என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து, கியூ.ஆர். கோடு பாஸ் பரிசோதனை செய்து அனுமதித்தனர்.
    • அவரிடம் விசாரணை நடத்த ஓதியஞ்சாலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று த.வெ.க. பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டத்துக்கு இன்று காலை 7.30 மணி முதல் தொண்டர்கள் வர தொடங்கினர். அவர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து, கியூ.ஆர். கோடு பாஸ் பரிசோதனை செய்து அனுமதித்தனர்.

    ஒருவரை சோதனை செய்தபோது, அவரிடம் துப்பாக்கி இருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. அப்போது அவர் தனது துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருப்பதை காட்டினார்.

    ஆனால், போலீசார் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு புதுவையில் அனுமதியில்லை. பொதுக்கூட்டத்துக்கு ஏன் துப்பாக்கி எடுத்து வந்தீர்கள்? என கேள்வி எழுப்பினர். மேலும் அவரிடம் விசாரணை நடத்த ஓதியஞ்சாலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட் என்பதும், மத்திய சி.ஆர்.பி.எப். படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. சிவகங்கை கிழக்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் டாக்டர் பிரபுவின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக அவர் பணியில் உள்ளார்.

    டாக்டர் பிரபுவின் பாதுகாப்புக்கு, அரசு அனுமதியுடன் 2 பேர் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தான் டேவிட் என்பதும், பிரபு புதுச்சேரி பொதுக்கூட்டத்துக்கு வந்ததால் அவரின் பாதுகாப்புக்காக உடன் வந்ததும் தெரியவந்தது. இதன் பிறகே புதுச்சேரி போலீசார் நிம்மதியடைந்தனர். 

    • புதுச்சேரி பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    • பரப்புரை வாகனத்தில் நின்றபடி த.வெ.க. தலைவர் விஜய் பேசுகிறார்.

    கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு 2 மாதமாக த.வெ.க. தலைவர் விஜய் நேரடியாக பொதுமக்களை சந்திக்ககவில்லை. இந்த நிலையில், காவல்துறையின் அனுமதியுடன் புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் நாளை த.வெ.க. பொதுக்கூட்டம் நடக்கிறது.

    புதுச்சேரி பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்க த.வெ.க. தலைவர் விஜய் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு பனையூரில் உள்ள வீட்டில் இருந்து காரில் புறப்படுகிறார். அங்கிருந்து சாலை வழியாக காலை 10.30 மணிக்கு உப்பளம் துறைமுக வளாகத்துக்கு வருகிறார். அவரை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்கிறார்.

    முன்னதாக விஜயின் பிரச்சார வாகனம் இன்று மாலையே புதுச்சேரிக்கு புறப்பட்டது. அந்த வாகனத்தில் நின்றபடி த.வெ.க. தலைவர் விஜய் பேசுகிறார். கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு இருக்கை கிடையாது. அவர்களும் நின்றபடியே விஜய் உரையை கேட்கின்றனர்.

    கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜயின் பரப்புரை வாகனம் வெளியே வந்தது. அதன்படி, இன்று மாலையே பரப்புரை வாகனம் புறப்பட்டுள்ளது.

    அந்த வாகனத்தில் நின்றபடி த.வெ.க. தலைவர் விஜய் பேசுகிறார். கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு இருக்கை கிடையாது. அவர்களும் நின்றபடியே விஜய் உரையை கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    • 3 நாட்களாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னின்று ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
    • தொண்டர்கள் அத்துமீறுவதை தடுக்க இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் நாளை த.வெ.க. பொதுக்கூட்டம் நடக்கிறது. கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு 2 மாதமாக த.வெ.க. தலைவர் விஜய் நேரடியாக பொதுமக்களை சந்திக்ககவில்லை. இதனால் புதுச்சேரி பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்க த.வெ.க. தலைவர் விஜய் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு பனையூரில் உள்ள வீட்டில் இருந்து காரில் புறப்படுகிறார். அங்கிருந்து சாலை வழியாக காலை 10.30 மணிக்கு உப்பளம் துறைமுக வளாகத்துக்கு வருகிறார். அவரை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்கிறார்.

    முன்னதாக விஜய் பிரச்சார வாகனம் இன்று இரவே புதுச்சேரிக்கு வந்து சேர்கிறது. அந்த வாகனத்தில் நின்றபடி த.வெ.க. தலைவர் விஜய் பேசுகிறார். கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு இருக்கை கிடையாது. அவர்களும் நின்றபடியே விஜய் உரையை கேட்கின்றனர்.

