என் மலர்
புதுச்சேரி
- போலீசார் அவரை பிடித்து சோதனையிட்டபோது இடுப்பில் கைத்துப்பாக்கி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- புதுவை பொதுக்கூட்டத்துக்கு வந்த பிரபுவுக்கு பாதுகாப்பு அளிக்க டேவிட் துப்பாக்கியுடன் வந்ததாக கூறினார்.
புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் த.வெ.க. பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. விஜய் பொதுக்கூட்டம் நடந்த உப்பளம் ஹெலிபேடு மைதான நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தி பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று காலை 8 மணி அளவில் வெள்ளைச்சட்டை அணிந்து டிப்-டாப்பாக நுழைவு வாயிலை கடந்தபோது எச்சரிக்கை ஒலி எழுந்தது. இதனால் அதிர்ச்சிடைந்த போலீசார் அவரை பிடித்து சோதனையிட்டபோது இடுப்பில் கைத்துப்பாக்கி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே அந்த நபரை ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட் (வயது 45) என்பது தெரிய வந்தது. மேலும் தனது துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருப்பதையும் போலீசாரிடம் காட்டினார்.
பின்னர் அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர் விசாரணை நடத்தினர். இதில் டேவிட், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.) பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும், த.வெ.க. சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பிரபுவுக்கு, துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக இருப்பதும் தெரியவந்தது. புதுவை பொதுக்கூட்டத்துக்கு வந்த பிரபுவுக்கு பாதுகாப்பு அளிக்க டேவிட் துப்பாக்கியுடன் வந்ததாக கூறினார்.
இந்நிலையில் த.வெ.க. மாவட்ட செயலாளர் பிரபுவின் தனி பாதுகாவலர் டேவிட்டை காவல்துறை விடுவித்தது. துப்பாக்கிக்கான லைசென்ஸ் அவர் வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார்.
துப்பாக்கி தற்போது காவல்துறை வசம் உள்ளது. விசாரணை நிறைவடைந்ததும் துப்பாக்கியை அவரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- தந்தை ஓய்வு பெற்ற உடனே ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்று இஷா சிங் விருப்பம் தெரிவித்தார்.
- சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு குரல் கொடுப்பவராக திகழ்ந்தார்.
விஜய் பொதுக்கூட்டத்தில் அதிரடி காட்டி அனைவராலும் ஈர்க்கப்பட்டவர் இஷா சிங். யார் இவர்? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கிய நிலையில் அவரை பற்றிய தகவல்கள் வருமாறு:-
இஷா சிங் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுவை காவல்துறையில் சேர்ந்து கிழக்குபகுதி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு துறை சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார். சுகாதாரத்துறையில் போலி மருந்து மோசடி வழக்கில் துணிச்சலுடன் செயல்பட்டு சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர்கள் 2 பேர் உள்பட 6 பேரை கடந்த மாதம் அதிரடியாக கைது செய்தார்.
இஷா சிங்கின் தாத்தா, தந்தை ஒய்.பி. சிங் இவர்களும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆவர். தந்தை ஒய்.பி. சிங் கடந்த 2004-ம் ஆண்டு காவல்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது மும்பை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். அவரது தந்தை ஓய்வு பெற்ற உடனே ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்று இஷா சிங் விருப்பம் தெரிவித்தார். 'நேசனல் ஸ்கூல் ஆப் லா' கல்லூரியில் சட்டமும் படித்த இஷா சிங் மும்பை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார்.
சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு குரல் கொடுப்பவராக திகழ்ந்தார். விஷவாயு தாக்கி உயிரிழந்த மனித கழிவுகளை அப்புறப்படுத்தும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்காக மும்பை ஐகோர்ட்டில் வாதாடி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் பெற்றுக் கொடுத்தார். அதன்பின் இந்திய குடிமை பணிக்கான தேர்வு எழுதி தற்போது ஐ.பி.எஸ்.அதிகாரியாக உள்ளார். தற்போது அவர் ஐ.ஏ.எஸ். மற்றும் நீதிபதிக்கான தேர்வுகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
- வரும் தேர்தலில் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
- 11 நிமிடம் வரை பேசிய விஜய் மத்திய அரசையும், தி.மு.க.வையும் விமர்சித்தார்.
