search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 4,677 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

    கேரளாவில் தற்போது வரை 49,459 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக, அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    கேரளா மாநில கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்த அறிக்கையை, அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 4,677 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,632 பேர் குணமடைந்த நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கேரளாவில் இதுவரை நோய் தொற்றில் இருந்து 50,35,384 பேர் குணமடைந்த நிலையில் 39,125 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தற்போது 49,459 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 56,588 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×