search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாத உற்சவங்கள்
    X

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாத உற்சவங்கள்

    • திருப்பதியில் நேற்று 86, 241 பேர் தரிசனம் செய்தனர். 31,730 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
    • ரூ.3.65 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் பல்வேறு உற்சவங்கள் நடைபெற உள்ளது. அதன்படி வருகிற 3-ந் தேதி பாஷ்யகர்ல உற்சவம் தொடங்குகிறது. 4-ந் தேதி சர்வ ஏகாதசி, 10-ந்தேதி அட்சய திருதியை, 12-ந் தேதி பாஷ்யகர்ல சாற்றுமுறை, ராமானுஜ ஜெயந்தி, சங்கர ஜெயந்தி நடைபெற உள்ளது.

    அதைத்தொடர்ந்து 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பத்மாவதி பரிணய உற்சவம், 22-ந் தேதி நரசிம்ம ஜெயந்தி மற்றும் தரிகொண்டா வெங்க மாம்பா ஜெயந்தி, 23-ந் தேதி அன்னமாச்சாரியா ஜெயந்தி, கூர்ம ஜெயந்தி ஆகியவை தொடர்ந்து நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று 86, 241 பேர் தரிசனம் செய்தனர். 31,730 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.65 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×