search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோழிக்கோட்டில் பள்ளி மாணவன் உள்பட 2 பேர் கால்வாயில் மூழ்கி பலி
    X

    கோழிக்கோட்டில் பள்ளி மாணவன் உள்பட 2 பேர் கால்வாயில் மூழ்கி பலி

    • ஜோவர் கால்வாயில் மூழ்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
    • கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலியான சம்பவம் கோழிக்கோட்டில் சோகத்தை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கரடு பரம்பு பகுதியை சேர்ந்தவர் ஜோவர் (வயது39). அவரது சகோதரரின் மகனான 10-ம் வகுப்பு மாணவன் முகம்மது நபன் (15). இவர்கள் இருவரும் சாலியாறு பகுதியில் உள்ள மணக்கடவு கால்வாய்க்கு நேற்று சென்றனர். அப்போது இருவரும் அடுத்தடுத்து நீரோட்டத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், அந்த பகுதி பொதுமக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தண்ணீரில் மூழ்கிக்கிடந்த மாணவன் நபன் முதலில் மீட்கப்பட்டான். அவன் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் அதற்கு முன்னதாகவே பரிதாபமாக இறந்துவிட்டான்.

    மேலும் ஜோவர் கால்வாயில் மூழ்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இருவரது உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலியான சம்பவம் கோழிக்கோட்டில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×