    பொதுக்கூட்ட மைதானம் டிட்வா புயல் மழை காரணமாக மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக இருந்தது. பொதுக்கூட்டத்துக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு, மண் கொட்டப்பட்டு, சமன் செய்யப்பட்டுள்ளது.

    உப்பளம் சாலையிலிருந்து கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றிலும் தகர ஷீட் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு வரும் தொண்டர்கள் அத்துமீறுவதை தடுக்க இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கான பணிகளை கடந்த 3 நாட்களாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னின்று செய்து வருகிறார்.

    போலீசாரின் அறிவுறுத்தலின்படி தொண்டர்கள் வந்து செல்ல வசதியாக துறைமுக வளாக சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு, கூடுதலாக 2 நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்பவர்கள் குடிநீர் வசதிக்காக பிளாஸ்டிக் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    கூட்டத்துக்கு புதுச்சேரி போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் ஒட்டுமொத்தமாக 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அவர்கள் புதுச்சேரியை சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

    இதனால் கூட்டத்தில் பங்கேற்போருக்கு கியூ.ஆர். கோடுடன் கூடிய பாஸ் இன்று மாலை முதல் த.வெ.க. நிர்வாகிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு நிர்வாகிக்கு 5 பாஸ்கள் வழங்க திட்டமிட்டுள்ளனர். இந்த பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே கூட்டத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

    அதோடு கூட்டத்துக்கு கர்ப்பிணி பெண்கள், சிறுவர், சிறுமிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என புதுச்சேரி போலீசார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கூட்டத்தை 12.30 மணிக்கு மேல் நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். புதுச்சேரியில் நேற்று முதல் போலீசார் கூட்டம் நடைபெறும் மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருவோர், வாகனங்களை சாலையோரம் நிறுத்தக்கூடாது. பழைய துறைமுக வளாகம், உப்பளம் மைதானம், பாண்டி மெரீனா கடற்கரை பின் பகுதியில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    உப்பளம் சாலையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதே போல் பொதுகூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் வாகனங்களை குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தி விட்டு மைதானத்திற்கு நடந்தே வர வேண்டும்.

    பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளது. கூட்டம் காலையில் நடப்பதால் இந்த பள்ளிகளுக்கு மாணவர்கள் வந்து செல்ல சிரமம் ஏற்படும். இதை கருத்தில் கொண்டு, பொதுக்கூட்டத்துக்கு வரும் பாதையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படும் என தெரிகிறது. அதோடு அந்த பகுதியை சுற்றியுள்ள மதுக்கடைகளை மூட கலால்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    • புதுவையில் ரோடு-ஷோ சென்று மக்களை சந்திப்பதாக முதலில் திட்டமிடப்பட்டது.
    • 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    தமிழக வெற்றிக்கழக தலைவரான நடிகர் விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார்.

    கடந்த செப்டம்பர் மாதம் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளில் மக்களை சந்தித்தார். விஜய் பங்கேற்ற கூட்டங்களில் திரளாக மக்கள் பங்கேற்று ஆதரவு அளித்தனர்.

    3-வது நிகழ்ச்சியாக கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூரில் திறந்த வேனில் நின்றபடி அவர் மக்களை சந்தித்து உரையாற்றினார். இந்த கூட்டத்தில் அலைகடலென த.வெ.க. தொண்டர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.

    அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. த.வெ.க. சார்பில் உள் அரங்க கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் மட்டுமே விஜய் பங்கேற்றார்.

    காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 2 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட உள்ளரங்க கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் விஜய் பேசினார்.

    இந்த நிலையில் 2 மாதங்களுக்கு பிறகு விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டம் பக்கத்து மாநிலமான புதுவையில் நடைபெறுகிறது. புதுவையில் ரோடு-ஷோ சென்று மக்களை சந்திப்பதாக முதலில் திட்டமிடப்பட்டது.

    ஆனால் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி புதுவை போலீசார் ரோடு-ஷோவுக்கு அனுமதி அளிக்கவில்லை. ரோடு ஷோவுக்கு பதிலாக பொதுக்கூட்டத்தை நடத்தி கொள்ளுமாறு த.வெ.க. நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதற்கான அனுமதியை கேட்டு த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சரான நமச்சிவாயத்தை சந்தித்து மனு அளித்தார். இதையடுத்து விஜய்யின் பிரமாண்ட பொதுக் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    புதுவை உப்பளம் மைதானத்தில் பொதுக்கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள்.

