என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்6 Jan 2022 3:47 PM GMT (Updated: 6 Jan 2022 3:47 PM GMT)
ஒமைக்ரான் வைரஸ் அவ்வளவு அச்சுறுத்தலாக இல்லை என்ற அனுமானத்தில், பொதுமக்கள் பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள் என்று அசோக் கெலாட் கூறியிருந்தார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் உள்ள அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அசோக் கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் பிரச்சனை இல்லை என்றும், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்டு, கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அசோக் கெலாட் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, அசோக் கெலாட் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ஒமைக்ரான் வைரஸ் அவ்வளவு அச்சுறுத்தலாக இல்லை என்ற அனுமானத்தில், பொதுமக்கள் பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். கொரோனாவின் பிற வகைகளைப் போலவே ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு ஏற்படும் உடல்நல பிரச்சனைகளும் தீவிரமானதாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர், என்ற தகவலையும் கெலாட் பகிர்ந்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X