என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
வீடியோ கேம்கள், ஸ்மார்ட் போன்களுக்கு உங்கள் குழந்தைகள் அடிமையா?
- 1,226 பேரிடம் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.
- ஆய்வின் போது பல கேள்விகள் கேட்கப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில் செல்போன் ஒருவருடைய வாழ்க்கையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. செல்போன் பயன்பாட்டால் சில சமயங்களில் நன்மையும், சில சமயங்களில் விபரீதங்களும் ஏற்படுகின்றன.
இந்நிலையில், வீடியோ கேம்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையான குழந்தைகள் எதிர்காலத்தில் மனநோய்க்கு ஆளாக நேரிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், இளமைப் பருவத்தில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகப் பயன்பாட்டால் ஒரு நபர் 23 வயதை அடையும் போது சித்தப்பிரமை, பிரமைகள், மாயத்தோற்றங்கள் மற்றும் 'வினோதமான யோசனைகள்' கொண்டுள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
ஆராய்ச்சியின் போது, பங்கேற்பாளர்கள் துன்புறுத்தும் எண்ணங்கள், வினோதமான அனுபவங்கள் மற்றும் புலனுணர்வு அசாதாரணங்களை அனுபவித்திருக்கிறீர்களா என்பதை தீர்மானிக்க கேள்விகள் கேட்கப்பட்டன. பதில்களை ஆராய்ந்து, இளமைப் பருவத்தில் வீடியோ கேம்களை அதிகம் விளையாடுவது 3-7 சதவீதம் அதிகமான மனநோய் அனுபவங்களுடன் தொடர்புடையது என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.
1997 மற்றும் 1998 க்கு இடையில் பிறந்த 1,226 பேர்களிடம் நடத்திய தரவுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த ஆய்வு, ஜமா மனநல மருத்துவம் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்