என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்
Byமாலை மலர்8 Dec 2021 6:52 AM GMT (Updated: 8 Dec 2021 6:52 AM GMT)
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த இருக்கிறார்கள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்.
நாகாலாந்தில் சுரங்கத்தில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பிய தொழிலாளர்களை பயங்கரவாதிகள் என நினைத்து எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள், அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 13 பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதன்பின் அசாம் ரைபிள் முகாம் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது வீரர்கள் வன்முறை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யும்போது, ஒருவர் உயிரிழந்தார். மேலும், சம்பவத்தின்போது பொதுமக்கள் தாக்குதலில் ஒரு வீரர் பலியானார்.
இந்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. உயர் விசாரணை குழு அமைப்பட்டு இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட இருக்கிறது.
இந்த நிலையில் உயிரிழந்த பொதுமக்கள் குடும்பத்தினருக்கு போதுமான அளவு இழப்பீடு வழங்குவது குறித்தும், ஆயுதப்படைக்கான அதிகாரம் குறித்தும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வலியுறுத்த இருக்கிறார்கள்.
இன்று ஐந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள். அமித் ஷாவை சந்திக்க இருக்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X