search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அசோக் கெலாட்
    X
    அசோக் கெலாட்

    ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா பாதிப்பு

    ஒமைக்ரான் வைரஸ் அவ்வளவு அச்சுறுத்தலாக இல்லை என்ற அனுமானத்தில், பொதுமக்கள் பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள் என்று அசோக் கெலாட் கூறியிருந்தார்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் உள்ள அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அசோக் கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால்  பிரச்சனை இல்லை என்றும், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்டு, கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அசோக் கெலாட் கேட்டுக்கொண்டுள்ளார்.

    முன்னதாக, அசோக் கெலாட் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ஒமைக்ரான் வைரஸ் அவ்வளவு அச்சுறுத்தலாக இல்லை என்ற அனுமானத்தில், பொதுமக்கள் பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். கொரோனாவின் பிற வகைகளைப் போலவே ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு ஏற்படும் உடல்நல பிரச்சனைகளும் தீவிரமானதாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர், என்ற தகவலையும் கெலாட் பகிர்ந்திருந்தார்.
    Next Story
    ×