    துறைமுக வளாகத்தில் மழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரை வெளியேற்றி மண் கொட்டி, சமப்படுத்தினால்தான் கூட்டத்தை நடத்த முடியும் என்பதால் அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    துறைமுக வளாகத்தின் முழு பகுதியையும் வழங்க முடியாது. ஹெலிகாப்டர் இறங்கும் தளம் உள்ள பகுதியை மட்டுமே பொதுக்கூட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

    5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதையடுத்து த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த், முதல்-மந்திரி ரங்கசாமியை சந்தித்து, துறைமுக வளாகத்தின் முழு பகுதியையும் பொதுக்கூட்டம் நடத்த வழங்கும்படியும், 10 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதிக்கும்படியும் கோரினார். இதைத் தொடர்ந்து த.வெ. க.வின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து துறைமுக வளாகம் முழுவதும் தண்ணீரை வெளியேற்றி சமன் செய்யும் பணி தொடங்கி உள்ளது. டிராக்டர்கள் மூலம் மணல் கொட்டப்பட்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் துறைமுக வளாகம் தண்ணீர் தேங்காதவாறு சமன்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டங்களில் மேடையும், தொண்டர்களை பார்ப்பதற்காக, நடந்து வந்து செல்வதற்கு பாதையும் அமைக்கப்படும். ஆனால் புதுவை பொதுக்கூட்டத்துக்கு மேடை அமைக்கப்படவில்லை.

    அதற்கு பதிலாக விஜய் பிரசார வாகனத்தில் இருந்தே பேச உள்ளார். இதற்காக வருகிற 8-ந்தேதி இரவு பிரசார வாகனம் புதுவைக்கு வருகிறது. துறைமுக வளாகத்தில் ஹெலிபேடு தளத்தில் வாகனம் நிறுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த பகுதியிலும் தொண்டர்கள் நின்றபடியே விஜய் பேச்சை கேட்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    கியூ.ஆர்.கோடுடன் 10 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க உள்ளனர். 1000 பேர் நிற்பதற்கு ஒரு பாக்ஸ் என 10 பாக்ஸ் தடுப்பு கட்டைகளுடன் அமைக்கப்பட உள்ளது. தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் நிறுத்த தனிபகுதி ஒதுக்கப்படுகிறது. தற்போது துறைமுக வளாகத்தின் நுழைவுக்கு ஒரு வாசல் மட்டுமே உள்ளது. கூட்டம் உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் வசதியாக மேலும் 2 வாசல்கள் காம்பவுண்ட் சுவரை உடைத்து அமைக்கப்பட உள்ளது.

    9-ந்தேதி காலை 10.30 மணி முதல் 12 மணி வரை பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சுமார் 45 நிமிடம் த.வெ.க. தலைவர் விஜய் பேச திட்டமிட்டுள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த வரைபடத்துடன் த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த், போலீசாருடன் ஆலோசனை மேற்கொண்டார். 2 மாதத்துக்கு பிறகு புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது த.வெ.க. நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புதுச்சேரியில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
    • பா.ஜ.கவோடு கூட்டணியில் இருந்தால் தான் புதுச்சேரிக்கு வேண்டிய நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும்.

    புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

    புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் என்.ஆர். காங்கிரசோடு இணைந்து புதுச்சேரியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். இது தொடர்பாக அக்கட்சியின் தலைவரும் புதுச்சேரி முதலமைச்சருமான ராங்கசாமியோடு பேச்சுவார்த்தை நடத்த த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் முயற்சித்து வருகிறார்.

    இந்தநிலையில் புதுவையில் செயல்படுத்த வேண்டிய பல திட்டங்கள் கிடப்பில் உள்ளதால் பா.ஜ.கவோடு கூட்டணியில் இருந்தால் தான் புதுச்சேரிக்கு வேண்டிய நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும்.

    அதற்கு பா.ஜ.க கூட்டணியில் நீடித்தால் தான் சரியாக இருக்கும் என முதலமைச்சர் ரங்கசாமி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் புதுச்சேரியில் தனித்து போட்டியிட த.வெ.க. தயாராகி வருகிறது.

    இங்கு ஏற்கனவே என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.கவின் என்.டி.ஏ. கூட்டணி, காங்கிரஸ்- தி.மு.க.வின் இந்தியா கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை ஏற்கனவே களத்தில் உள்ள நிலையில் சார்லஸ் மார்டினும் புதிய கட்சி தொடங்கி போட்டியிட உள்ளார்.

    இதனால், புதுச்சேரியில் 5 முனை போட்டி உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.

