இருந்து தி.மு.க. கூட்டணி கலகலத்து போயுள்ளது.

    இதனால் அந்த தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் தடுமாற்றத்தை வெளிப்படுத்தி பேசிவருகிறார்கள்.

    தமிழகத்தில் 2024 பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி இல்லாமல் சந்தித்து கணிச ன வாக்கு பெற்றுள்ளோம். தற்போது கூட்டணி அமைந்துள்ளதால் பலம் பெற்றுள்ளோம். இதனால் தி.மு.க.வினர் தூக்கத்தை தொலைத்துள்ளனர். தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி விரட்டியடிக்கப்படும் நாள் நெருங்கி விட்டது.

    புதுவையின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை கருத்துகளை முதலமைச்சர் ரங்கசாமி பிரதமரிடம் தெரிவித்து வருகிறார். புதுச்சேரிக்கு தேவையான நிதி, திட்டங்களை மத்திய அரசு அளித்து வருகிறது.

    திராவிடர் கழகம் என்றாலே கலவரம்தான். அவர்கள் தங்களை போலவே பிறரையும் நினைத்து கலவரம் ஏற்படுத்த வருவதாக கூறுகிறார்கள்.

    திருப்பரங்குன்றம் முருகன் மாநாடு தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உலகம் முழுவதும் இருந்து முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள். இந்த மாநாடு திருப்பரங்குன்றத் தில் நடந்த சம்பவத்தில் காயம் அடைந்த முருக பக்தர்களுக்கு மருந்தாக அமையும். கூட்டணி பற்றி கட்சி தேசிய தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். தமிழகம் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இணைய வழி குற்றவாளிகள் தங்களிடம் பணத்தை பறிப்பதற்காக உருவாக்கிய போலியான லிங்க் மற்றும் செய்தியாகும்.
    • லிங்கை கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் ஹாக் செய்து உங்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுவர்.

    புதுச்சேரி:

    புதுவை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறியதாவது:-

    வாட்ஸ் ஆப் குழுக்களில் தற்போது பல்வேறு வங்கிகளின் பெயர்களில் தங்களின் வங்கிக்கணக்கு சஸ்பெண்ட் செய்ய உள்ளதாக குறுஞ்செய்தி மற்றும் அதனுடன் ஆப் லிங்க் வந்து கொண்டு உள்ளது. அது இணைய வழி குற்றவாளிகள் தங்களிடம் பணத்தை பறிப்பதற்காக உருவாக்கிய போலியான லிங்க் மற்றும் செய்தியாகும். அதை யாரும் நம்ப வேண்டாம். மேலும் அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். அப்படி நீங்கள் கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் ஹாக் செய்து உங்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுவர். மேலும் உங்களின் வாட்ஸ் ஆப் ஹாக் செய்யப்படும்.

    இதுபோன்று சமூக வலைதளங்களில் வரும் செய்தியை உறுதிப்படுத்தாமல் நம்ப வேண்டாம். பண பரிவர்த்தனை வங்கிக் கணக்கு போன்றவற்றில் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு நேரில் சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.

    மேலும் இணைய வழி சம்பந்தமான புகார் தெரிவிக்க மற்றும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள 1930, 0413 2276144, 9489205246 எண்களில் இணைய வழி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உள்ளூர் விடுமுறை வழங்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
    • வருகிற 14, 21-ந்தேதி அன்று வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருநள்ளாறு:

    காரைக்காலில் அடுத்த திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் மற்றும் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி தமிழகப்பகுதியான நாகப்பட்டினம், தஞ்சாவூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால் உள்ளூர் விடுமுறை வழங்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    அதனை ஏற்று இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) 2 நாட்கள் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வருகிற 14, 21-ந்தேதி அன்று வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவை புதுச்சேரி அரசு சார்பு செயலாளர் ஹிரண் பிறப்பித்துள்ளார்.

    • சில ரெயில்கள் முழுவதுமாகவும், சில பகுதியளவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • புதுவையிலிருந்து விழுப்புரத்துக்கு காலை இயக்கப்படும் மெமு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    தென்னக ரெயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குட்பட்ட ரெயில்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில ரெயில்கள் முழுவதுமாகவும், சில பகுதியளவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி விழுப்புரத்திலிருந்து காலை 5.25 மணிக்கு புதுச்சேரிக்கு இயக்கப்படும் (வண்டி எண் 66063) மெமு ரெயிலும், புதுவையிலிருந்து விழுப்புரத்துக்கு காலை 8.05 மணிக்கு இயக்கப்படும் (வண்டி எண் 66064) மெமு ரெயிலும் இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் வருகிற 9-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை எழும்பூரிலிருந்து காலை 6.35 மணிக்கு புதுவைக்கு இயக்கப்படும் ரெயில் (வண்டி எண் 66051) வசதியான இடத்தில் வருகிற 8 மற்றும் 10-ந்தேதிகளில் ஒரு மணிநேரம் நிறுத்தி வைக்கப்படும். அதேபோல் புதுவை-திருப்பதி ரெயிலும் (வண்டி எண் 16112) வருகிற 11, 12-ந்தேதிகளில் 25 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

    புதுச்சேரி-அவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12868) வருகிற 11 மற்றும் 18-ந் தேதிகளில் பிற்பகல் 2.15 மணிக்கு பதிலாக 3.05 மணிக்கு (50 நிமிடம் தாமதமாக) புறப்படும்.

    மேற்கண்ட தகவலை திருச்சி ரெயில்வே கோட்டம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ×