search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் கடுமையான காற்று மாசு பாதிப்பு- மக்கள் அவதி
    X

    டெல்லியில் கடுமையான காற்று மாசு பாதிப்பு- மக்கள் அவதி

    • 5-வது நாளாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.
    • ஆனந்தவிகார், பவானி மற்றும் ரோகினி போன்ற பகுதிகளில் காற்று மாசு பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

    இன்று 5-வது நாளாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. மிகவும் மோசமான நிலையில் காற்று மாசு 372 ஆக இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 16.4 டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்தது. காலை 8.30 மணியளவில் ஈரப்பதம் 85 சதவீதமாக இருந்தது. கடுமையான மூடுபனி காரணமாக மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    ஆனந்தவிகார், பவானி மற்றும் ரோகினி போன்ற பகுதிகளில் காற்று மாசு பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. பகலில் தெளிவான வானம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. காற்று மாசு 301 முதல் 400 வரை என்பது மிகவும் மோசமானதாகும்.

    Next Story
    ×