என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
டெல்லியில் கடுமையான காற்று மாசு பாதிப்பு- மக்கள் அவதி
ByMaalaimalar1 Nov 2023 7:23 AM GMT
- 5-வது நாளாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.
- ஆனந்தவிகார், பவானி மற்றும் ரோகினி போன்ற பகுதிகளில் காற்று மாசு பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இன்று 5-வது நாளாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. மிகவும் மோசமான நிலையில் காற்று மாசு 372 ஆக இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 16.4 டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்தது. காலை 8.30 மணியளவில் ஈரப்பதம் 85 சதவீதமாக இருந்தது. கடுமையான மூடுபனி காரணமாக மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
ஆனந்தவிகார், பவானி மற்றும் ரோகினி போன்ற பகுதிகளில் காற்று மாசு பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. பகலில் தெளிவான வானம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. காற்று மாசு 301 முதல் 400 வரை என்பது மிகவும் மோசமானதாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X