என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
காதைப் பிளக்கும் ஸ்பீக்கர் சத்தம்... ஆத்திரத்தில் பக்கத்து வீட்டுக்காரரை அடித்துக் கொன்ற வாலிபர்
Byமாலை மலர்9 Dec 2021 5:23 PM GMT (Updated: 9 Dec 2021 5:23 PM GMT)
ஸ்பீக்கர் சத்தத்தை குறைக்க முடியாது என சுரேந்திரகுமார் கூறியதால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பை மல்வானி நகரில் உள்ள அம்புஜ்வாடி பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரகுமார் குன்னர் (40). இவர் நேற்று இரவு தனது வீட்டிற்கு வெளியே ஸ்பீக்கர் வைத்து அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டுள்ளார்.
அப்போது, சுரேந்திரகுமார் வசித்து வரும் வீட்டிற்கு அருகே உள்ள வீட்டில் வசித்து வரும் சாயிப் அலி சந்த் அலி ஷேக் (25) என்ற வாலிபர் அங்கு வந்துள்ளார். அந்த வாலிபர் சுரேந்திரகுமாரிடம் ஸ்பீக்கர் சத்தம் அதிகமாக உள்ளது எனவும், ஒலி அளவை குறைத்து வைக்கும்படியும் கேட்டுள்ளார். ஆனால், ஸ்பீக்கர் சத்தத்தை குறைக்க முடியாது என சுரேந்தர் கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சுரேந்திர குமாரை சாயிப் அலி கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், அவரை கீழே தள்ளி தலையை தரையில் மோதி உள்ளார். சாயிப் அலி தாக்கியதில் சுரேந்திர குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
உடனடியாக, அக்கம்பக்கத்தினர் சுரேந்திரகுமாரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சாயிப் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X