புதுச்சேரி :
புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் பேசியதாவது:-
* த.வெ.க. பொதுக்கூட்டத்திற்கு சிறப்பாக பாதுகாப்பு அளித்த புதுச்சேரி அரசு, முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
* கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு புதுச்சேரி அரசு நன்றாக பாதுகாப்பு கொடுப்பதாகவும், இதைப் பார்த்து தமிழ்நாட்டு முதலமைச்சர் கற்றுக் கொள்ள வேண்டும்.
* ஆனால், அவர்கள் கற்றுக்கொள்ள மாட்டார்கள். வரும் தேர்தலில் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
* புதுச்சேரி மக்களுக்கு ஒன்றே ஒன்று சொல்கிறேன். திமுகவை நம்பாதீங்க. அவர்கள் நம்பவைத்து ஏமாற்றிவிடுவார்கள் என்றார்.
பொதுக்கூட்டத்திற்கு 12 மணி வரை அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 11 நிமிடம் வரை பேசிய விஜய் மத்திய அரசையும், தி.மு.க.வையும் விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தலைவர் விஜய் தமிழகத்துக்கு மட்டுமல்ல, புதுச்சேரிக்கும் என்ன செய்ய வேண்டும் என யோசனை செய்துள்ளார்.
- புதுச்சேரியில் மாற்றம் வருமா? வேலைவாய்ப்பு கிடைக்குமா? என ஏங்குகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நடந்த த.வெ.க. பொதுக்கூட்டத்தில் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-
இந்தியாவுக்கே புதுச்சேரி காவல்துறை முன்னுதாரணமாக இருக்கிறது. புதுச்சேரி முதலமைச்சருக்கு நன்றி. இப்படி மக்கள் பாதுகாப்பை தமிழகத்தில் எங்கும் கொடுத்தது கிடையாது.
தமிழக முதலமைச்சரே தில் இருந்தால் தேர்தலில் மோதுங்கள், எங்கள் பிரசாரத்தை முடக்காதீர்கள். காற்றை, வெள்ளத்தை நிறுத்த முடியுமா.? த.வெ.க. பிரசார பயணம் 72 நாளுக்கு பின் மீண்டும் இன்று முதல் தொடங்கிவிட்டது.
தலைவர் புதுச்சேரிக்கு ஏன் வருகிறார்? என கேட்கின்றனர். புதுச்சேரி மக்கள் நல்ல ஆட்சி, நல்ல கல்வி, நல்ல மருந்துவம், நல்ல போக்குவரத்துக்கு ஏங்குகின்றனர். எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது தமிழகத்தை போல புதுச்சேரிக்கும் செய்ய வேண்டும் என யோசித்தார்.
தலைவர் விஜய் தமிழகத்துக்கு மட்டுமல்ல, புதுச்சேரிக்கும் என்ன செய்ய வேண்டும் என யோசனை செய்துள்ளார்.
விரைவில் புதுச்சேரி மாநில மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் பிரசார கூட்டத்தை நடத்துவோம்.
புதுச்சேரியில் மாற்றம் வருமா? வேலைவாய்ப்பு கிடைக்குமா? என ஏங்குகின்றனர். அந்த ஏக்கம்தான் இந்த கூட்டம். 1970-ல் உருவானது போல புதுச்சேரியிலும் நல்ல முதலமைச்சரை விஜய் உருவாக்குவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 20 லட்சம் பேர் வாழும் புதுச்சேரி மத்திய நிதி குழுவில் இடம்பெறவில்லை.
- புதுச்சேரிக்கு போதிய நிதி வரத்து இல்லாததால் வெளியில் இருந்து கடன் வாங்க வேண்டி உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் மத்திய அரசை விமர்சித்து த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது:-
* புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு பல முறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
* 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்தை மத்திய அரசு கொடுக்கவே இல்லை.
