search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஓடும் ரெயிலில் திடீர் மாரடைப்பு- கணவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய மனைவி
    X

    ஓடும் ரெயிலில் திடீர் மாரடைப்பு- கணவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய மனைவி

    • ரெயில்வே போலீசார் ரெயிலை நிறுத்தி மதுரா ரெயில் நிலையத்தில் கேசவனை கீழே இறக்கினர்.
    • கேசவனுக்கு சி.பி.ஆர். முதலுதவி சிகிச்சை அளிக்க மனைவி தயாவிடம் போலீசார் கூறினர்.

    டெல்லி:

    டெல்லியில் இருந்து கோழிக்கோடுக்கு சென்ற ரெயிலில் கேசவன்-தயா என்ற தம்பதி பயணம் செய்தனர். ரெயில், உத்தரபிரதேசத்தில் மதுரா அருகே சென்றபோது கேசவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே மனைவி தயா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் ரெயிலை நிறுத்தி மதுரா ரெயில் நிலையத்தில் கேசவனை கீழே இறக்கினர். அப்போது கேசவனுக்கு சி.பி.ஆர். முதலுதவி சிகிச்சை அளிக்க மனைவி தயாவிடம் போலீசார் கூறினர்.

    அதன்படி கேசவன் வாயோடு வாய் வைத்து தயா முதலுதவி சிகிச்சை அளித்தார். இதில் கேசவன் சீராக மூச்சுவிட்டார். பின்னர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கணவருக்கு சி.பி.ஆர். சிகிச்சை செய்ய அறிவுறுத்திய போலீசாருக்கு தயா நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×