search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உலக எய்ட்ஸ் தினம்
    X
    உலக எய்ட்ஸ் தினம்

    இன்று உலக எய்ட்ஸ் தினம் - பிரமாண்ட மணல் சிற்பத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய கலைஞர்

    எய்ட்ஸ் நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்று நோயாகக் கருதப்படுகிறது.
    பூரி:

    உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

    எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988-ல் நடைப்பெற்ற எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

    1981-ம் ஆண்டிலிருந்து 2007-ம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லட்சங்களுக்கு மேல். மற்றும் 2007-ம் ஆண்டு வரை 332 லட்சம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வந்தனர். இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாகக் கருதப்படுகிறது. 2004-ம் ஆண்டு உலக எய்ட்ஸ் பிரசாரம் ஒரு சுதந்திர சங்கமாக மாறியது. 

    இந்நிலையில்,  இன்று உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் பிரமாண்ட விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார். 

    Next Story
    ×