* புதுச்சேரியில் ஒரு ஐ.டி. கம்பெனி உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.
* காரைக்கால், ஏனாம், மாஹேவில் முன்னேற்றம் இல்லை, சுற்றுலா தளமான புதுவையில் பார்க்கிங் வசதி இல்லை.
* ஒரு அமைச்சர் ஊழல் புகாரில் சிக்கி நீக்கப்பட்டு வேறு அமைச்சர் நியமிக்கப்பட்டு 200 நாள் ஆகியும் பதவி தரப்படவில்லை.
* 20 லட்சம் பேர் வாழும் புதுச்சேரி மத்திய நிதி குழுவில் இடம்பெறவில்லை.
* புதுச்சேரிக்கு போதிய நிதி வரத்து இல்லாததால் வெளியில் இருந்து கடன் வாங்க வேண்டி உள்ளது.
* புதுச்சேரி கடனை குறைத்து பொருளாதாரத்தை வளர்க்க போதிய திட்டங்கள் வகுக்க வேண்டும்.
* இந்திய அளவில் ரேசன் கடைகளே இல்லாத மாநிலமாக புதுச்சேரி உள்ளது.
*மற்ற மாநிலம் போல அரிசி, பருப்பு வழங்கும் முறையை புதுச்சேரியில் சீராக்க வேண்டும்.
* வரும் புதுச்சேரி தேர்தலிலும் த.வெ.க.வின் கொடி பட்டொளி வீசி பறக்கும்.
* நம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நிச்சயம் என்றார்.
- புதுச்சேரிக்கும் சேர்த்து குரல் கொடுப்பேன், இது என் கடமை.
- தமிழ்நாடு போலவே புதுச்சேரி மக்களும் 30 ஆண்டுகளாக என்னை தாங்கி பிடித்துள்ளார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் த.வெ.க. பொதுக்கூட்டத்தில் விஜய் பேசியதாவது:-
* புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க?
* மத்திய அரசுக்குத்தான் தமிழ்நாடு தனி, பாண்டிச்சேரி தனி. ஆனால் நமக்கு அந்த வேறுபாடு கிடையாது. நாம் ஒன்று தான்.
* தமிழ்நாடு, புதுச்சேரி வேறுவேறு என பிரித்தாலும் நாமெல்லம் வேறு வேறு கிடையாது.. நாமெல்லாம் ஒன்று தான், சொந்தம் தான்.
* உலகத்தில் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும் அவர்கள் நம் உயிர் தான். பாச உணர்வு இருந்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை.
* மகாகவி பாரதியார் இருந்த மண், பாரதிதாசன் பிறந்தமண் போன்ற சிறப்புகளை பெற்றது புதுச்சேரி.
* நமக்காக வந்தவர் எம்.ஜி.ஆர். அவரை மிஸ் செய்து விடாதீர்கள் என நம்மை அலர்ட் செய்தது புதுச்சேரிதான்.
* தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே புதுச்சேரியில் ஆட்சி அமைத்தார் எம்.ஜி.ஆர்.
* இந்த விஜய் தமிழ்நாட்டிற்கு மட்டும்தான் குரல் கொடுப்பார் என்று நினைக்காதீர்கள். புதுச்சேரிக்கும் சேர்த்து குரல் கொடுப்பேன், இது என் கடமை.
* தமிழ்நாடு போலவே புதுச்சேரி மக்களும் 30 ஆண்டுகளாக என்னை தாங்கி பிடித்துள்ளார்கள்.
* புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு மனப்பூர்வ நன்றி. வேறு ஒரு கட்சியின் நிகழ்ச்சிக்கு பாரபட்சம் காட்டவில்லை. இதை பார்த்தாவது திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
- புதுச்சேரி காவல்துறை இந்தியாவிற்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
- கூடிய விரைவில் மதுரை மாநாடு போன்று புதுச்சேரியிலும் மிகப்பெரிய அளவில் பிரசாரத்தை த.வெ.க. நடத்தும்.