    • புதுச்சேரி காவல்துறை நேரடியாக மறுப்பு தெரிவிக்காமல் இருந்தது.
    • கூட்டத்தில் காவல்துறை சார்பில் விஜய் புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த பல்வேறு காரணங்களை விளக்கி திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் த.வெ.க. தலைவர் விஜய் 5-ந்தேதி ரோடு ஷோ நடத்த முடிவு செய்து காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டது.

    கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், ரோடு ஷோவுக்கு விதிமுறைகள் வழங்குவது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    புதுச்சேரி மாநிலம் சென்னை ஐகோர்ட்டுக்கு உட்பட்டு செயல்படுகிறது. இதனால் ஐகோர்ட்டு உத்தரவுகள் அனைத்தும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். இதனால் புதுச்சேரி காவல் துறை ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வந்தது.

    ஆனால் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் உள்ள தனது செல்வாக்கை பயன்படுத்தி, ரோடு ஷோ நடத்த அனுமதி பெற பல்வேறு முயற்சிகளை எடுத்தார். இதற்காக பல முறை தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். இருப்பினும் புதுச்சேரி காவல்துறை நேரடியாக மறுப்பு தெரிவிக்காமல் இருந்தது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நேற்றைய தினம் சட்டசபை வளாகத்தில் ரோடு ஷோ தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    அமைச்சர் லட்சுமி நாராயணன், ஐ.ஜி. அஜித்குமார் சிங்ளா, டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன், கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ., த.வெ.க. பொதுச்செயலாளர்கள் புஸ்சி ஆனந்து, ஆதவ் அர்ஜூனா, முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் காவல்துறை சார்பில் விஜய் புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த பல்வேறு காரணங்களை விளக்கி திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் நிபந்தனைகளுடன் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து கட்சித் தலைவர் விஜய்யிடம் பேசி தகவல் தெரிவிப்பதாக த.வெ.க.வினர் கூறிச் சென்றனர். இதனிடையே டிட்வா புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்கள் தொடர் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இதனால் புதுச்சேரிக்கு 5-ந்தேதி விஜய் வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் வருகையை எதிர்பார்த்திருந்த புதுச்சேரி த.வெ.க. தொண்டர்கள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

    • இன்று மகாபலிபுரம் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    வங்க கடலில் ஏற்பட்ட டிட்வா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலை பகுதியாக மாறியுள்ளது.

    டிட்வா புயலால் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் எப்போது வேண்டுமானாலும் மழை கொட்டலாம் என்ற நிலையில் இருந்தது. அதேநேரத்தில் நேற்று முன்தினம் மழையே இல்லை. ஆனால் குளிர்ந்த காற்று, இருண்ட சூழலும் தொடர்ந்தது.

    இந்த நிலையில் நேற்றைய தினம் காலையிலிருந்து லேசான மழை பெய்தது. டிட்வா புயல் எச்சரிக்கையால் சனி மற்றும் திங்கட்கிழமை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    நேற்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. புதுச்சேரியில் நேற்று அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் இன்று மகாபலிபுரம் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வலு குறைந்திருந்தாலும், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சூறை காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. தொடர்ந்து இரவு முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்தது.

    இன்று அதிகாலை முதல் மழை நீடிக்கிறது. வானம் சூழ்ந்து இருண்டு காணப்படுகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கல்லூரிகள் வழக்கம்போல இயங்குகிறது.

    • கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து பிரசார பயணத்தை வஜய் ஒத்திவைத்திருந்தார்.
    • விஜய் காஞ்சிபுரம் மக்களை உள்ளரங்கத்தில் அழைத்து வந்து சந்தித்தார்.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பிரசாரம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது.

    ஆனால், கரூரில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து அரசியல் பிரசாரம் மேற்கொள்ள விஜய் தொடர்ந்து பல சவால்களை சந்தித்து வருகிறார்.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து பிரசார பயணத்தை வஜய் ஒத்திவைத்திருந்தார். பின்னர், ஒரு மாத காலத்திற்கு பிறகு, விஜய் காஞ்சிபுரம் மக்களை உள்ளரங்கத்தில் அழைத்து வந்து சந்தித்தார்.

    இந்நிலையில், புதுச்சேரியில் வரும் டிச.5ம் தேதி விஜயின் ரோடு ஷோ நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், புதுச்சேரியில் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    இதனையடுத்து விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி பெற புஸ்ஸி ஆனந்த் முயற்சி மேற்கொண்டார்.

    விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து மக்கள் அதிகளவில் திரண்டால் கரூர் போன்ற அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி, தவெகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லை என்று அம்மாநில டிஐஜி சத்திய சுந்தரம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய டிஐஜி சத்திய சுந்தரம், "திறந்தவெளியில் பொதுக்கூட்டம் நடத்த பரிந்துரை செய்துள்ளோம். இடத்தை அவர்களே தேர்வு செய்து அனுமதி கோர வேண்டும்.

    • தமிழகம்போல புதுவையில் பிரம்மாண்டமான தேசிய நெடுஞ்சாலைகள் இல்லை.
    • குறிப்பிட்ட இடத்தை நிர்ணயித்து அங்கு பொதுக்கூட்டம் நடத்தலாம்.

    புதுச்சேரி:

    புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கரூரில் நடந்த த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய ரோடு ஷோவில் 41 பேர் பலியாகியுள்ளனர். இதுதொடர்பான வழக்குகள் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் புதுவையில் ரோடு ஷோ நடத்த த.வெ.க.வினர் அனுமதி கேட்டு வருகின்றனர்.

    தமிழகம்போல புதுவையில் பிரம்மாண்டமான தேசிய நெடுஞ்சாலைகள் இல்லை. குறுகிய சிறிய சாலைகள்தான் உள்ளது.

    அதோடு போக்குவரத்து நெரிசலும், நெருக்கடியும் அதிகம். இதனால் புதுவையில் ரோடு ஷோ நடத்துவதை விஜய் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக குறிப்பிட்ட இடத்தை நிர்ணயித்து அங்கு பொதுக்கூட்டம் நடத்தலாம். அதற்கு அரசு அனுமதி வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
    • அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரையில் நிலவி வந்த டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், டிட்வா புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரையில் நிலவி வந்த டிட்வா புயல்.
    • டாப்ளர் வானிலை ரேடர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரையில் நிலவி வந்த டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நாளை காலை மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், டிட்வா புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுச்சேரி அரசும் ரோடு ஷோ தொடர்பான ஐகோர்ட்டு உத்தரவுக்காக காத்திருக்கிறது.
    • த.வெ.க. அளித்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

    புதுச்சேரியில் வருகிற 5-ந் தேதி ரோடு ஷோ நடத்த த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். புதுச்சேரி காலாப்பட்டில் தொடங்கி, கன்னியக்கோவில் வரையிலும் சுமார் 30 கி.மீ. வரை ரோடு ஷோ நடத்தவும், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகே மைக்கில் பேசவும் அனுமதி கேட்டு 4 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி த.வெ.க. நிர்வாகிகள் டி.ஜி.பி.யிடம் மனு அளித்தனர்.

    தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமியையும் சந்தித்து, ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கும்படி கோரினர். ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

    கரூரில் நடந்த துயர சம்பவத்துக்கு பிறகு தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

    சென்னை ஐகோர்ட்டு ரோடு ஷோ நடத்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சிகளின் பரிந்துரைகளை வழங்கும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    இதன்படி தமிழக அரசின் வழிகாட்டுதல்கள், அரசியல் கட்சிகளின் பரிந்துரைகள் ஐகோர்ட்டில் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு, இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

    சென்னை ஐகோர்ட்டு கட்டுப்பாட்டின் கீழ் புதுச்சேரி மாநிலம் இடம் பெற்றுள்ளது. இதனால் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுகள் அனைத்தும் புதுச்சேசரிக்கும் பொருந்தும். இதனால் புதுச்சேரி அரசும் ரோடு ஷோ தொடர்பான ஐகோர்ட்டு உத்தரவுக்காக காத்திருக்கிறது. இதனால் த.வெ.க. தலைவர் விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்துவது தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து த.வெ.க. சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனு குறித்து விசாரிக்க புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் டி.ஜி.பி. ஷாலினி சிங்கை சந்திக்க வந்தார்.

    ஆனால் டி.ஜி.பி. அலுவலகத்தில் இல்லை. அவர் டெல்லி சென்றிருப்பதாக கூறப்பட்டது. அவர் நாளை புதுச்சேரி திரும்புவதால் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மீண்டும் நாளை (திங்கட்கிழமை) புதுச்சேரி டி.ஜி.பி.யை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

    இதற்கிடையே புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி மறுத்துவிட்டதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது.

    ஆனால் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது த.வெ.க. அளித்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என விளக்கமளித்தனர்.

    இந்தநிலையில் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி அளிக்கப்படுமா? என்று முதலமைச்சர் ரங்கசாமியிடம் கேட்டபோது புதுச்சேரி தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

    ×