என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்திய பகுதியில் நுழைய முயன்ற பாகிஸ்தான் ஆளில்லா விமானம்- துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியது எல்லைப் பாதுகாப்பு படை
Byமாலை மலர்7 May 2022 8:53 PM GMT (Updated: 7 May 2022 8:53 PM GMT)
ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டிய நிலத்தடி சுரங்கப்பாதையை எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டறிந்த மூன்று நாட்களுக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானம் ஏவப்பட்டுள்ளது.
ஜம்மு:
ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லையில் இருந்து இந்திய பகுதியை நோக்கி நேற்றிரவு 7.25 மணியளவில் பாகிஸ்தானை சேர்ந்த ஆளில்லா விமானம் ( ட்ரோன்) ஒன்று பறந்து வருவதை கண்ட எல்லைப் பாதுகாப்புப் படையினர் பல ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த ஆளில்லா விமானம் பாகிஸ்தான் பக்கம் திரும்பி சென்றதாகவும் எனினும் அந்த விமானத்தில் இருந்து எந்த பொருளாவது வீசப்பட்டதா என்பதை உறுதிபடுத்த தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாக ஜம்மு எல்லைப்புற பிஎஸ்எஃப் அதிகாரி ஜெனரல் எஸ்பி சந்து தெரிவித்துள்ளார்.
ஆளில்லா விமானம் பறந்து வந்த முழுப் பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தின் சக் பகிரா பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்பு படையினர்
எல்லை தாண்டிய நிலத்தடி சுரங்கப்பாதையை கண்டு பிடித்து அழித்தனர்.
இது நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானம் ஏவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...பொது இடங்களில் பெண்கள் முழுவதுமாக பர்தா அணிய வேண்டும்- தலிபான் ஆணை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X