புதுவை உப்பளம் மைதானத்தில் நடைபெறும் த.வெ.க. பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழக காவல்துறையை கைகளில் வைத்துள்ள முதல்வர் அவர்களே புதுச்சேரி காவல்துறையை பாருங்கள்.
* புதுச்சேரி காவல்துறை இந்தியாவிற்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
* புதுச்சேரியில் கொடுத்துள்ளது போன்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை.
* காற்று, வெள்ளத்தை எப்படி நிறுத்த முடியாதோ அதைப்போலத்தான் த.வெ.க.வை நிறுத்த முடியாது.
* கூடிய விரைவில் மதுரை மாநாடு போன்று புதுச்சேரியிலும் மிகப்பெரிய அளவில் பிரசாரத்தை த.வெ.க. நடத்தும்.
* புதுச்சேரி வரலாற்றை புதிதாக எழுதப்போகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இங்கு கூடியுள்ள கூட்டம் தலைவர் விஜய்க்காக வந்த கூட்டம்.
- வேலை நாட்களில் இவ்வளவு பேர் கூடியுள்ளார்கள் என்றால் அது த.வெ.க. தலைவர் விஜய்க்காக மட்டும் தான்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மற்றும் கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்கூட்டம் புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் இன்று நடைபெற்றது. புதுச்சேரியில் முதல் முறையாக விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டம் என்பதால் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். இதனால் பொதுக்கூட்டம் என்பது மாநாடு போல் காட்சியளித்தது.
பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு முன்னதாகவே வந்த விஜய், சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக பிரசார வாகனத்தில் இருந்து வெளியே வரவில்லை. வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் காத்திருந்த அவலநிலை ஏற்பட்டது.
இதன்பின் 11. 13 மணியளவில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இங்கு கூடியுள்ள கூட்டம் தலைவர் விஜய்க்காக வந்த கூட்டம். வேலை நாட்களில் இவ்வளவு பேர் கூடியுள்ளார்கள் என்றால் அது த.வெ.க. தலைவர் விஜய்க்காக மட்டும் தான்.
புதுச்சேரியில் தமிழக வெற்றிக்கழகத்தின் ஆட்சி கண்டிப்பாக இருக்கும். தமிழ்நாட்டின் முதலமைச்சராக 2026-ம் ஆண்டு விஜய் வருவார் என்றார்.
- பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தனர்.
- நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்லாதீர்கள்.
புதுவை உப்பளம் துறைமுக வளாகத்தில் நடைபெறும் த.வெ.க. பொதுக்கூட்டத்துக்காக காலை முதல் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கியூ.ஆர். கோடு பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட இடத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியும் கலைந்து செல்லாமல் விஜயை பார்ப்பதற்காக நின்றிருந்தனர்.
இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீசாரை நெட்டித்தள்ளி அவர்கள் கூட்ட வளாகத்துக்குள் நுழைய முயன்றனர். இதனையடுத்து போலீசார் தடியை சுழற்றி தரையில் அடித்தும், சிலரை லேசாக அடித்தும் கலைந்து போக செய்தனர்.
இதையறிந்த பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், யாரும் காவல் துறையினருக்கு சிரமம் தர வேண்டாம். பாஸ் உள்ளவர்கள் முதலில் வாருங்கள். அதன்பின் வரிசையாக தொண்டர்கள் வந்தால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதிப்போம். காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என தொடர்ந்து மைக்கில் பேசி தொண்டர்களை சமாதானப்படுத்தினார்.
இதன் பின்னரும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தனர்.
விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்த தொண்டர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில் பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மைதானத்திற்குள் பாஸ் இல்லாதவர்கள் செல்ல அனுமதித்த பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை பெண் காவல் அதிகாரி ஈஷா சிங் கடுமையாக எச்சரித்தார்.
