search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கின்னஸ் சாதனை படைத்த மணிப்பூர் வாலிபர் நிரஞ்ஜோய் சிங்.
    X
    கின்னஸ் சாதனை படைத்த மணிப்பூர் வாலிபர் நிரஞ்ஜோய் சிங்.

    ஒரு நிமிடத்தில் 109 புஷ்-அப் எடுத்து மணிப்பூர் வாலிபர் கின்னஸ் சாதனை

    மணிப்பூர் இளைஞர் நிரஞ்ஜோய் சிங்கின் கின்னஸ் சாதனையை மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ பாராட்டியுள்ளார்.

    இம்பால்:

    மணிப்பூரை சேர்ந்தவர் நிரஞ்ஜோய் சிங். 24 வயதான இவர் ஏற்கனவே விரல் நுனியில் அதிக முறை புஷ்-அப் எடுத்து கின்னஸ் சாதனை படைத்திருந்தார்.

    இந்த நிலையில் வாலிபர் நிரஞ்ஜோய் ஒரு நிமிடத்தில் விரல் நுனியில் 109 முறை புஷ்- அப்கள் எடுத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

    அவர் தனது 105 புஷ்-அப் என்ற பழைய சாதனையை தற்போது முறியடித்து புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார். இம்பாலில் உள்ள ஆஸ்டெக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால் இந்த சாதனை நிகழ்ச்சி நடந்தது.

    மணிப்பூர் இளைஞர் நிரஞ்ஜோய் சிங்கின் கின்னஸ் சாதனையை மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஒரு நிமிடத்தில் அதிக புஷ்-அப்கள் (விரல்நுனி) செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மணிப்பூர் வாலிபர் நிரஞ்ஜோய் சிங்கின் அசாத்தியமான சக்தியை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அவரது சாதனைக்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×