search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பேனர்களை அகற்றி வாகனங்களில் ஏற்றும் காட்சி
    X
    பேனர்களை அகற்றி வாகனங்களில் ஏற்றும் காட்சி

    தேர்தல் நடத்தை விதிகள் அமல் - லக்னோவில் அரசியல் கட்சிகளின் பேனர்கள் அகற்றம்

    5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்கள் நடத்தப்படும் என, தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

    இதையடுத்து, உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் அரசியல் கட்சிகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த கட்-அவுட்டுகள், பேனர்கள், போஸ்டர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றத் தொடங்கினர். சாலையோரம் உள்ள பிரமாண்ட பேனர்களை அகற்றி, வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். 
    Next Story
    ×