பாஸ் இல்லாதவர்களை உள்ளே அனுப்பிய புஸ்ஸி ஆனந்தை பார்த்து கடுப்பான பெண் காவல் அதிகாரி, நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்லாதீர்கள். உங்களால் பலர் இறந்திருக்கிறார்கள் என்று ஆவேசமாக கூறினார்.
- இந்த பொதுக்கூட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
- அதிகாலையில் இருந்தே ஏராளமான த.வெ.க. தொண்டர்கள் குவிந்தனர்.
புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை பனையூரில் உள்ள வீட்டில் இருந்து இன்று காலை 8 மணிக்கு விஜய் காரில் புறப்பட்டார். அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே (அதாவது 10 நிமிடத்திற்கு) விஜய் உப்பளம் ஹெலிபேடு மைதானத்துக்கு விஜய் வந்தார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு முதன் முறையாக திறந்த வெளியில் மக்களை சந்திக்கிறார் விஜய். முந்தைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு மாறாக விஜயின் புதுவை மக்கள் சந்திப்பு அமைந்துள்ளது.

பிரசார வாகனத்தில் பேரணியாக செல்வதை விஜய் முற்றிலும் தவிர்த்தார். இந்த பொதுக் கூட்டத்திற்கு 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் இந்த மக்கள் சந்திப்பானது மாநாடு போல் காட்சியளித்தது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் அதிகாலையில் இருந்தே ஏராளமான த.வெ.க. தொண்டர்கள் குவிந்தனர்.
- பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தனர்.
- தொண்டர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில் பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் துறைமுக வளாகத்தில் த.வெ.க. பொதுக்கூட்டத்துக்காக காலை முதல் தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
கியூ.ஆர். கோடு பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட இடத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியும் கலைந்து செல்லாமல் விஜய்யை பார்ப்பதற்காக நின்றிருந்தனர்.
இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீசாரை நெட்டித்தள்ளி அவர்கள் கூட்ட வளாகத்துக்குள் நுழைய முயன்றனர். இதனையடுத்து போலீசார் தடியை சுழற்றி தரையில் அடித்தும், சிலரை லேசாக அடித்தும் கலைந்து போக செய்தனர்.
இதையறிந்த பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், யாரும் காவல் துறையினருக்கு சிரமம் தர வேண்டாம். பாஸ் உள்ளவர்கள் முதலில் வாருங்கள். அதன்பின் வரிசையாக தொண்டர்கள் வந்தால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதிப்போம். காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என தொடர்ந்து மைக்கில் பேசி தொண்டர்களை சமாதானப்படுத்தினார்.
இந்நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தனர்.
விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்த தொண்டர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில் பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
போலீசாருடன் மல்லுக்கட்டி கொண்டு இருந்த த.வெ.க. தொண்டர்கள் போலீசார் பேரிகார்டை நீக்கியதும் முண்டியடித்து கொண்டு உள்ளே சென்றனர்.
- கியூ.ஆர். கோடு பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட இடத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
- தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் துறைமுக வளாகத்தில் த.வெ.க. பொதுக்கூட்டத்துக்காக காலை முதல் தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
கியூ.ஆர். கோடு பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட இடத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியும் கலைந்து செல்லாமல் விஜய்யை பார்ப்பதற்காக நின்றிருந்தனர்.
இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீசாரை நெட்டித்தள்ளி அவர்கள் கூட்ட வளாகத்துக்குள் நுழைய முயன்றனர். இதனையடுத்து போலீசார் தடியை சுழற்றி தரையில் அடித்தும், சிலரை லேசாக அடித்தும் கலைந்து போக செய்தனர்.
இதையறிந்த பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், யாரும் காவல் துறையினருக்கு சிரமம் தர வேண்டாம். பாஸ் உள்ளவர்கள் முதலில் வாருங்கள். அதன்பின் வரிசையாக தொண்டர்கள் வந்தால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதிப்போம். காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என தொடர்ந்து மைக்கில் பேசி தொண்டர்களை சமாதானப்படுத்தினார்.






