search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு பணியில் வீரர்கள்
    X
    பாதுகாப்பு பணியில் வீரர்கள்

    மணிப்பூரில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்- ராணுவ அதிகாரி உள்ளிட்ட 7 பேர் பலி

    பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் மாவட்டம் தேஹங் அருகே, அசாம் ரைபிள் படையினர்  சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் அசாம் ரைபிள் படையின் கட்டளை அதிகாரி விப்லவ் திரிபாதி, அவரது மனைவி, 8 வயது மகன் மற்றும் 4 வீரர்கள் என மொத்தம் 7 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் மணிப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். 

    அசாம் ரைபிள் படையினர் மீது கோழைத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
    Next Story
    ×