என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கஞ்சா விற்பனையை காட்டி கொடுத்ததால் கொலையா?
BySuresh K Jangir4 Dec 2022 9:15 AM GMT (Updated: 4 Dec 2022 9:16 AM GMT)
- கடையில் வைத்து கஞ்சா விற்பனையும் ரகசியமாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
- முனுசாமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரியமேடு அல்லிகுளம் மார்க்கெட் வளாகத்தில் முனுசாமி இரும்பு கடை வைத்திருந்த பகுதியிலேயே கொலையாளிகளில் ஒருவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த கடையில் வைத்து கஞ்சா விற்பனையும் ரகசியமாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் குறிப்பிட்ட கடைக்கு சென்று எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு முனுசாமிதான் காரணம் என்று கொலையாளிகள் கருதியதாக தெரிகிறது. இதனாலேயே அவர்கள் முனுசாமியை கொலை செய்திருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாகவும் போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
பழைய இரும்பு வியாபாரி முனுசாமிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவர்களில் முனுசாமியின் மகனுக்கு நேற்று பிறந்த நாளாகும். மகன் பிறந்த நாளில் முனுசாமியை கொன்று விட்டார்களே என அவரது உறவினர்கள் கண்ணீர் வடித்தனர். இக்கொலை சம்பவம் முனுசாமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X