என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாப் மாநில பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000: கெஜ்ரிவால் வாக்குறுதி
Byமாலை மலர்22 Nov 2021 10:43 AM GMT (Updated: 22 Nov 2021 10:43 AM GMT)
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு பெண்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கிறது. டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சி அடுத்ததாக உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலத்திலும் வலுவாக காலூன்ற விரும்புகிறது.
இதனால் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். நேற்று உத்தரகாண்ட் சென்றிருந்த நிலையில், இன்று பஞ்சாப் சென்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மோகாவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘நாங்கள் 2022-ல் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படும். ஒரு குடும்பத்தில் மூன்று பெண்கள் இருந்தால், மாதந்தோறும் 3 ஆயிரம் பெறலாம். இது உலகின் மிகப்பெரிய பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டமாக இருக்கும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X